தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பூவோடு சேர்ந்த நாரும் .....................

Go down

பூவோடு  சேர்ந்த  நாரும் .....................    Empty பூவோடு சேர்ந்த நாரும் .....................

Post by srivai.khader Thu Jul 18, 2013 12:41 pm

பூவுக்குள் வாசம் இயற்கையின் காட்சி
பூமிக்குள் சேர்த்திடும் பிறந்ததின் சாட்சி

பல நிறம் , பல ரகம் பூக்களில் புது ரகம்
பல மணம் , பல நிலை கொடிகளில் பிறப்பிடம்

உதயத்தின் பல நிலை உதிர்த்திடும் இதழ்களை
ஆண்டுக்கொரு முறை பூக்களின் பூப்பினம்

மென்மைக்கு ஒரு ஒப்பினம் மிருதுவான உடலினம்
பிறந்த பெருமையை இன்னும் பூமிக்கு சேர்த்திடும்

வாசம் மாறாத இதன் குணம் என்றுமே நறுமணம்
வாகையோடு மங்கையர் கூந்தலில் மலரும் பெருமிதம்

தொடுக்கும நாருக்கும் மணம் பெறும் தனி குணம்
பூவால்தான் இது புனிதப்படும் பூமியில் பொழுதினம்

நாருக்கு இல்லை என்றும் தனி வாசம் பூமியில்
பூவோடு சேர்ந்ததால் மணம் கொள்ளும் அனு தினம்

மனிதரில் சிலரும் பூவொத்த குணம் உண்டு
ஒருவரையே நாடி தினம் கதைகளும் நடந்திடும்

தன் திறமையை நம்பாத திருந்தாத இவர்கள் எல்லாம்
ஒருவரையே சார்ந்து உரிமையோடு வாழ்வார்கள்

பூவோடு இணைந்து கொண்டதால் நாருக்கும் வாசம்
நாராக தனித்து நின்று மணக்க முடியுமா ? நாசம் !

பூவோடு சேர்ந்தால்தான் நாருக்கும் மணம் உண்டு
நாரும் மணக்காது எப்போதும் தனித்து நின்று

பூவாக நறுமணத்துடன்
-ஸ்ரீவை.காதர்-
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 4837
Points Points : 26
வயது வயது : 62

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum