இஸ்ரேலுக்குச் செல்லும் எரிவாயு குழாய் தகர்ப்பு!
Page 1 of 1
இஸ்ரேலுக்குச் செல்லும் எரிவாயு குழாய் தகர்ப்பு!
எகிப்திலிருந்து இஸ்ரேலுக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. இதனால் எகிப்திலிருந்து ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் நாட்டிற்கு எரிவாயு கொண்டு செல்வது பாதிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியிலிருக்கும் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டுமென பொது மக்கள் புரட்சி செய்து வருகின்றனர். கடந்த ஜனவரி 25 ஆம் தேதி ஆரம்பமான இப்போராட்டம் இன்று 13 ஆவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
ஆரம்பத்தில் பதவியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என கூறிக்கொண்டிருந்த முபாரக், பொது மக்களின் தொடரும் எதிர்ப்பாலும் சர்வதேச அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையிலும் சிறிது சிறிதாக தன் நிலையிலிருந்து இறங்கி வரஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் பொது மக்களின் போராட்டத்தைக் கலகமாக மாற்ற, முபாரக்கின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் காவல்துறையினர் அமைதியான மக்கள் போராட்டத்தினிடையே புகுந்து கலவரம் ஏற்படுத்த முனைந்தனர். எனினும் மக்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை.
இரு தினங்களுக்கு முன்னர், முபாரக் துணை அதிபராக நியமித்த சுலைமான் மீது கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்நிலையில், எகிப்திலிருந்து இஸ்ரேலுக்குச் செல்லும் எரிவாயு குழாய் அடையாளம் தெரியாத நபர்களால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
இதனால் தொடர்ந்து 13 ஆவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம், அரசால் வன்முறை போராட்டம் என சித்தரிக்கப்பட்டு ஒடுக்கப்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நேரம்
எகிப்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியிலிருக்கும் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டுமென பொது மக்கள் புரட்சி செய்து வருகின்றனர். கடந்த ஜனவரி 25 ஆம் தேதி ஆரம்பமான இப்போராட்டம் இன்று 13 ஆவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
ஆரம்பத்தில் பதவியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என கூறிக்கொண்டிருந்த முபாரக், பொது மக்களின் தொடரும் எதிர்ப்பாலும் சர்வதேச அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையிலும் சிறிது சிறிதாக தன் நிலையிலிருந்து இறங்கி வரஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் பொது மக்களின் போராட்டத்தைக் கலகமாக மாற்ற, முபாரக்கின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் காவல்துறையினர் அமைதியான மக்கள் போராட்டத்தினிடையே புகுந்து கலவரம் ஏற்படுத்த முனைந்தனர். எனினும் மக்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை.
இரு தினங்களுக்கு முன்னர், முபாரக் துணை அதிபராக நியமித்த சுலைமான் மீது கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்நிலையில், எகிப்திலிருந்து இஸ்ரேலுக்குச் செல்லும் எரிவாயு குழாய் அடையாளம் தெரியாத நபர்களால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
இதனால் தொடர்ந்து 13 ஆவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம், அரசால் வன்முறை போராட்டம் என சித்தரிக்கப்பட்டு ஒடுக்கப்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நேரம்
Similar topics
» இஸ்ரேல்-ஐரோப்பா எரிவாயு குழாய் திட்டத்திற்கு துருக்கி அனுமதி மறுப்பு
» ஈரான் எரிவாயு குழாய் திட்டம்: பாகிஸ்தான் வாபஸ் பெற அமெரிக்கா கோரிக்கை
» டெல்லி மஸ்ஜித் தகர்ப்பு - நடந்தது என்ன?
» எகிப்தில் இஸ்ரேல் தூதரகம் தகர்ப்பு: அவசரநிலை பிரகடனம்!
» காஸ்ஸாவுக்கு செல்லும் நிவாரணக்குழுவில் பிரான்சு கப்பல்
» ஈரான் எரிவாயு குழாய் திட்டம்: பாகிஸ்தான் வாபஸ் பெற அமெரிக்கா கோரிக்கை
» டெல்லி மஸ்ஜித் தகர்ப்பு - நடந்தது என்ன?
» எகிப்தில் இஸ்ரேல் தூதரகம் தகர்ப்பு: அவசரநிலை பிரகடனம்!
» காஸ்ஸாவுக்கு செல்லும் நிவாரணக்குழுவில் பிரான்சு கப்பல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum