தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கஷ்மீர் மாநில மனித உரிமைகள் குழுவின் உத்தரவின் பேரில் மூத்த போலிஸ் அதிகாரி கைது

Go down

கஷ்மீர் மாநில மனித உரிமைகள் குழுவின் உத்தரவின் பேரில் மூத்த போலிஸ் அதிகாரி கைது  Empty கஷ்மீர் மாநில மனித உரிமைகள் குழுவின் உத்தரவின் பேரில் மூத்த போலிஸ் அதிகாரி கைது

Post by முஸ்லிம் Thu Dec 22, 2011 6:01 pm

ஸ்ரீநகர்:ஜம்மு-கஷ்மீர் மாநில மனித
உரிமைகள் ஆணையம் 2007-ல் காணாமல் போன உள்ளூர் இளைஞர் குறித்த சிறப்பு
விசாரணை குழுவின் பரிந்துரை அடிப்படையில் மூத்த போலிஸ் அதிகாரி ஒருவரை கைது
செய்ய உத்தரவிட்டுள்ளது.

தெற்கு கஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டம்
ஜாடூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் நசீர் அகமது மிர் என்பவர் கடந்த 2007-ம்
வருடம் பேருந்து நிலையம் அருகில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால்
ஆட்டோவில் கடத்தப்பட்டார்.

இவ்வழக்கு குறித்து இவரது தந்தை குல்
முகம்மது மிர் மாநில உயர்நீதிமன்றத்தில் 2008 மற்றும் 2009-ல் மனு மற்றும்
அதற்கான மேல் முறையீடு செய்தபோது மூன்று வாரக்கால கெடுவிற்குள்
கடத்தப்பட்டவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் கோரியிருந்தார் ஆனால்
அனந்தநாக் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர்
“கடத்தப்பட்டவரை கண்டுபிடிக்க முடியவில்லை” என கூறி விசாரணையை முடித்து
விட்டார்.

இதனால் இவ்வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து
தகவல் மற்றும் ஆதாரங்களையும் பறிமுதல் செய்யவும் ஆணைக்குழு பரிந்துரைக்கு
ஒத்துழைக்க தவறியதற்காக தலைமை செயலக காவல்துறை துணை கண்காணிப்பாளரை கைது
செய்யவும் கடந்த செவ்வாயன்று மாநில மனித உரிமைகள் ஆணையம் அதிரடியாக
உத்தரவிட்டுள்ளது.


கஷ்மீர் மாநில மனித உரிமைகள் குழுவின் உத்தரவின் பேரில் மூத்த போலிஸ் அதிகாரி கைது  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum