பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க பிஜேபி வலியுறுத்தல்
Page 1 of 1
பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க பிஜேபி வலியுறுத்தல்
புதுடெல்லி: ரஷ்யாவில் பகவத் கீதைக்கு தடை விதிப்பதை
தவிர்க்கும் நடவடிக்கையில் ஒன்றாக, இந்நூலை தேசிய புத்தகமாக மத்திய அரசு
அறிவிக்க வேண்டும் என்று பிஜேபி வலியுறுத்தியுள்ளது.
பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு நூலுக்குத் தடை விதிப்பது தொடர்பாக ரஷ்ய நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்று வருகிறது.
சர்வதேச கிருஷ்ண பக்தி அமைப்பு (இஸ்கான்) நிறுவனர் பக்தி வேதாந்தா சுவாமி
பிரபு பாதா என்பவர் எழுதிய பகவத் கீதை தொடர்பான புத்தகம், ரஷிய மொழியில்
மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நூலில் தீவிரவாதத்தைத் தூண்டும் சாராம்சம் இடம்பெற்றுள்ளதாகவும், அவை
சமூக அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்த சாத்தியம் உள்ளதாகவும் கூறி, ரஷியாவின்
டோம்ஸ்க் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் அந்நாட்டைச்
சேர்ந்த சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை, வரும் 28-ம் தேதிக்கு ரஷ்ய நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த விவகாரம் இந்தியாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிஜேபி உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் இரண்டு நாட்களாக கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்.எம்.கிருஷ்ணா விளக்கம்..
இந்த நிலையில், பகவத் கீதை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று விளக்கம் அளித்தார்.
அப்போது, 'இந்த விவகாரத்தில் தனது எதிர்ப்பினை ரஷ்ய அரசிடம் இந்தியா பதிவு
செய்துள்ளது. மாஸ்கோவில் உள்ள நமது தூதரகம் தலையிட்டு, உரிய நடவடிகைகளை
எடுத்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர்களுடன்
தூதரகம் தொடர்பில் உள்ளது," என்றார்.
இதனை வரவேற்ற மக்களவை எதிர்கட்சித் தலைவரும், பிஜேபி மூத்த தலைவருமான
சுஷ்மா ஸ்வராஜ், இந்த வழக்கில் ரஷ்ய அதிகாரிகளின் நடவடிக்கைகள்
திருப்திகரமானதாக இல்லை என்றார்.
பகதவ் கீதைக்கு தடை விதிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அரசு முனைப்புடன்
செயல்பட வேண்டும் என்ற அவர், இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்
வகையில், பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று
கேட்டுக்கொண்டார்.
தவிர்க்கும் நடவடிக்கையில் ஒன்றாக, இந்நூலை தேசிய புத்தகமாக மத்திய அரசு
அறிவிக்க வேண்டும் என்று பிஜேபி வலியுறுத்தியுள்ளது.
பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு நூலுக்குத் தடை விதிப்பது தொடர்பாக ரஷ்ய நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்று வருகிறது.
சர்வதேச கிருஷ்ண பக்தி அமைப்பு (இஸ்கான்) நிறுவனர் பக்தி வேதாந்தா சுவாமி
பிரபு பாதா என்பவர் எழுதிய பகவத் கீதை தொடர்பான புத்தகம், ரஷிய மொழியில்
மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நூலில் தீவிரவாதத்தைத் தூண்டும் சாராம்சம் இடம்பெற்றுள்ளதாகவும், அவை
சமூக அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்த சாத்தியம் உள்ளதாகவும் கூறி, ரஷியாவின்
டோம்ஸ்க் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் அந்நாட்டைச்
சேர்ந்த சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை, வரும் 28-ம் தேதிக்கு ரஷ்ய நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த விவகாரம் இந்தியாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிஜேபி உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் இரண்டு நாட்களாக கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்.எம்.கிருஷ்ணா விளக்கம்..
இந்த நிலையில், பகவத் கீதை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று விளக்கம் அளித்தார்.
அப்போது, 'இந்த விவகாரத்தில் தனது எதிர்ப்பினை ரஷ்ய அரசிடம் இந்தியா பதிவு
செய்துள்ளது. மாஸ்கோவில் உள்ள நமது தூதரகம் தலையிட்டு, உரிய நடவடிகைகளை
எடுத்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர்களுடன்
தூதரகம் தொடர்பில் உள்ளது," என்றார்.
இதனை வரவேற்ற மக்களவை எதிர்கட்சித் தலைவரும், பிஜேபி மூத்த தலைவருமான
சுஷ்மா ஸ்வராஜ், இந்த வழக்கில் ரஷ்ய அதிகாரிகளின் நடவடிக்கைகள்
திருப்திகரமானதாக இல்லை என்றார்.
பகதவ் கீதைக்கு தடை விதிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அரசு முனைப்புடன்
செயல்பட வேண்டும் என்ற அவர், இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்
வகையில், பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று
கேட்டுக்கொண்டார்.
Similar topics
» லோக்பாலில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு பஸ்வான் வலியுறுத்தல்
» ஆதர் அடையாள அட்டை இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – பிஜேபி
» ரஷியாவில் பகவத் கீதைக்கு தடையில்லை
» தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?
» பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பகவத் கீதை: ம.பி.உயர்நீதி மன்றம் அனுமதி!
» ஆதர் அடையாள அட்டை இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – பிஜேபி
» ரஷியாவில் பகவத் கீதைக்கு தடையில்லை
» தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?
» பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பகவத் கீதை: ம.பி.உயர்நீதி மன்றம் அனுமதி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum