ஹதீஸா கூட்டுப்படுகொலை:அமெரிக்க ராணுவ வீரனுக்கு சிறைத் தண்டனை வழங்ககூடாது – நீதிபதி
Page 1 of 1
ஹதீஸா கூட்டுப்படுகொலை:அமெரிக்க ராணுவ வீரனுக்கு சிறைத் தண்டனை வழங்ககூடாது – நீதிபதி
வாஷிங்டன்:24 ஈராக்கிய அப்பாவி குடிமக்களை
அநியாயமாக சுட்டுக்கொன்ற அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு படைக்கு தலைமை
தாங்கிய ஃப்ராங்க் உட்டரிக்கிற்கு சிறைத்தண்டனை வழங்க கூடாது என நீதிபதி
சிபாரிசுச் செய்துள்ளார்.
கலிஃபோர்னியாவில் கேம்ப் பென்டில்டன்
நீதிபதி லெஃப்.கர்னல் டேவிட் ஜான்சனின் சிபாரிசை ராணுவத்தின் சென்ட்ரல்
கமாண்ட் அங்கீகரிக்கும் என கருதப்படுகிறது.
ஹதீஸா கூட்டுப் படுகொலை தொடர்பாக ஃப்ராங்
உட்டரிக் மீது சுமத்தப்பட்ட கடுமையான சட்டப் பிரிவுகளை நீக்கிய நீதிமன்றம்
கடமையை நிறைவேற்ற தவறிய வழக்கில்தான் விசாரணையை நடத்தியது.
வழக்கின் இதர பிரிவுகளை நீக்கலாம் என்ற
ஒப்பந்தத்தின் அடிப்படையில் உட்டரிக் கடமையை தவறிய குற்றத்தை
ஒப்புக்கொண்டார். உட்டரிக்கின் ராணுவ ரேங்கை குறைக்க சிபாரிசுச் செய்த
நீதிபதி விவாகரத்து பெற்ற மூன்று சிறு குழந்தைகளின் தந்தை என்பதால்
சம்பளத்தை முடக்க வேண்டாம் என தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் உட்டரி உள்பட
எட்டுபேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், உட்டரிக் தவிர ஏனைய அனைவரும்
விடுதலைச் செய்யப்பட்டனர்.
2005 நவம்பர் பாக்தாதிற்கு அருகே
ஹதீஸாவில் உட்டரிக்கின் தலைமையிலான அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தினர்
இரண்டு வீடுகளில் நுழைந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேரை அநியாயமாக
சுட்டுக் கொன்றனர்.
உடல் தளர்ந்து வீல் சேரில் நடமாடிய நபரின்
தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலைச் செய்தனர் இந்த கொடூரர்கள்.
ராணுவம் இதனை முதலில் மறுத்த போதிலும் ஊடகங்கள் ஆதாரத்துடன் வெளியிட்டதைத்
தொடர்ந்து வழக்கில் சிக்கியது. எத்தனை பேரை கொடூரமாக கொலைச் செய்தாலும்
அவர்கள் தம் சொந்த நாட்டவர்கள் என்றால் அமெரிக்காவின் நீதி எப்படி
இருக்கும் என்பதற்கு ஹதீஸா கூட்டுப் படுகொலை வழக்கு ஓர் உதாரணமாகும்.
அநியாயமாக சுட்டுக்கொன்ற அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு படைக்கு தலைமை
தாங்கிய ஃப்ராங்க் உட்டரிக்கிற்கு சிறைத்தண்டனை வழங்க கூடாது என நீதிபதி
சிபாரிசுச் செய்துள்ளார்.
கலிஃபோர்னியாவில் கேம்ப் பென்டில்டன்
நீதிபதி லெஃப்.கர்னல் டேவிட் ஜான்சனின் சிபாரிசை ராணுவத்தின் சென்ட்ரல்
கமாண்ட் அங்கீகரிக்கும் என கருதப்படுகிறது.
ஹதீஸா கூட்டுப் படுகொலை தொடர்பாக ஃப்ராங்
உட்டரிக் மீது சுமத்தப்பட்ட கடுமையான சட்டப் பிரிவுகளை நீக்கிய நீதிமன்றம்
கடமையை நிறைவேற்ற தவறிய வழக்கில்தான் விசாரணையை நடத்தியது.
வழக்கின் இதர பிரிவுகளை நீக்கலாம் என்ற
ஒப்பந்தத்தின் அடிப்படையில் உட்டரிக் கடமையை தவறிய குற்றத்தை
ஒப்புக்கொண்டார். உட்டரிக்கின் ராணுவ ரேங்கை குறைக்க சிபாரிசுச் செய்த
நீதிபதி விவாகரத்து பெற்ற மூன்று சிறு குழந்தைகளின் தந்தை என்பதால்
சம்பளத்தை முடக்க வேண்டாம் என தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் உட்டரி உள்பட
எட்டுபேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், உட்டரிக் தவிர ஏனைய அனைவரும்
விடுதலைச் செய்யப்பட்டனர்.
2005 நவம்பர் பாக்தாதிற்கு அருகே
ஹதீஸாவில் உட்டரிக்கின் தலைமையிலான அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தினர்
இரண்டு வீடுகளில் நுழைந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேரை அநியாயமாக
சுட்டுக் கொன்றனர்.
உடல் தளர்ந்து வீல் சேரில் நடமாடிய நபரின்
தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலைச் செய்தனர் இந்த கொடூரர்கள்.
ராணுவம் இதனை முதலில் மறுத்த போதிலும் ஊடகங்கள் ஆதாரத்துடன் வெளியிட்டதைத்
தொடர்ந்து வழக்கில் சிக்கியது. எத்தனை பேரை கொடூரமாக கொலைச் செய்தாலும்
அவர்கள் தம் சொந்த நாட்டவர்கள் என்றால் அமெரிக்காவின் நீதி எப்படி
இருக்கும் என்பதற்கு ஹதீஸா கூட்டுப் படுகொலை வழக்கு ஓர் உதாரணமாகும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum