சிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு.
Page 1 of 1
சிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு.
*சிறுநீர்
சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்
கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம்
வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய்
பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர
உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
* சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக
பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர்
அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை
அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள்
உண்டாகின்றது.
* சிறுநீரக கற்களை வெளியேற்ற
மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு
மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.
* வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.
* வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக்
கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம்.
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில்
சேர்த்துக் கொள்ளவேண்டும்.
* வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க
உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள்,
ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த
மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.
* உடலைக் குளிர்ச்சியடையவைக்கும்
தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக்
குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. <
உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Similar topics
» போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் சட்டவிரோத மருந்து பரிசோதனை – அதிர்ச்சி தகவல்
» இஸ்ரேலிய போதைப் மருந்து கடத்தல்காரரை கைது செய்யவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது:கோவா காவல்துறை
» இஸ்ரேலிய போதைப் மருந்து கடத்தல்காரரை கைது செய்யவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது:கோவா காவல்துறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum