நாடாளுமன்ற முட்டுக்கட்டை: ரூ.95 கோடி மக்கள் வரிப்பணம் விரயம்! India
Page 1 of 1
நாடாளுமன்ற முட்டுக்கட்டை: ரூ.95 கோடி மக்கள் வரிப்பணம் விரயம்! India
ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சியினரின் பிடிவாதப்போக்கினால் தொடர்ந்து 16வது நாளாக நாடாளுமன்றம் செயல்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மக்கள் வரிப்பணம் சுமார் ரூ.95 கோடி அளவுக்கு வீணாகியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் காமன்வெல்த் முறைகேடு, மும்பை ஆதர்ஷ் முறைகேடு, ஸ்பெக்ட்ரம் முறைகேடு என எதிர்கட்சிகள் அடுத்தடுத்து பிரச்சனைகளை கிளப்பி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்து ஒரு நாள் கூட நாடாளுமன்றம் முறையாக செயல்படவில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் மட்டும் 16வது நாளாக நாடாளுமன்றம் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக் கோரி எதிர்கட்சிகள் எழுப்பும் கோரிக்கையை அரசு ஏற்காததால் இந்நிலை தொடர்கின்றது. சபாநாயகரும் மத்திய அரசும் பலச்சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இன்றும் நாடாளுமன்றம் கூடியவுடன் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இது போன்று அவை அலுவல்கள் நடைபெறாமலேயே மக்கள் வரிப்பணம் சுமார் ரூ.95 கோடி விரயமாகியுள்ளது தெரியவந்துள்ளது. எதிர்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டாலும் உறுப்பினர்கள் அவைக்கு வந்ததாகக் கணக்கிடப்பட்டு அன்றாடப்பணிகள் வழங்கப்படுகின்றன. இது தவிர சபாநாயகர், மக்களைவை மற்றும் மாநிலங்களவைச் செயலாளர்கள், ஊழியர்கள் ஊதியம் என ரூ.95 கோடி செலவாகியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் மக்கள் வரிப்பணம் மேலும் விரயமாகுமே தவிர மக்கள் பிரச்சனைகள் குறித்து உருப்படியான விவாதம் எதுவும் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நேரம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் காமன்வெல்த் முறைகேடு, மும்பை ஆதர்ஷ் முறைகேடு, ஸ்பெக்ட்ரம் முறைகேடு என எதிர்கட்சிகள் அடுத்தடுத்து பிரச்சனைகளை கிளப்பி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்து ஒரு நாள் கூட நாடாளுமன்றம் முறையாக செயல்படவில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் மட்டும் 16வது நாளாக நாடாளுமன்றம் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக் கோரி எதிர்கட்சிகள் எழுப்பும் கோரிக்கையை அரசு ஏற்காததால் இந்நிலை தொடர்கின்றது. சபாநாயகரும் மத்திய அரசும் பலச்சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இன்றும் நாடாளுமன்றம் கூடியவுடன் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இது போன்று அவை அலுவல்கள் நடைபெறாமலேயே மக்கள் வரிப்பணம் சுமார் ரூ.95 கோடி விரயமாகியுள்ளது தெரியவந்துள்ளது. எதிர்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டாலும் உறுப்பினர்கள் அவைக்கு வந்ததாகக் கணக்கிடப்பட்டு அன்றாடப்பணிகள் வழங்கப்படுகின்றன. இது தவிர சபாநாயகர், மக்களைவை மற்றும் மாநிலங்களவைச் செயலாளர்கள், ஊழியர்கள் ஊதியம் என ரூ.95 கோடி செலவாகியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் மக்கள் வரிப்பணம் மேலும் விரயமாகுமே தவிர மக்கள் பிரச்சனைகள் குறித்து உருப்படியான விவாதம் எதுவும் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நேரம்
Similar topics
» மோடியின் உண்ணாவிரத நாடகத்தால் 100 கோடி விரயம்!
» 5 கோடி மக்களுக்கு நீதி செலுத்த முடியாத மோடி எவ்வாறு 125 கோடி மக்களைப் பாதுகாப்பார்?
» ஈராக்கில் 1800 கோடி டாலரை காணவில்லை
» 60 கோடி பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பில்லை-ஐ.நா
» நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி: தடை செய்யப்படுமா?
» 5 கோடி மக்களுக்கு நீதி செலுத்த முடியாத மோடி எவ்வாறு 125 கோடி மக்களைப் பாதுகாப்பார்?
» ஈராக்கில் 1800 கோடி டாலரை காணவில்லை
» 60 கோடி பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பில்லை-ஐ.நா
» நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி: தடை செய்யப்படுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum