அமெரிக்காவின் அடுத்த இலக்கு பாகிஸ்தானா?
Page 1 of 1
அமெரிக்காவின் அடுத்த இலக்கு பாகிஸ்தானா?
பாகிஸ்தான் அரசின் அனுமதி இல்லாமலும், பாகிஸ்தான் அரசுக்குத் தெரிவிக்காமலும் அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து, ஒசாமா-பின்-லேடனைக் கொன்றதனால் பாகிஸ்தான் அரசு கடும் அதிருப்தியில் உள்ளது. மேலும், அமெரிக்கப் படைகள் பாகிஸ்தான் அணுஆயுத நிலைகள் மீது தாக்குதல் நடத்தி, அவற்றைப் பறிமுதல் செய்யவும் கூடும் என்றும் பயத்தில் உள்ளது பாகிஸ்தான் அரசு.
ஏற்கனவே, பாகிஸ்தான் அரசு பலமுறை கேட்டுக்கொண்டும், அமெரிக்கா பிடிவாதமாக பாகிஸ்தானுக்குள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வந்ததால், பாகிஸ்தானின் இந்த பயம் மேலும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் அணுஆயுதங்கள், தீவிரவாதிகளின் கைகளுக்குப் போகக்கூடிய வாய்ப்பு இருப்பதாகக் கருதி வருகின்றன அமெரிக்காவும், அதன் நேச நாடான இஸ்ரேலும். அவ்வாறு அணுஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்குக் கிடைத்தால், அவற்றை தீவிரவாதிகள் அமெரிக்கா மீதும், இஸ்ரேல மீதுமே பிரயோகிக்கும் வாய்ப்பு அதிகம்.
இதனால், இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா பாகிஸ்தான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி, அணு ஆயுதங்களைக் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக பல ஆண்டுகளாக செய்திகள் உலா வந்து கொண்டு உள்ளன. ஆனால், இதுவரை அவ்வாறு எதுவும் நிகழவில்லை. எனினும், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போரிட்டுக் கொண்டும், ஒசாமவைத் தேடிக்கொண்டும் இருக்கும் அமெரிக்காவுக்கு, பாகிஸ்தானின் ஒத்துழைப்பு அவசியம் ஆதலால், அவ்வாறு தாக்குதல் நடத்தாது என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஒசாமா-பின்-லேடன் கொள்ளப்பட்டு உள்ளதால், இனி பாகிஸ்தானின் தயவு அமெரிக்காவுக்குத் தேவைப்படாது என்றும், இனி அது தன்னுடைய சொந்த பாதுகாப்பின் மீது கவனம் செலுத்தும் என்றும், அதன் ஒரு கட்டமாக அது பாகிஸ்தானின் அணு ஆயுதங்களைக் கைப்பற்றலாம் என்றும் கருதுகிறது பாகிஸ்தான். கடந்த 1981 ஆம் ஆண்டு இஸ்ரேல, பாக்தாத் அருகில் இருந்த ஈராக்கின் அணுசக்தி நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி அழித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, பாகிஸ்தான் அரசு பலமுறை கேட்டுக்கொண்டும், அமெரிக்கா பிடிவாதமாக பாகிஸ்தானுக்குள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வந்ததால், பாகிஸ்தானின் இந்த பயம் மேலும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் அணுஆயுதங்கள், தீவிரவாதிகளின் கைகளுக்குப் போகக்கூடிய வாய்ப்பு இருப்பதாகக் கருதி வருகின்றன அமெரிக்காவும், அதன் நேச நாடான இஸ்ரேலும். அவ்வாறு அணுஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்குக் கிடைத்தால், அவற்றை தீவிரவாதிகள் அமெரிக்கா மீதும், இஸ்ரேல மீதுமே பிரயோகிக்கும் வாய்ப்பு அதிகம்.
இதனால், இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா பாகிஸ்தான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி, அணு ஆயுதங்களைக் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக பல ஆண்டுகளாக செய்திகள் உலா வந்து கொண்டு உள்ளன. ஆனால், இதுவரை அவ்வாறு எதுவும் நிகழவில்லை. எனினும், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போரிட்டுக் கொண்டும், ஒசாமவைத் தேடிக்கொண்டும் இருக்கும் அமெரிக்காவுக்கு, பாகிஸ்தானின் ஒத்துழைப்பு அவசியம் ஆதலால், அவ்வாறு தாக்குதல் நடத்தாது என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஒசாமா-பின்-லேடன் கொள்ளப்பட்டு உள்ளதால், இனி பாகிஸ்தானின் தயவு அமெரிக்காவுக்குத் தேவைப்படாது என்றும், இனி அது தன்னுடைய சொந்த பாதுகாப்பின் மீது கவனம் செலுத்தும் என்றும், அதன் ஒரு கட்டமாக அது பாகிஸ்தானின் அணு ஆயுதங்களைக் கைப்பற்றலாம் என்றும் கருதுகிறது பாகிஸ்தான். கடந்த 1981 ஆம் ஆண்டு இஸ்ரேல, பாக்தாத் அருகில் இருந்த ஈராக்கின் அணுசக்தி நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி அழித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar topics
» Wikileaks - விக்கிலீக்கின் அடுத்த ரகசிய கசிவு எது?
» அடுத்த மாதம் கெய்ரோவில் ஃபத்ஹ்-ஹமாஸ் சந்திப்பு
» எகிப்து:அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அதிபர் தேர்தல் – ராணுவ கவுன்சில் அறிவிப்பு
» அமெரிக்காவின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது – காம்னஈ
» பாகிஸ்தானில் தொடரும் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதல்-20 பேர் பலி
» அடுத்த மாதம் கெய்ரோவில் ஃபத்ஹ்-ஹமாஸ் சந்திப்பு
» எகிப்து:அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அதிபர் தேர்தல் – ராணுவ கவுன்சில் அறிவிப்பு
» அமெரிக்காவின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது – காம்னஈ
» பாகிஸ்தானில் தொடரும் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதல்-20 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum