பலஸ்தீனர்களைப் பள்ளிவாயிலில் இருந்து விரட்டிய ஆக்கிரமிப்பாளர்கள்
Page 1 of 1
பலஸ்தீனர்களைப் பள்ளிவாயிலில் இருந்து விரட்டிய ஆக்கிரமிப்பாளர்கள்
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் பக்கபலத்தோடு யூத ஆக்கிரமிப்பாளர்கள், நடைபாதைகளில் நடமாடிய பலஸ்தீனர்கள் மீது கற்களையும் வெற்றுப் போத்தல்களையும் எறிந்து, தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனால், அப்பகுதியெங்கும் அல்லோலகல்லோலப்பட்டதோடு, வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்தன.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் இதே பிரதேசத்தில் அமைந்துள்ள இப்றாஹீம் பள்ளிவாயிலில் பகல் நேரத் தொழுகைக்காகச் சென்றிருந்த பலஸ்தீனர்களைப் பள்ளிக்குள் நுழையவிடாமல் தடுத்து, அனைத்து நுழைவாயில்களையும் அடைத்துள்ளனர். 'சனிக்கிழமைகளில் முஸ்லிம்களைத் தொழுகைக்காக அங்கு அனுமதிப்பதற்கில்லை' என்று அதற்குக் காரணம் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் இத் தான்தோன்றித்தனமான நடவடிக்கையை வன்மையாக ஆட்சேபித்த பலஸ்தீனர்கள், 'இப்றாஹீம் பள்ளிவாயில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமே தவிர, யூத மத வழிபாட்டுத்தலம் அல்ல. எனவே, அவர்கள் இப்படியான அடாவடித்தனத்தில் ஈடுபட்டிருப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல' என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நேரம்
Similar topics
» 14 முன்னாள் தாலிபான் தலைவர்களை ஐ.நா கறுப்புப்பட்டியலில் இருந்து நீக்கியது
» பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகளை பிரித்த நார்வே அரசாங்கம்
» பூமி அச்சில் இருந்து ஜப்பான் சில அடிகள் நகர்ந்தது
» முஸ்லிம்களுக்கு சிகிச்சை செய்ததால் பணியில் இருந்து நீக்கப்பட்ட செவிலியர்
» முல்லா உமரை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கியது எஃப்.பி.ஐ?
» பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகளை பிரித்த நார்வே அரசாங்கம்
» பூமி அச்சில் இருந்து ஜப்பான் சில அடிகள் நகர்ந்தது
» முஸ்லிம்களுக்கு சிகிச்சை செய்ததால் பணியில் இருந்து நீக்கப்பட்ட செவிலியர்
» முல்லா உமரை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கியது எஃப்.பி.ஐ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum