இந்தியாவில் தலை தூக்கியுள்ள புதிய பயங்கரவாத இயக்கங்கள்- ப.சிதம்பரம்!
இந்தியாவில் தலை தூக்கியுள்ள புதிய பயங்கரவாத இயக்கங்கள்- ப.சிதம்பரம்!
இந்தியாவில் புதிய பயங்கரவாத இயக்கங்கள் தலைத் தூக்கியுள்ளதாகவும், சமீப காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் இவ்வமைப்புகளுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் முதலமைச்சர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ’பயங்கரவாதம் குறித்து என்.ஐ.ஏ. மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் தினமும் பல புதிய ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். இவை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் புதிய வடிவங்களைக் குறித்து நம்மைத் தட்டி எழுப்புவதாக கருத வேண்டும்’ என்று கூறினார்.
மேலும், இந்தியாவில் புதிய பயங்கரவாத இயக்கங்கள் தலைத் தூக்கியுள்ளதாகவும், சமீப காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் இவ்வமைப்புகளுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இந்த அமைப்புகளின் பெயர்களையோ அல்லது அவற்றின் வடிவங்களையோ வெளிப்படுத்துவதில் அரசுக்கு எவ்வித தயக்கமுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த தீவிரவாதிகளும் அவர்கள் சார்ந்த குழுக்களும் எந்த மதத்தினராக இருந்தாலும் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு உரிய தண்டணைக்குள்ளாக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, மலேகான், சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் காவிக்கும்பலின் தொடர்புகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளியாகிக் கொண்டிருக்கும் வேளையில், மத்திய உள்துறை அமைச்சரின் இந்த கருத்துக்கள் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களுக்கான மறைமுக எச்சரிக்கை என்று அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகின்றது.
இந்நேரம்
» இடதுசாரி தீவிரவாதமே வன்முறை மிகுந்தது: ப.சிதம்பரம்
» ஆப்கான்:அமெரிக்காவின் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவிகள் 50 பேர் பலி
» சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன – ப.சிதம்பரம்
» வலதுசாரி பயங்கரவாதம் ஆபத்தானது:ப.சிதம்பரம் எச்சரிக்கை