தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"

Go down

"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"  Empty "நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"

Post by முஸ்லிம் Wed Dec 07, 2011 8:04 pm

ஓரிறையின் நற்பெயரால்

நாத்திகம்

பிறிதொருவரின் கொள்கையை தவறென்று வாதிட்டால் அதற்கு மாற்றமாக தான் கொண்ட
கொள்கை குறித்த இலக்கணத்தை மிக தெளிவாக வரையறை செய்திருக்க வேண்டும்.
அதனடிப்படையில் இறை பின்பற்றுதலை எதிர்க்கும் நாத்திகம் இறை மறுப்புக்கான
ஒரு வரைவிலக்கணத்தை இதுவரை ஏற்படுத்த வில்லையென்பதை விட தான் நிராகரிக்கும்
இறைக்குறித்துக்கூட ஒரு தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை. விக்கிபீடியா நாத்திகம் குறித்து இவ்வாறு கூறுகிறது


நாத்திகம் -கடவுள் பற்றிய எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல்
அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மறுக்கும் ஒரு
கொள்கையாகும்.


பொதுவாக இறை மறுப்பை அடிப்படையாக கொண்டாலும் இறைமறுப்பு என்றால் என்ன
என்பதை வரையறை செய்வது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன.அதாவது, இறை
என்றால் என்ன என்பதை வரையறை செய்வதில் குழப்பம் இருப்பதால், இறைமறுப்பு
என்பதை வரையறை செய்வதிலும் குழப்பம் வருகிறது. இறை என்றால் தொன்மங்கங்களில்
வரும் கடவுள்களா, அல்லது மெய்யியலில் வரையறை செய்யப்படும் கருத்துருவா,
அல்லது இயற்கைச் சுட்டும் வேறுபெயரா என்ற பல விதமான கருத்துருக்கள் உள்ளன.

...
ஒரு
கொள்கைக்கு மாற்றமாக உருவாகும் நேர் எதிர் கொள்கை தனக்கென ஒரு உறுதியான
நிலைப்பாட்டை இதுவரை வைத்திருக்காதது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே..! இன்னும்
இதில் வேடிக்கையென்னவென்றால் நாத்திகம் குறித்து கூறுகையில் எங்கெணும்
பகுத்தறிவு என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை., ஆனால் இறை மறுப்பை பேசும்
நாத்திகர்களுக்கு தமிழகத்தில் பகுத்தறிவாளர்கள் என குறியீடு இருப்பது தான்
வருத்தத்திற்குரியது.,

நீண்ட காலமாக நாத்திக பார்வையில் விரியும் செந்திற காட்சி இஸ்லாத்தின்
வெண்மையை பொய்மையாக்க குறை கண்டு காழ்ப்புணர்ச்சியை யூனிக்கோடில்
கக்கிக்கொண்டிருக்கிறது.,இஸ்லாமிய வெறுப்புக்கு தெளிவான மறுப்பு அழகாய்
சொல்லப்பட்ட போதிலும் கடவுளை விமர்சிக்கும் நாத்திகர்கள் இதுவரையிலும்
நாத்திகம் குறித்து உரையாட வாய் திறப்பதில்லை .ஆகவே அன்புள்ளம் கொண்ட இணைய
வாழ் பெருமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்...


நாத்திகரா நீங்கள்..?
Good!..
உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்., கீழ்க்கண்ட ஆத்திக பதிவர்கள்
உங்களோடு நாத்திகம் குறித்து நாகரிமான முறையில் உரையாட
காத்திருக்கிறார்கள்., அவர்களின் நாத்திக
ம் குறித்த சந்தேக பார்வையை நீங்களும் பாருங்கள்., உங்கள் பார்வையில் நாத்திகம் உண்மையென்றால் அதுக்குறித்து உரையாட வாருங்கள்.,



"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"  5786785-digital-illustration-of-question-mark-sign-in-colour-background




"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"

மேலும் நாத்திகம் குறித்த
சந்தேகங்கள்...
பார்வைகள்...
எண்ணங்கள்..


"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"  Wave


"மனிதர்க்கு பகுத்தறிவு என்ற சுயமாக சிந்தித்துணரும் மூளையை இறைவன் கொடுத்து, தன்மூலம் மனிதர் தன்னை (இறைவனை) உணர்ந்து,
தன் தூதர்கள் மூலம் தரப்பட்ட சட்டங்களுக்கு அடிபணித்து ஒழுகி,

வழங்கப்பட்ட கிருபைகளுக்கு தனக்கு நன்றி தெரிவித்து,

இவ்வுலகில் இறையச்சத்துடன் வாழ்கின்றனரா" என்று சோதிக்க நாடுகிறான், இறைவன்..!

ஆறாவது
அறிவாகிய பகுத்தறிவை பயன்படுத்தி இறைவனை பகுத்துணர வேண்டிய மனிதர்களில்
வெகு சிலர், எதோ பார்த்த்து உணரும் ஓரறிவு பிராணிகள் போல...'கண்ணால்
கண்டால்தான் நம்புவேன்' என்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் கடவுள் விஷயத்தில் பகுத்தறிவையே பயன்படுத்தாத இவர்கள்,

தங்களை தாங்களே பகுத்தறிவாதிகள் என்றும் சொல்லிக்கொள்கின்றனர்.

...என்றும் உங்கள் அன்புள்ள சகோ.,

~முஹம்மத் ஆஷிக் - citizen of world~

Mohamed Ashik Habib Mohamed.



~முஹம்மத் ஆஷிக்_citizen of world~
mohaashik[at]gmail.com






"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"  Aasik
நாத்திகம் என்றால் என்ன???....

கடவுளை மறுப்பது என்று விளக்கம் சொல்கின்றார்கள் நாத்திகர்கள். எப்படி
மறுக்க முடியும்?? தர்க்கரீதியான காரணங்கள் இருக்கவேண்டுமல்லவா??. காரணம்
கேட்டால் அறிவியலை நோக்கி கைநீட்டுகின்றார்கள் நாத்திகர்கள். ஆச்சர்யம்.
ஆம் நிச்சயம் ஆச்சர்யமான ஒன்றுதான். ஏனென்றால், ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள்
இறைநம்பிக்கையாளர்களாக இருப்பதாக பிரபல பெர்க்கிலி பல்கலைகழக தளம்
கூறுகின்றது. அறிவியல் இறைவனை மறுப்பதாக இருந்தால், எப்படி ஆயிரக்கணக்கான
விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையாளர்களாக இருக்க முடியும்???. இதற்கு
நாத்திகர்கள் என்ன பதில் வைத்திருக்கின்றார்கள்?



அதுபோல,
எந்த அறிவியலை வைத்து இறைவனை மறுக்கின்றார்களோ, அதே அறிவியலை வைத்து தான்,
"இந்த உலகம் தற்செயலாக தோன்றியிருக்க முடியாது, இதற்கு பின்னால் ஒரு
அறிவார்ந்த சக்தி இருக்கின்றது" என்று நம்புபவர்களாக இருக்கின்றனர் பல
விஞ்ஞானிகள்.



ஆக, அறிவியல் துணைக்கொண்டு இறைவனை மறுப்பது நிச்சயம் புரியாத புதிராகவே உள்ளது.


ஒருசில
நாத்திகர்கள் உணர்வுரீதியாக இறைவனை மறுக்கின்றனர். "உலகில் இவ்வளவு
பிரச்சனை நடக்கின்றதே...அதனை போக்க இறைவன் வரவில்லையே. அதனால் இறைவன்
இல்லை"....இம்மாதிரி வாதங்கள் எப்படி இறைவனை மறுக்கும்?. உதவி செய்யவில்லை
என்றால் இறைவன் இல்லையென்று ஆகிவிடுமா??. 'இறைவன் என்றால் இப்படிதான்' என்ற
அளவுக்கோலை இவர்களுக்கு யார் கொடுத்தது???






உங்கள் சகோதரன்,

ஆஷிக் அஹ்மத் அ




எதிர்க்குரல்
aashiq.ahamed.14[at]gmail.com


===============================================================

"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"  Gu

*நாத்திகம் மறுக்கும் கடவுளுக்கு இலக்கணம்..?


*பொதுவாக,
இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களாகிய நாங்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும்
மார்க்கப் போதனைப்படி ஏவல்/விலக்களை பின்பற்றுகிறோம் இஸ்லாமல்லாத ஏனைய
மதங்களை பின்பற்றுவோர் தங்களது வாழ்வுமுறையே அவர்களது மதத்தின் படி (சரியோ/
தவறோ) பின்பற்றுகிறார்கள்., எந்த மத வழிமுறைகளையும் பின்பற்றா நீங்கள்
எதன் அடிப்படையில் வாழ்வை அமைத்துள்ளீர்கள்., குறிப்பாக "ஒருவனுக்கு
ஒருத்தி" என்ற திருமண பந்தத்தை எந்த நாத்திக சட்ட்த்தில் எடுத்தீர்கள்..?



*ஒருவன் ஏன் இறை மறுப்பாளானாக இருக்க வேண்டும்..?
G u l a m

இறை நாடினால் இனியும் சந்திப்போம்...


நான் முஸ்லிம்
gulamdhasthakir[at]gmail.com

===============================================================


"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"  CarbonNanoforms

நாத்திகர்களின் பிரதான ஆதாரமாகிய பரிணாமம் என்பது பொய் என்று சமீப
காலத்தில் வெளிச்சம் போட்டு காட்டபடுகிறது. இருப்பினும் நாத்திக
கொள்கையினால் மக்களுக்கு உள்ள ஆபத்துக்களை விளங்கி கொள்ள வேண்டும்.




இவ்வுலகில்
பல மத கொள்கைகள் இருந்தாலும் அவற்றின் அடிப்படை பிற மனிதர்களை கொல்லாதே,
தவறு செய்யாதே என்பதே. அப்படி தவறுகள் செய்தால் தண்டனை, நரகம் என்பதே இந்த
கொள்கைகளில் போதிக்கப்படும் பிரதான விஷயங்கள். இந்த தண்டனைக்கு
பயந்துகொண்டே பலவகையான குற்றங்கள் நடைபெறுவதில்லை.



கடவுளே
இல்லை என கூறும் நாத்திகர்கள் இவ்வகையான குற்றங்களின் பக்கம் செல்ல
மாட்டார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. இவர்களுடைய கொள்கையே உலகில்
உள்ள கொள்கைகளில் மோசமான கொள்கை என்பதற்கு இவ்வுலகில் நடந்த, நடக்கும்
சம்பவங்களே சாட்சி.



இவ்வுலகில்
பெரிய தவறு பிற மனிதனை கொலை செய்வது. அதிக மக்களை கொன்று குவித்தவன்
யாரென்று அனைவரும் அறிந்ததே, ஹிட்லர், அனைத்து யூதர்களையும் அழித்தொழிக்க
வேண்டும் என்ற கொள்கை கொண்டவன். பிறப்பால் ஒரு கிறித்துவனாக இருந்தும்
கடவுள் நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்தான்.



வெள்ளை காலர் குற்றங்கள் (White collar crime) என்பதை
பற்றி அறிந்திருப்பீர்கள், குற்ற உணர்வு இல்லாமல் மெத்த படித்த
மேதாவிகளால் செய்யப்படும் வரி ஏய்ப்பு, திருட்டு, கொள்ளை, சட்ட விரோதமாக
பணம் ஈட்டல் மற்றும் சைபர் குற்றங்கள். அமெரிக்க வணிக அமைச்சரவையின் 1996 ன் அறிக்கையின் படி வெள்ளை காலர் குற்றங்களால் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தின் மதிப்பு 400பில்லியன்
டாலர்கள். மேலும் இந்த குற்றங்களினால் ஏற்படும் இழப்பு அதிகரிந்து தான்
செல்கிறது. ஏனெனில் இப்படிப்பட்ட குற்றங்கள் மிகவும் சாமர்த்தியமான
முறையில் செய்யபடுகின்றன, குற்றங்கள் புரிபவர்களை கண்டறிவது என்பது
அரசாங்கத்திற்கே சவாலாக உள்ளது. என்னதான் மறைவாக செய்தாலும் நமக்கு மேலே
ஒருவன் பார்த்து கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் மனிதர்களுக்குள் இல்லாமல்
இந்த வெள்ளை காலர் குற்றங்களை எப்படி குறைக்க முடியும் என்பதற்கு
நாத்திகர்கள் பதில் தருவார்களா?



மேலும்
தனி மனித ஒழுக்கம் சம்பந்தமான குற்றங்களை எந்த அரசாங்கத்தாலும்
கட்டுபடுத்த முடியாது அவற்றிக்கு முக்கியம் கடவுள் நம்பிக்கை மட்டுமே,
மனிதன் பயப்படுவது தப்பு செய்தால் கடவுள் தண்டனை கொடுத்துவிடுவார்
என்பதற்கோ, கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகர்கள் யாரை பார்த்து பயப்பட
வேண்டும்?



இதுபோல
பல, இந்த நாத்திக கொள்கையினால் தனி மனித ஒழுக்கம் கெட்டு குற்றங்களும்
குழப்பங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை அனைவரும் அறிவர்.



Faisal
கார்பன் கூட்டாளி

carbonfriend[at]gmail.com








==============================================================









"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"  Payanikkum+Paathai
1)
உலகில் காணப்படும்/பேசப்படும் ஒவ்வொன்றையும் அறிவியல் ரீதியாக மட்டுமே
நிரூபிக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் உங்கள் மனைவி, மக்கள்,
குடும்பத்தார் அனைவரும் உங்களை நேசிக்கிறார்கள் என்றால், அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?



2) விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியாத எத்தனையோ விஷயங்கள்பகுத்தறிவுப் பூர்வமானதாக இருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா?


3) கடவுளின் பெயரால் மக்கள் சுயமாக நடத்தும் அனாச்சாரங்கள்/அக்கிரமங்கள்/சமூக அவலங்களை வைத்து 'கடவுளே இல்லை' என்று முடிவு செய்வது எந்த வகையான பகுத்தறிவு?


4)
'கடவுள்' என்ற சூப்பர் பவர் இருக்கிறான் என்று சொல்வது மூடத்தனம் என
சொல்லிக் கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு கற்சிலைகளை உண்டாக்குவதும், அதற்கு
மாலை அணிவித்து மரியாதை செய்வதும் மட்டும் பகுத்தறிவுதானா?



5)
பகுத்தறிவின் ஊற்றாக தங்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள், காலம் முழுதும்
கருப்புச் சட்டையே கதி என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதில் உள்ள‌ அறிவியல் தத்துவம்தான் என்ன?



6)
நேற்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்த விஷயங்களை 'விஞ்ஞானக்
கண்டுபிடிப்பு' என அறிவிக்கும்போது ஏற்றுக்கொள்ளும் நீங்கள், அதே விஷயத்தை
14 நூற்றாண்டுகளுக்கு முன் தெளிவாக சொல்லப்பட்டிருந்தும் அதை மட்டும்
ஏற்றுக்கொள்ள மறுப்பது உங்கள் பகுத்தறிவுக்கு உட்பட்டதா?



7)
பூமி உருண்டை வடிவமானது என்பதையும் ஒவ்வொரு கோள்களும் அதன் துணைக்
கோள்களும் தன்னைத் தானே சுழன்றுக் கொண்டே சுற்றி வருகின்றன என்பதையும்,
அவற்றின் ஈர்ப்பு விசை குறித்து அறிவித்து தந்த விஷயங்களையும், இன்றைய
விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வரும்/அந்த‌ விஞ்ஞானிகளைக் கூட வியப்படையச்
செய்த இன்னும் பற்ப‌ல விஷயங்களை அன்றைக்கே முஹம்மது நபி(ஸல்) அவர்கள்
கூறியதை வைத்தும், 'இது முஹம்மது நபியின் சொந்தக் கூற்று
அல்ல' என்றும்'முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மற்ற யாரும்
அன்றைய மக்களின் விஞ்ஞான அறிவைக் கொண்டு இவ்வளவு துல்லியமாக நிச்சயம் கூற
முடியாது' என்றும், 'அது முக்காலத்தையும் அறிந்துள்ள பேராற்றல்
மிகுந்த/மகத்தான‌ இறைவனின் வார்த்தைதான்'என்றும் பகுத்தறிவைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களாகிய
நாங்கள் நம்புகிறோம். விஞ்ஞானம் முன்னேறி இராத அந்தக் காலக் கட்டத்தில்
இவற்றையெல்லாம் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் எப்படிக்கூற முடிந்தது
என்பதற்கு, கடவுளை மறுக்கும் உங்களின் அறிவியல் பூர்வமானபதிலென்ன?



8) ' '"'பரிணாம
வளர்ச்சி'யென கற்பனையாக உருவாக்கப்பட்ட‌ டார்வின் தத்துவம் 'பொய்'
என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் அதிக அளவில் பெருகிய பிறகும், அதையே மீண்டும்
மீண்டும் உங்கள் வாதத்திற்கு ஊன்றுகோலாக பயன்படுத்திக் கொண்டிருப்பதும்
பகுத்தறிவுதான் என்கிறீர்களா?"




அன்புடன்,

உங்கள் சகோதரி,

அஸ்மா.




பயணிக்கும் பாதை
costblog[at]gmail.com


=============================================================






"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"  Basi

ஏனைய உயிரின தொடர்ச்சியின் விளைவாக மனிதன் உருவானான் என்றால் ஏன் மனிதன்
பரிணாமம் அடைந்து வேறு நிலைக்கு இன்னும் மாற வில்லை? ஏனெனில் சூழ்
நிலைக்கு தகுந்தவாறு ஒரு உயிரினம் மெல்ல மெல்ல மாற்றமடைவதே பரிணாமம். ஆக
ஏனைய அஃறிணை உயிரினங்களின் மாற்றத்தை விட அறிவு மிகுந்த மனித உயிரி வாழும்
சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றமடைய வேண்டியது அவசியமான ஒன்று., அஃது
மாற்றடைவதற்கான அறிகுறீகள் கூட ஏற்படவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று..!




N.H. ABDUL BASITH

"You can't satisfy all the people with your wealth, but satisfy them with a cheerful face and a good character" - PROPHET MUHAMMAD (S.A.W)




வழிகாட்டி
basith27[at]gmail.com





===============================================================================




"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"  Flower_drawing
இன்று
நாத்திகர்களாக அடையாளப்படுத்துவோரில் பெரும்பாலானோர் இஸ்லாத்தைப்பற்றி
அறைகுறையாக அறிந்துகொண்டு உளறிக்கொட்டுகிறார்களே தவிர தங்கள் கொள்கை என்ன?
அது எவ்வாறு இஸ்லாத்தை விட சிரப்பாக உள்ளது? என்பதை
குரிப்பிடத்தவறுகின்ரனர். இவர்கள், தங்கள் கொள்கையைவிட இஸ்லாம்
கீழ்த்தரமானது என்பதை நிரூபிக்கத்துணிந்துவிட்டாலே இவர்களது வண்டவாளங்கள்
அனைத்தும் வெளியாகிவிடும். எனவே இவர்களது கொள்கையும் சேர்த்து இவர்களது
இஸ்லாம் தொடர்பான புரிதலிலுள்ள கோளாறுகளையும் தோலிருத்துக்காட்ட நாம்
அல்லாஹ்வின் அருளால் தயாராகவே இருக்கிறோம்.



-Mohamed Ihsas

இஸ்சாஸ் ஓன்லைன்
mohamedihsas786[at]gmail.com


==============================================================


"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"  Flower_drawing


உலகத்தில்
மதம் மற்றும் கடவுள் போன்ற கொள்கைகளை நம்பாமல் போனால், இவ்வுலகில்
நடக்கும் பிரச்சனைகளுக்கு மனிதர்கள் எவ்வாறு தீர்வு காணுவர்? அதாவது
தீர்வுகள் ஏதும் இல்லாத பட்சத்தில் யாருக்கு எந்த தீஓர்வு சரியெனபடுகின்றதோ
அதையே அவர் தீர்வாக எடுத்துக் கொள்வர். அதனால் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்
தீர்வு வராது. சரி அப்படியே அவரவருக்கு பிடித்த தீர்வையே வைத்துக்
கொண்டாலும் அதை பின்பற்றுபவர்களின் அளவுகோல் என்ன?


அதாவது தமிழ் கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால்
அவன் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்வான், ஆந்திர கலாச்சாரத்தில்
ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் ஆந்திர முறைப்படி திருமணம்
செய்து கொள்வான். தமிழ் நாட்டு பகுத்தறிவாதிக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற
கோட்பாட்டில் நம்பிக்கை இருக்கலாம். ஆந்திர பகுத்தறிவாதிக்கு நம்பிக்கை
இல்லாமல் போகலாம். இப்போது தமிழ் நாட்டு பகுத்தறிவாதி ஆந்திர
பகுத்தறிவாதியை திருமணம் செய்து கொண்டால் பகுத்தறிவாதிகளுக்குள் பிரச்சனை
வருமா? வராதா?




அடுத்து தமிழ் நாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு பகுத்தறிவாதி Living
together கலாச்சாரத்தை பற்றி என்ன முடிவு சொல்வான். அது நன்று என்று
கூறுவானா? அல்லது தீமை என்று கூறுவானா? தீமை என்று சொன்னால் என்ன காரணம்
சொல்வான்? ஓரினப்புணர்ச்சி பற்றி பகுத்தறிவாதிகளின் முடிவு என்ன?



இந்தியாவில்
சொத்து விவகாரங்களில் அவர்கள் எந்த சட்டத்தை பின்பற்றுவார்கள்? விவாகரத்து
போன்ற விஷயங்களில் அவர்களின் நிலைபாடு என்ன? விவாகரத்து பண்ணினால் just
like that விட்டுவிடுவார்களா? அல்லது பாதிக்கப்பட்டவருக்கு உதவித்தொகை
கொடுக்க வேண்டுமா? விவாகரத்து செய்வதற்கு என்ன காரணங்கள் சொல்லலாம்? அதன்
அளவுகோல் என்ன? அதை எவ்வாறு வழிவகுத்தார்கள்.



இது
போன்ற மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எந்த பகுத்தறிவாதிக்கு
எந்த சட்டம் தன் மன்சாட்சிக்கு சரியன படுகின்றதோ அதை செய்தால், கண்டிப்பாக
பிரச்சனைகளுக்கான சரியான தீர்வாக பகுத்தறிவாதிகளின் சட்டம் இருக்காது,
தவிர இது மேலும் குழப்பங்களையும், சச்சரவுகளையுமே ஏற்படுத்தும். மதங்கள்
குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று கூக்குரலிட்ட போலி பகுத்தறிவாதிகளே,
முதலில் வாழ்க்கை வாழ்வதற்கு நீங்கள் அமைத்த கொள்கைகள் என்ன என்பதை
கூறுங்கள். பின்னர் கடவுளை பற்றி பேசலாம்.

தோழைமையுடன்
அபு நிஹான்





ராஜகிரி ஹாஜா மைதீன்
hajamydheen[at]gmail.com


=====================================================



"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"  Rajin
நாத்தீகரா நீங்கள்? அப்போ இந்த கேள்விகளெல்லாம் உங்களை பார்த்துதான்..
இந்த
பிரபஞ்சம்,இந்த பூமி,அதில் உள்ள உயிரினங்கள்(மனிதன்
உட்பட),அதுவல்லாது,உயிர் வாழத்தேவையான நீர்,காற்று ஒளி,இவைகளின் வடிவமைப்பு
என ஆதி முதல் அந்தம் வரை அத்துனையும் இயற்கையாகவே உருவானதாக
கருதுகிறீர்களா???



உங்கள்
வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் இயற்கையாக உருவானது என சொன்னால் நம்பி
விடுவீர்களா??ம்ம்ஹும் இல்லை..இதை யாராவது உருவாக்கி இருக்க வேண்டும் என
எதை வைத்து ஆணித்தரமாக சொல்கிறீர்கள்?



ஆம்!
பகுத்தறிவு...அல்லவா?எந்த ஒரு பொருளும் ஒரு படைப்பாளி இல்லாது தானாக
வந்துவிடாது என்ற அறிவு.வீடல்ல,ஒரு குருவிக் கூடானாலும்,எறும்பு தங்கும்
புற்றானாலும்,அதை ஒருவர் உருவாக்காமல் வந்து விடுவதில்லை என்பதில் திண்ணமாக
இருக்கும் நீங்கள்....முழு மனித சமுதாயமும் முயன்றாலும்
முடிந்திடாத,கற்பனைக்கும் எட்டிவிடாத டிஸைனில் இந்த உலகத்தை ஒரு படைப்பாளன்
இல்லாது தானாக உருவாகிவிட்டது என வாதிடுவது விந்தையாகவும்,கருத்துமுரணாகவும்,பின் முட்டாள்தனமாகவும் இருக்கிறதே!



நீங்கள்
சொல்லலாம்,வீடு உட்பட என் வீட்டில் இருக்கும் அத்துனையும் மனிதன் உருவாக்க
அதை நான் நேரடியாக கண்டிருக்கிறேன்,அதனால் படைப்பாளி இல்லாமல் வந்திருக்க
முடியாது என சொல்கிறேன் என்று,..சரிதான்..வீடு கட்டும் போது நீங்கள்
பார்த்ததால் நம்புகிறீர்கள்...



அதுபோல
இவ்வுலகம் படைக்கப்படும் போது குத்துக்கால் போட்டு,கண்ணத்தில் கைவைத்து
உக்காந்து நான் பார்க்கவில்லை அந்த ஒரே காரணத்தால் நம்பவில்லை என்கிறீர்கள்
சரிதானே!



இயற்கையாகவேதான்,இந்த
பூமி 100% பெர்ஃபெக்‌ஷனுடன் வந்துவிட்டது என உங்களால் ஏற்றுக்கொள்ள
முடிகிறதா???ஒன்றும் இல்லை..கையில் பத்துவிதமான பொருட்களை
வைத்துக்கொள்ளுங்கள்..ஒவ்வொன்றும் உங்களின் மேசையில் இன்ன இன்ன
இடத்தில் இன்னின்னவாறு இருக்க வேண்டும் என முடிவு செய்து கொள்ளுங்கள் பின்
அதை மேசையில் சிதரவிட்டுவிடுங்கள்... அவையாவும் தாங்கள் விரும்பிய
பெர்ப்க்‌ஷனை பூர்த்தி செய்யும் சதவிகிதம் எத்தனை என நீங்களே
யூகித்துக்கொள்ளவேண்டியதுதான்...அது ஒன்றில் இருந்து ஐந்து
சதவிகிதத்தை கூட எட்டமுடியாது என்பது உறுதி..இதுதான் நீங்கள் சொல்லும்
இயற்கையால் கொடுக்கப்பட முடிந்த பெர்ஃபெக்‌ஷன்...நீங்கள்
விரும்பிய,அல்லது,குறைந்த பட்ச ஒழுங்கை எட்டவேண்டும் என்றால் கூட உங்களின்
கைவைக்கப்படாமல் அங்கு ஒன்றும் நடக்காது.



அப்படி
இருக்க இவ்வுலகில் இருக்கும் அத்துனையும் முழுமைபெற்றும்,அதில் ஒரு
நேர்த்தியுடனும் இருக்க,அதுவோ இயற்கையாக வந்துவிட்டது என சொல்வது உங்களின்
அறிவை நீங்களே ஏமாற்றிக்கொள்ளும் காரியம் இல்லையா??



ஒரு முறை முழு உலகையும் விழிவிரித்து திறந்த மனதுடன் பாருங்கள்.எத்தனை ரம்யமான படைப்பு,,,மாஷாஅல்லாஹ்...ஒவ்வொன்றும் தெரிவு செய்யப்பட்ட,வடிவமைப்பில் உச்சம் பெற்ற,படைப்பு....எங்கிருந்து வந்துவிட்டன இவை???



உதாரணத்திற்கு ஒன்றை பார்ப்போம்.
நீர்???இப்படியான
ஒரு திரவத்தை மனிதன் காண்பதற்கு முன்புவரை சிந்தித்திருக்க
முடியுமா?உலகில் மனிதன் உண்டாக்கிய அத்துனை விலைமதிப்புமிக்க
பானங்கள்,நிறமற்ற சுவையற்ற எளிய நீரின் சுவையை விஞ்ச முடிந்ததா??இதுவும்
இயற்கை என்றால்..இந்த நீர் ஏன் ஒரு அமிலமாக உருவாகி இருக்ககூடாது?..ஏன்
வேறுவிதமான அடர்த்தியில் வெளியாகி இருக்ககூடாது...



மாசுக்களால்
நிறைந்த உலகத்தில் மாசுமறுவற்று கண்ணாடிபோல் எப்படி உண்டானது...இந்த
தன்மையும் தானாக வந்துவிட்டதா?இவ்வாறு எப்படி எப்படியோ இருந்திருக்க
வேண்டிய நீர்..ஏன் தனிச்சிறப்பு மிக்க இத்தகைய குணாதிசியங்களை கொண்டதாக
இருக்க வேண்டும்?இதை உலகில் உள்ள பிற உயிரினங்கள் பயன்படுத்தும்,அதனால் இப்படித்தான் நீர் இருக்க வேண்டும் என இயற்கை முடிவு செய்துவிட்டதோ???

இயற்கை
என்ற அறிவற்ற எந்திரத்தில் இருந்து வெளியாகும் இந்த திரவம் இத்தனை
தன்மைகளை கொண்டிருக்கவேண்டும் என்ற நோக்க சிரத்தை யாருடையது?இத்தனை
குவாலிட்டி,இத்தனை பெர்ஃபெக்‌ஷன் யாருடையது???

ஒரு
வேலை எல்லாம் சரியாக உருவாகி நீர் மட்டும் கரியமிலமாக இந்த இயற்கையில்
இருந்து,இயற்கையாக வெளியாகி இருப்பின்..மனிதன் அதை உண்டுதான் வாழ்ந்திருக்க
வேண்டுமா???..இல்லை வெவ்வேறு விதமாக இயற்கையாக உருவான
நீரானது...உயிரினங்களின் தேவையறிந்து பரிணாம வளர்ச்சி??? கண்டு இன்று
இத்தனை தெள்ளியதாக இருக்கிறதா சகோதரர்களே!!!



இது போல இயற்கை படைப்பு ஒவ்வொன்றையும் சிந்தித்தாலே போதுமே!
நீங்கள்
இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக்கொள்ள போதுமான ஆதாரங்கள்
கிடைத்துவிடுமே!அப்ரம் வருவோம்,அந்த இறைவன் யார்?யாராக இருக்க
முடியும்?என்ற கேள்விகளுக்கெல்லாம்...



முன்முடிவுகளை தூர எறிந்துவிட்டு திறந்த மனதுடன் சிந்திப்போம்...


நிச்சயமாக வானங்கள்,பூமி ஆகியவற்றின் படைப்பிலும்,இரவும்,பகலும் மாறி மாறி வருவதிலும்,அறிவுடையோருக்கு திடமான அத்தாட்சிகள் பல இருக்கின்றன

அல்குர்ஆன் - 3:90


அன்புடன்
ரஜின்

சன்மார்க்கம்

askabt.islam[at]gmail.com



முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"  Empty Re: "நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"

Post by முஸ்லிம் Thu Dec 08, 2011 4:00 pm

====================================================================
"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"  ImagesCA1NEW3D


யாதுமே இல்லாதிருந்து பின்பு யாதுமே
இல்லாதிருந்து பின்பு Cosmic agg ஆக உருவாகி அதனுள் ஏற்பட்ட வெப்ப
அழுத்தத்தின் காரணமாக வெடித்துச் சிதறியதில் இருந்து (Big Bang) இன்று வரை
இக்கணப்பொழுது வரை இப்பிரபஞ்சம் விரிந்துகொண்டேதான் செல்கின்றது. ஒளி
வினாடிக்கு 3 இலட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்கின்றது. ஆனால் இப்பிரபஞ்சம்
ஒளியையும் விட வேகமாக விரிவடைகின்றது என்பதனை விஞ்ஞானிகள்
கண்டறிந்துள்ளனர். இதனை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

“(எவரது உதவியுமின்றி) எம் கைகளினாலே நாம் வானத்தை அமைத்தோம். மேலும் நாம் அதனை விசாலப்படுத்துகின்றோம்.” ( 51:47 )
கடவுள் மறுப்புவாதியின் பெயர் பகுத்தறிவுவாதி இந்த பெயரே பகுத்தறிவுக்கு புறம்பானது?
கடவுள் உண்டென வாதிடுபவன் தான் உண்மையான பகுத்தறிவுவாதி!
கடவுள்
மறுப்பாளர்கள் தன் கொண்ட கொள்கையின் பால் ஒரு தீர்க்கமான முடிவை இதுவரை
உலகிற்க்கு சமர்ப்பிக்கவே இல்லை கடவுள் மறுப்பு வாதம் ஒரு பொய்யான வாதம்
என்பதை நாம் நிறும்பிக நான் கடமைப்பட்டுள்ளேன்



எனெனில்
நான் முஸ்லிம் இஸ்லாம் கூறும் ஒறிறையின் அடிமை உலகம் ஏற்றுக்கொள்ளும்
அறிவார்ந்த கருத்துக்களுக்கு பதிலலிக்க காத்திருக்கிறேன் பின்னூட்டங்களில்
சான்றுகளின் அடிப்படையில் வாதிடுங்கள் கற்பனையை புறந்தள்ளிவிட்டு

கடவுள் மறுப்புவாத தோழமைத்தேடி.
ஒ.பி.கலில் ரஹ்மான் எஸ்.பி.பட்டினம்

kaleelsms.com

kaleelsms[at]gmail.com









படைத்தவன் நாடினால் பகுத்தறிவாளர்களின் பட்டியல் தொடரும்...
















இறைவன் நாடினால் இத்தளத்திலோ அல்லது மேற்கண்டவர்களின் எந்த தளத்திலோ நாத்திகம் குறித்து உரையாட பதிவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
இங்குள்ளவர் யாவரும் முகவரி தந்தே கருத்து தந்திருக்கிறார்கள்., போலி பெயரில் ஆநாகரிக பின்னூட்டமிடாமல் உங்கள் எழுத்துக்களோடு சேர்த்து உண்மையையும் கொண்டு வாருங்கள்.,
அல்லாஹ் நன்கு அறிந்தவன்




"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"  FIVE

முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum