சொந்த மக்களைக் கொல்லாதீர்கள் - லிபிய மதகுருமார்கள் வேண்டுகோள்
Page 1 of 1
சொந்த மக்களைக் கொல்லாதீர்கள் - லிபிய மதகுருமார்கள் வேண்டுகோள்
லிபியாவில் அதிபர் கடாபி பதவி விலகக் கோரி நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஏறத்தாழ 200 பேர் பலியாகியுள்ளனர். அதிபர் கடாபிக்கு எதிரான போராட்டம் பென்காஷி நகரில் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் பிற நகரங்களான பைதா, டெர்னா, மிஸ்ரதா போன்றவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
லிபியாவில் 65 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
தலைநகர் திரிபோலியில் கடாபிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. பென்காஷி நகரம் போர் நகரம் போல் காட்சியளிக்கிறது. இந்த நகரத்தில்தான் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டதில் 8 வயது சிறுவனும் இருந்ததாக பென்காஷி மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவர் மரியம் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கண்மூடித்தனமாக சுடுவதாக காவல்துறையை மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. லிபியாவின் 50 முஸ்லிம் மதகுருமார்கள் இவ்வாறு சொந்த சகோதர சகோதரிகளைக் கொல்வதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கிடையில் இணையசேவை மற்றும் அலைபேசி சேவைகளை அரசு நிறுத்தி வைத்துள்ளதால் அங்கிருந்து செய்திகள் வருவதிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் லிபியாவுக்குள் நுழைவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நேரம்
லிபியாவில் 65 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
தலைநகர் திரிபோலியில் கடாபிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. பென்காஷி நகரம் போர் நகரம் போல் காட்சியளிக்கிறது. இந்த நகரத்தில்தான் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டதில் 8 வயது சிறுவனும் இருந்ததாக பென்காஷி மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவர் மரியம் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கண்மூடித்தனமாக சுடுவதாக காவல்துறையை மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. லிபியாவின் 50 முஸ்லிம் மதகுருமார்கள் இவ்வாறு சொந்த சகோதர சகோதரிகளைக் கொல்வதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கிடையில் இணையசேவை மற்றும் அலைபேசி சேவைகளை அரசு நிறுத்தி வைத்துள்ளதால் அங்கிருந்து செய்திகள் வருவதிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் லிபியாவுக்குள் நுழைவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நேரம்
Similar topics
» அமெரிக்கா : லிபிய ஆக்கிரமிப்பு
» நேட்டோ தாக்குதலுக்கிடையேயும் தொலைக்காட்சியில் தோன்றிய லிபிய அதிபர்!
» குஜராத்:சொந்த மாநிலத்தில் அகதிகளாக வாழும் 16 ஆயிரம் முஸ்லிம்கள்!
» குவைத்: வெளி நாட்டவருக்கும் 1 மாத சம்பளம் போனஸ் - எம்.பி. வேண்டுகோள் !
» ஹாவர்டு நடவடிக்கை: மறு பரிசீலனை செய்ய சு.சாமி வேண்டுகோள்
» நேட்டோ தாக்குதலுக்கிடையேயும் தொலைக்காட்சியில் தோன்றிய லிபிய அதிபர்!
» குஜராத்:சொந்த மாநிலத்தில் அகதிகளாக வாழும் 16 ஆயிரம் முஸ்லிம்கள்!
» குவைத்: வெளி நாட்டவருக்கும் 1 மாத சம்பளம் போனஸ் - எம்.பி. வேண்டுகோள் !
» ஹாவர்டு நடவடிக்கை: மறு பரிசீலனை செய்ய சு.சாமி வேண்டுகோள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum