குஜராத் இனப்படுகொலை:முன்னாள் அமைச்சர் ஜடேஜாவிடம் குறுக்கு விசாரணை
Page 1 of 1
குஜராத் இனப்படுகொலை:முன்னாள் அமைச்சர் ஜடேஜாவிடம் குறுக்கு விசாரணை
அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை
புகழ் நரேந்திர மோடியின் அரசில் அமைச்சராக பதவி வகித்த டி.கெ.ஜடேஜா,
குஜராத் இனப் படுகொலையை குறித்து விசாரணை நடத்திவரும் நானாவதி கமிஷன்
முன்பாக ஆஜரானார்.
இனப்படுகொலை நடந்த வேளையில் 2002 பிப்ரவரி
28-ஆம் தேதி மாநிலத்தின் டி.ஜி.பி அலுவலகத்தில் 3 மணிநேரத்தை செலவழித்ததாக
ஜடேஜா கமிஷனிடம் தெரிவித்தார். ஆனால், இவ்வேளையில் போலீசாரின் எந்தவொரு
நடவடிக்கையிலும் தலையிடவில்லை என அவர் கூறினார்.
குஜராத்தில் முஸ்லிம்கள் கூட்டாக
இனப்படுகொலை செய்வதற்காக ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்திய வன்முறை
வெறியாட்டம் தீவிரமடைந்திருந்த பிப்ரவரி 8-ஆம் தேதி காந்திநகரில் டி.ஜி.பி
அலுவலகத்திற்கு ஜடேஜா சென்றுள்ளார்.
நீதிபதிகளான ஜி.டி.நானாவதி, அக்ஷய்
மேத்தா ஆகியோர் உள்ளிட்ட கமிஷன் முன்பு நடந்த குறுக்கு விசாரணையில் ஜடேஜா
இதனை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து மேலும் ஜடேஜா கூறுகையில், “அன்றைய
மாநில உள்துறை இணை அமைச்சராக பதவி வகித்த கோர்டன் ஸதாஃபியின் உத்தரவின்
பெயரிலேயே நான் டி.ஜி.பி அலுவலகத்திற்கு சென்றேன். காலை 11 மணி முதல்
மதியம் 2 மணி வரை நான் டி.ஜி.பி அலுவலகத்தில் இருந்தேன்” என்றார்.
டி.ஜி.பி அலுவலகத்திற்கு சென்ற ஜடேஜா, இனப்படுகொலையில் போலீஸாரின் நடவடிக்கைகளில் தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
போலீஸாரின் பணியில் ஏதேனும் வகையில்
தலையிட்டீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜடேஜா, “மாநில அரசுக்கும்,
போலீசாருக்கும் இடையேயான தகவல் தொடர்பில் ஏற்பட்ட இடைவெளியை சரி
செய்வதற்காக டி.ஜி.பி அலுவலகத்திற்கு
செல்லவேண்டும் என ஸதாஃபி என்னிடம் உத்தரவிட்டார்” என கூறினார்.
அரசிடம் ஒப்படைப்பதற்கான ஏதேனும் தகவல்
டி.ஜி.பி அலுவலகத்தில் இருந்து கிடைத்ததா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
‘இல்லை’ என ஜடேஜா கூறினார்.
குஜராத் இனப்படுகொலை நடந்த வேளையில்
அஹ்மதாபாத்தின் சபர்மதி பகுதியில் இருந்ததாக மொபைல் பதிவுகள் காட்டுவது
குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜடேஜா, “அப்பொழுது, மொபைல் நெட்வர்க்கிங்
வளர்ச்சி அடையாத காலக்கட்டம் என்பதால் இவ்வாறு காண்பிப்பதாக” தெரிவித்தார்.
அஹ்மதாபாத் நகர போலீஸ் கமிஷனர்
பி.சி.பாண்டே, இணை கமிஷனர் எம்.கே.தண்டன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன்
உரையாடியதை அவர் ஜடேஜா மறுத்தார்.
குஜராத் இனப்படுகொலை வழக்கில்
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் முகுல் சிங்லா,
காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் ஹிரலால் குப்தா ஆகியோர் ஜடேஜாவிடம்
குறுக்கு விசாரணையை நடத்தினர்.
ஸதாஃபிக்கு பிறகு நானாவதி கமிஷன் முன்பாக குறுக்கு விசாரணை செய்யப்படும் அன்றைய மோடி அரசின் இரண்டாவது அமைச்சர் ஜடேஜா ஆவார்.
புகழ் நரேந்திர மோடியின் அரசில் அமைச்சராக பதவி வகித்த டி.கெ.ஜடேஜா,
குஜராத் இனப் படுகொலையை குறித்து விசாரணை நடத்திவரும் நானாவதி கமிஷன்
முன்பாக ஆஜரானார்.
இனப்படுகொலை நடந்த வேளையில் 2002 பிப்ரவரி
28-ஆம் தேதி மாநிலத்தின் டி.ஜி.பி அலுவலகத்தில் 3 மணிநேரத்தை செலவழித்ததாக
ஜடேஜா கமிஷனிடம் தெரிவித்தார். ஆனால், இவ்வேளையில் போலீசாரின் எந்தவொரு
நடவடிக்கையிலும் தலையிடவில்லை என அவர் கூறினார்.
குஜராத்தில் முஸ்லிம்கள் கூட்டாக
இனப்படுகொலை செய்வதற்காக ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்திய வன்முறை
வெறியாட்டம் தீவிரமடைந்திருந்த பிப்ரவரி 8-ஆம் தேதி காந்திநகரில் டி.ஜி.பி
அலுவலகத்திற்கு ஜடேஜா சென்றுள்ளார்.
நீதிபதிகளான ஜி.டி.நானாவதி, அக்ஷய்
மேத்தா ஆகியோர் உள்ளிட்ட கமிஷன் முன்பு நடந்த குறுக்கு விசாரணையில் ஜடேஜா
இதனை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து மேலும் ஜடேஜா கூறுகையில், “அன்றைய
மாநில உள்துறை இணை அமைச்சராக பதவி வகித்த கோர்டன் ஸதாஃபியின் உத்தரவின்
பெயரிலேயே நான் டி.ஜி.பி அலுவலகத்திற்கு சென்றேன். காலை 11 மணி முதல்
மதியம் 2 மணி வரை நான் டி.ஜி.பி அலுவலகத்தில் இருந்தேன்” என்றார்.
டி.ஜி.பி அலுவலகத்திற்கு சென்ற ஜடேஜா, இனப்படுகொலையில் போலீஸாரின் நடவடிக்கைகளில் தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
போலீஸாரின் பணியில் ஏதேனும் வகையில்
தலையிட்டீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜடேஜா, “மாநில அரசுக்கும்,
போலீசாருக்கும் இடையேயான தகவல் தொடர்பில் ஏற்பட்ட இடைவெளியை சரி
செய்வதற்காக டி.ஜி.பி அலுவலகத்திற்கு
செல்லவேண்டும் என ஸதாஃபி என்னிடம் உத்தரவிட்டார்” என கூறினார்.
அரசிடம் ஒப்படைப்பதற்கான ஏதேனும் தகவல்
டி.ஜி.பி அலுவலகத்தில் இருந்து கிடைத்ததா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
‘இல்லை’ என ஜடேஜா கூறினார்.
குஜராத் இனப்படுகொலை நடந்த வேளையில்
அஹ்மதாபாத்தின் சபர்மதி பகுதியில் இருந்ததாக மொபைல் பதிவுகள் காட்டுவது
குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜடேஜா, “அப்பொழுது, மொபைல் நெட்வர்க்கிங்
வளர்ச்சி அடையாத காலக்கட்டம் என்பதால் இவ்வாறு காண்பிப்பதாக” தெரிவித்தார்.
அஹ்மதாபாத் நகர போலீஸ் கமிஷனர்
பி.சி.பாண்டே, இணை கமிஷனர் எம்.கே.தண்டன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன்
உரையாடியதை அவர் ஜடேஜா மறுத்தார்.
குஜராத் இனப்படுகொலை வழக்கில்
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் முகுல் சிங்லா,
காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் ஹிரலால் குப்தா ஆகியோர் ஜடேஜாவிடம்
குறுக்கு விசாரணையை நடத்தினர்.
ஸதாஃபிக்கு பிறகு நானாவதி கமிஷன் முன்பாக குறுக்கு விசாரணை செய்யப்படும் அன்றைய மோடி அரசின் இரண்டாவது அமைச்சர் ஜடேஜா ஆவார்.
Similar topics
» குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை: முன்னாள் அமைச்சர் ஜடேஜாவை விசாரணை செய்ய அனுமதி
» குஜராத் இனப்படுகொலை:கண்காணிப்பு தொடரும்- உச்சநீதிமன்றம்
» இனப்படுகொலை-மோடியின் பங்கு குறித்து விசாரணை நடத்தவேண்டும்-அமெரிக்கா
» குஜராத் இனப்படுகொலை:அறிக்கையை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் – எஸ்.ஐ.டி
» குஜராத் இனப்படுகொலை:நீதிக்காக போராட ஸ்ரீகுமாரும், சஞ்சீவ் பட்டும் ஒன்றிணைகிறார்கள்
» குஜராத் இனப்படுகொலை:கண்காணிப்பு தொடரும்- உச்சநீதிமன்றம்
» இனப்படுகொலை-மோடியின் பங்கு குறித்து விசாரணை நடத்தவேண்டும்-அமெரிக்கா
» குஜராத் இனப்படுகொலை:அறிக்கையை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் – எஸ்.ஐ.டி
» குஜராத் இனப்படுகொலை:நீதிக்காக போராட ஸ்ரீகுமாரும், சஞ்சீவ் பட்டும் ஒன்றிணைகிறார்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum