டாக்டர்.கலீல் ஜிஸ்தியின் விடுதலைக்காக சோனியா தலையிடவேண்டும்-கட்ஜு
Page 1 of 1
டாக்டர்.கலீல் ஜிஸ்தியின் விடுதலைக்காக சோனியா தலையிடவேண்டும்-கட்ஜு
புதுடெல்லி:பல வருடங்களாக இந்திய சிறையில்
அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் டாக்டர்.கலீல் ஜிஸ்தியை விடுதலைச்
செய்வதற்கு தலையிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ப்ரஸ் கவுன்சில்
தலைவரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை
விடுத்துள்ளார்.
“அஜ்மீரில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜிஸ்தியை விடுதலைச் செய்வதற்கு தங்களிடம் நான் கோரிக்கை விடுப்பதற்கு
காரணம் மனிதநேயத்தின் அடிப்படையிலாகும். சிறையிலிருந்து விடுதலையானால் அவர்
தனது குடும்பத்தினருடன் கராச்சிக்கு செல்ல உதவும்” என சோனியா காந்திக்கு
எழுதிய கடிதத்தில் கட்ஜு கூறியுள்ளார்.
அரசியல் சட்டத்தின் 72-வது பிரிவின்படி
ஜிஸ்திக்கு மன்னிப்பு அளிக்கவேண்டும் என இவ்வருடம் ஏப்ரலில் தான் பிரதமர்
மன்மோகன்சிங்கிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் கட்ஜு சோனியாவுக்கு
எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கு கடிதம் எழுதும் வேளையில் கட்ஜு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார். பிரதமர் இந்த கோரிக்கையை உள்துறை
அமைச்சகத்தில் ஒப்படைத்த போதிலும் பின்னர் எவ்வித விவரங்களும் கிடைக்கவில்லை.
ராஜஸ்தான் ஆளுநர் சிவராஜ் பாட்டீலுக்கு
இதே கோரிக்கையை முன்வைத்து அனுப்பிய கடிதத்திற்கும் பதில் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து தான் தங்களுக்கு கடிதம் எழுதுவதாக சோனியாவுக்கு எழுதிய
கடிதத்தில் கட்ஜு குறிப்பிட்டுள்ளார்.
80 வயதை தாண்டிய ஜிஸ்தி இனி எவ்வளவு காலம்
வாழ்வார் என்பது தெரியாது. சிறையில் வைத்து அவர் மரணமடைந்தால் அது நமது
நாட்டிற்கு அவமானமாக மாறும். அவரை விடுதலைச் செய்தால் நாட்டின் புகழ்
அதிகரிக்கும். இவ்வாறு கட்ஜு கூறியுள்ளார்.
அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் டாக்டர்.கலீல் ஜிஸ்தியை விடுதலைச்
செய்வதற்கு தலையிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ப்ரஸ் கவுன்சில்
தலைவரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை
விடுத்துள்ளார்.
“அஜ்மீரில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜிஸ்தியை விடுதலைச் செய்வதற்கு தங்களிடம் நான் கோரிக்கை விடுப்பதற்கு
காரணம் மனிதநேயத்தின் அடிப்படையிலாகும். சிறையிலிருந்து விடுதலையானால் அவர்
தனது குடும்பத்தினருடன் கராச்சிக்கு செல்ல உதவும்” என சோனியா காந்திக்கு
எழுதிய கடிதத்தில் கட்ஜு கூறியுள்ளார்.
அரசியல் சட்டத்தின் 72-வது பிரிவின்படி
ஜிஸ்திக்கு மன்னிப்பு அளிக்கவேண்டும் என இவ்வருடம் ஏப்ரலில் தான் பிரதமர்
மன்மோகன்சிங்கிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் கட்ஜு சோனியாவுக்கு
எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கு கடிதம் எழுதும் வேளையில் கட்ஜு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார். பிரதமர் இந்த கோரிக்கையை உள்துறை
அமைச்சகத்தில் ஒப்படைத்த போதிலும் பின்னர் எவ்வித விவரங்களும் கிடைக்கவில்லை.
ராஜஸ்தான் ஆளுநர் சிவராஜ் பாட்டீலுக்கு
இதே கோரிக்கையை முன்வைத்து அனுப்பிய கடிதத்திற்கும் பதில் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து தான் தங்களுக்கு கடிதம் எழுதுவதாக சோனியாவுக்கு எழுதிய
கடிதத்தில் கட்ஜு குறிப்பிட்டுள்ளார்.
80 வயதை தாண்டிய ஜிஸ்தி இனி எவ்வளவு காலம்
வாழ்வார் என்பது தெரியாது. சிறையில் வைத்து அவர் மரணமடைந்தால் அது நமது
நாட்டிற்கு அவமானமாக மாறும். அவரை விடுதலைச் செய்தால் நாட்டின் புகழ்
அதிகரிக்கும். இவ்வாறு கட்ஜு கூறியுள்ளார்.
Similar topics
» டாக்டர் கலீல் ஜிஸ்தியை விடுதலை செய்ய வேண்டும்-மகேஷ் பட்
» கட்ஜு கூறியதில் என்ன தவறு?
» டாக்டர் ஃபஸலுர் ரஹ்மான் ஃபரீதி மரணம்
» அஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாக். டாக்டர் விரைவில் விடுதலை
» இந்திய விசாரணைகளில் குறிவைக்கப்படும் முஸ்லிம்கள் – நீதிபதி மார்கண்டேய கட்ஜு
» கட்ஜு கூறியதில் என்ன தவறு?
» டாக்டர் ஃபஸலுர் ரஹ்மான் ஃபரீதி மரணம்
» அஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாக். டாக்டர் விரைவில் விடுதலை
» இந்திய விசாரணைகளில் குறிவைக்கப்படும் முஸ்லிம்கள் – நீதிபதி மார்கண்டேய கட்ஜு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum