தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நாமும் அப்படியா .................

Go down

நாமும் அப்படியா ................. Empty நாமும் அப்படியா .................

Post by srivai.khader Sun Jul 28, 2013 2:49 pm

நாமும் அப்படியா ...........................

பெற்றோர்களை முன் வைத்து நம் பெருமை
நாமும் அப்படியா நினையுங்கள் உண்மை

அவர்களின் சிறு செயலையாவது நாம்
இனியும் சிறப்பாக செய்ய முடியுமா பாரு

முடிந்தால் அதை செய்து விட்டு நீயும்
இனி முறையாக பெருமை பேசு

முதலில் யாரையும் மதிக்க கற்று கொள் –நம்
மனதெல்லாம் மமதை இது முடியுமா ?

நீ மட்டும் என்ன சிறந்தவனா என்ன
பிறரை மட்டம் தட்டி பேசும் நிலையில்

கொடுத்து விட்டு குறை சொல்லுவது ஏன் ?
இதற்க்கு கொடுக்காமல் இருப்பதே மேல்

பகடுக்காக நீயே கொடுத்துவிட்டு – இனி
அவர்களை அடிமையாக இருக்க எண்ணாதே

உறவுகளை ஒதுக்க நினைத்தால் – நீயே
ஒதுக்கப்படுவதாக அறிந்து கொள் முன்னே

ஒரு சார்பாக எப்போதும் பேசாதே –இதில்
உண்மைகள் மறைந்து போகும் தாங்காதே

பிறர் குறைகளை ஆராய்வதை இனி நிறுத்து
உன் செயல்களை இன்னும் முறை படுத்து

கோபத்தை குறைத்து கொள்ள பாரு – இதை
பிறர் மீது காட்ட அது முறையாகாது

நாம் ஒருவரை அணுகும் முறைதான்- அது
அவர்களை நம்முடன் அணுக செய்யும் வழி

பொறாமை கொள்வதை கொஞ்சம் நிறுத்து
உன் பெருந்தன்மை நிலையை உயர்த்து

உறவோடு உரிமை கொள்ள உறுதி ஏடு
சிறப்பாகும் உன் செயலும் இறுதி வரை

நிகரில்லா உலகில் நம் செயல்,கொள்கை
மறை வழியில் வாழ்ந்து நிறைவு பெறும்

மறை வழி ஒரு வழி !
நாமும் அதன் வழி !!

-ஸ்ரீவை.காதர்-
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 4836
Points Points : 26
வயது வயது : 62

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum