நிர்வாக திறமை இந்திய அதிகாரிகளிடம் குறைவு: ஹாங்காங் ஆய்வறிக்கை!
Page 1 of 1
நிர்வாக திறமை இந்திய அதிகாரிகளிடம் குறைவு: ஹாங்காங் ஆய்வறிக்கை!
ஆசிய நாடுகளின் அரசு அமைப்பு முறை, அதிகாரிகளின் நிர்வாக செயல்பாட்டு திறன் குறித்து ஆய்வு செய்து வரும் ஹாங்காங் நாட்டின் அரசியல், பொருளாதார ஆய்வு நிறுவனம்,
"இந்தியாவின் ஆட்சி நிர்வாகப் பணியில் உள்ள அதிகாரிகள் ஆசியாவில் நாடுகளில் உள்ள மற்ற எந்த நாட்டைக்காட்டிலும் திறமை குறைந்தவர்களாக உள்ளனர்" என தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ”இந்தியாவைப் பொறுத்தமட்டில் அந்நாடு சந்தித்து வரும் ஊழல், உள்கட்டமைப்பு பற்றாக்குறை உள்ளிட்ட முக்கியமான பிரச்னைகள் அனைத்துக்கும் அதிகாரிகளின் திறன் குறைவே காரணம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த ஆய்வறிக்கையில் திறமையற்ற அதிகாரிகள் உள்ள பட்டியலில் 10 புள்ளிகளுக்கு 9.21 புள்ளிகள் பெற்று இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து வியத்நாம் (8.54), இந்தோனேசியா (8.37), பிலிப்பின்ஸ் (7.57), சீனா (7.11), மலேசியா (5.89), தென் கொரியா (5.87), ஜப்பான் (5.77), தைவான் (5.57), தாய்லாந்து (5.25), ஹாங் காங் (3.53), சிங்கப்பூர் (2.25) ஆகிய நாடுகள் வருகின்றன.
"இந்தியாவில் உள்ள பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் எந்த ஒரு பிரச்னையையும் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று தீர்வு காண்பதை விடுத்து சம்பந்தப்பட்ட தரப்புடன் சமரசம் காண்பதையே விரும்புகின்றன. இதற்காக அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பினை வளர்த்து கொண்டு அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி ஆதாயம் அடைபவர்களாகவும் இருக்கின்றனர்.
தாங்கள் எடுக்கும் முடிவு எதிர்பார்த்த பலனை கொடுக்காதபோது அதற்குத் தார்மிகப் பொறுப்பேற்கும் மனப்பக்குவமும் இந்திய அதிகாரிகளுக்கு இல்லை. தங்களது முடிவு தவறாக இருந்தாலும் அதை நியாயப்படுத்துவதில்தான் முனைப்புகாட்டுகின்றனர்" என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்தியாவின் ஆட்சி நிர்வாகப் பணியில் உள்ள அதிகாரிகள் ஆசியாவில் நாடுகளில் உள்ள மற்ற எந்த நாட்டைக்காட்டிலும் திறமை குறைந்தவர்களாக உள்ளனர்" என தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ”இந்தியாவைப் பொறுத்தமட்டில் அந்நாடு சந்தித்து வரும் ஊழல், உள்கட்டமைப்பு பற்றாக்குறை உள்ளிட்ட முக்கியமான பிரச்னைகள் அனைத்துக்கும் அதிகாரிகளின் திறன் குறைவே காரணம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த ஆய்வறிக்கையில் திறமையற்ற அதிகாரிகள் உள்ள பட்டியலில் 10 புள்ளிகளுக்கு 9.21 புள்ளிகள் பெற்று இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து வியத்நாம் (8.54), இந்தோனேசியா (8.37), பிலிப்பின்ஸ் (7.57), சீனா (7.11), மலேசியா (5.89), தென் கொரியா (5.87), ஜப்பான் (5.77), தைவான் (5.57), தாய்லாந்து (5.25), ஹாங் காங் (3.53), சிங்கப்பூர் (2.25) ஆகிய நாடுகள் வருகின்றன.
"இந்தியாவில் உள்ள பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் எந்த ஒரு பிரச்னையையும் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று தீர்வு காண்பதை விடுத்து சம்பந்தப்பட்ட தரப்புடன் சமரசம் காண்பதையே விரும்புகின்றன. இதற்காக அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பினை வளர்த்து கொண்டு அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி ஆதாயம் அடைபவர்களாகவும் இருக்கின்றனர்.
தாங்கள் எடுக்கும் முடிவு எதிர்பார்த்த பலனை கொடுக்காதபோது அதற்குத் தார்மிகப் பொறுப்பேற்கும் மனப்பக்குவமும் இந்திய அதிகாரிகளுக்கு இல்லை. தங்களது முடிவு தவறாக இருந்தாலும் அதை நியாயப்படுத்துவதில்தான் முனைப்புகாட்டுகின்றனர்" என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar topics
» இந்திய வீடுகளில் 18 ஆயிரம் டன் தங்கம்
» இந்திய தூதருக்குச் சவூதியில் வரவேற்பு!
» தவறான இந்திய வரைபடம்: அமெரிக்கா நீக்கியது
» இந்திய புத்தகங்களை அரபியில் மொழிபெயர்க்க திட்டம்
» இந்திய ஹஜ் பயணிகளுக்கு மேலும் சலுகைகள்: எஸ்.எம்.கிருஷ்ணா
» இந்திய தூதருக்குச் சவூதியில் வரவேற்பு!
» தவறான இந்திய வரைபடம்: அமெரிக்கா நீக்கியது
» இந்திய புத்தகங்களை அரபியில் மொழிபெயர்க்க திட்டம்
» இந்திய ஹஜ் பயணிகளுக்கு மேலும் சலுகைகள்: எஸ்.எம்.கிருஷ்ணா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum