காஸாமீதான முற்றுகைக்கு முடிவு வேண்டும்- 21 சர்வதேச அமைப்புகள் கோரிக்கை
Page 1 of 1
காஸாமீதான முற்றுகைக்கு முடிவு வேண்டும்- 21 சர்வதேச அமைப்புகள் கோரிக்கை
எந்த விதமான நிபந்தனைகளும் இன்றி காஸா மக்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நியாயமற்ற முற்றுகை உடனடியாக நீக்கப்படவேண்டும் என்று 21 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளன.
செவ்வாய்க்கிழமை (30.11.2010) பரிஸ் நகரில் இடம்பெற்ற ஒன்றுகூடலின் பின் மேற்படி அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச ரீதியாக ஏற்படும் அழுத்தங்களின் காரணமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை காஸா மீதான முற்றுகையைச் சற்றே தளர்த்துவது என்பது வெறும் கண்துடைப்பு நாடகம் மட்டுமே என்றும், அத்தகைய நடவடிக்கைகளால் காஸா மக்களின் அன்றாடத் துயர வாழ்வில் எத்தகைய மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றும் கருத்துரைத்துள்ளது.
சர்வதேச அம்னெஸ்டி அமைப்பு, நோர்வேஜியன் அகதிகள் கவுன்ஸில் முதலான அரச சார்பற்ற நிறுவனங்கள் குறிப்பிடுகையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புத் தாக்குதல்களினால் சீர்குலைந்திருக்கும் காஸாவைப் புனர்நிர்மாணம் செய்வதற்குப் போதிய கட்டிடப் பொருட்கள் இன்னுமே காஸாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளன.
காஸா வாழ் மக்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு மிகச் சொற்பளவான வாய்ப்புகளே உள்ளன என்றும் அதைத்தவிர அவர்கள் காஸாவிலிருந்து வெளியேறிச் செல்வதற்குரிய எந்தவித வாய்ப்புகளும் போதியளவு வழங்கப்படவில்லை என்றும் மேற்படி அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்நேரம்
செவ்வாய்க்கிழமை (30.11.2010) பரிஸ் நகரில் இடம்பெற்ற ஒன்றுகூடலின் பின் மேற்படி அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச ரீதியாக ஏற்படும் அழுத்தங்களின் காரணமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை காஸா மீதான முற்றுகையைச் சற்றே தளர்த்துவது என்பது வெறும் கண்துடைப்பு நாடகம் மட்டுமே என்றும், அத்தகைய நடவடிக்கைகளால் காஸா மக்களின் அன்றாடத் துயர வாழ்வில் எத்தகைய மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றும் கருத்துரைத்துள்ளது.
சர்வதேச அம்னெஸ்டி அமைப்பு, நோர்வேஜியன் அகதிகள் கவுன்ஸில் முதலான அரச சார்பற்ற நிறுவனங்கள் குறிப்பிடுகையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புத் தாக்குதல்களினால் சீர்குலைந்திருக்கும் காஸாவைப் புனர்நிர்மாணம் செய்வதற்குப் போதிய கட்டிடப் பொருட்கள் இன்னுமே காஸாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளன.
காஸா வாழ் மக்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு மிகச் சொற்பளவான வாய்ப்புகளே உள்ளன என்றும் அதைத்தவிர அவர்கள் காஸாவிலிருந்து வெளியேறிச் செல்வதற்குரிய எந்தவித வாய்ப்புகளும் போதியளவு வழங்கப்படவில்லை என்றும் மேற்படி அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்நேரம்
![-](https://2img.net/i/empty.gif)
» அடையாளம் தெரியாத கல்லறைகள்:விசாரணை நடத்த மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை
» சஞ்சீவ் பட் சாட்சியாக வேண்டும் – குல்பர்க் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை
» பாலஸ்தீனத்தை உறுப்பினர் நாடாக அங்கீகரிக்க வேண்டும்: அப்பாஸ் கோரிக்கை
» பாரபட்சமான விசாரணையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை
» சிரிய அரசுடன் எதிர்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அரபு லீக் கோரிக்கை
» சஞ்சீவ் பட் சாட்சியாக வேண்டும் – குல்பர்க் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை
» பாலஸ்தீனத்தை உறுப்பினர் நாடாக அங்கீகரிக்க வேண்டும்: அப்பாஸ் கோரிக்கை
» பாரபட்சமான விசாரணையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை
» சிரிய அரசுடன் எதிர்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அரபு லீக் கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum