2008 டெல்லி குண்டுவெடிப்பில் 13 பேர்கள் மீது வழக்கு புனையப்பட்டுள்ளது
Page 1 of 1
2008 டெல்லி குண்டுவெடிப்பில் 13 பேர்கள் மீது வழக்கு புனையப்பட்டுள்ளது
புதுடெல்லி:டெல்லி 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 13 பேர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு புனையப்பட்டுள்ளது. கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் சநேஹிமன் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் வழக்கு புனயப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நீதிமன்றம் அழைத்ததின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் 11 அஹ்மதாபாத் சபர்மதி ஜெயிலில் இருந்தும் மீதி 2 பேர் திகார் ஜெயிலில் இருந்தும் கொண்டுவரப்பட்டனர். அனைவர் மீதும் தேசத்திற்கு எதிராக போர் தொடுத்தல், கொலை பாதகம், கொலை முயற்சி, பொது சொத்தை சேதப்படுத்தல், கிரிமினல் குற்றம் ஆகிய வழக்குகள் புனயப்பட்டுள்ளதாக நீதிபதி கூறினார். மேலும் அனைவர் மீதும் வெடிகுண்டு வழக்கும், சட்ட ஒழுங்கு பாதுகாப்பு வழக்கும் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முஹம்மத் ஷகீல், முஹம்மத் சைப், சேஷன் அஹ்மத், ஜியா உர் ரஹ்மான், சகூப் நிசார், முஹம்மத் சாதிக், கயமுதீன் கப்பாடியா, முஹம்மத் மன்சூர், முஹம்மத் ஹக்கீம், முபின் காதர் ஷேய்க், ஆசிப் பாஷீருத்தின், மொஹமீத் அக்பர் இஸ்மாயில் மற்றும் ஷஹ்சாத் அஹ்மத் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர் எம்.எஸ்.கான் அனைவரும் நிரபராதிகள் ஆவர் ஆகவே அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.
டெல்லியில் செப்டம்பர் 13, 2008 ஆம் ஆண்டில் 31 நிமிடங்கள் இடைவெளியில் நான்கு இடங்களில் குண்டுகள் வெடித்ததில் இருபத்தி ஆறுபேர் கொல்லப்பட்டனர் மேலும் 135 பேர் காயமுற்றனர். கரோல் பக்ஹின் கப்பார் மார்க்கெட், கோன்னாட்டில் பாரகஹம்ப ரோடு, கைலாஷில் மார்கெட்டிலும் குண்டுகள் வெடித்தன மற்றும் இந்திய கேட்டில் ஒரு குண்டு வெடிக்காமல் கைப்பற்றபட்டது. இக்குண்டுவெடிப்பு தொடர்பாக ஐந்து வழக்குகள் போடப்பட்டன. இந்த ஐந்து வழக்குகலும் தொடர்புடையது ஆகையால் ஒன்றாக இணைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றம் அழைத்ததின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் 11 அஹ்மதாபாத் சபர்மதி ஜெயிலில் இருந்தும் மீதி 2 பேர் திகார் ஜெயிலில் இருந்தும் கொண்டுவரப்பட்டனர். அனைவர் மீதும் தேசத்திற்கு எதிராக போர் தொடுத்தல், கொலை பாதகம், கொலை முயற்சி, பொது சொத்தை சேதப்படுத்தல், கிரிமினல் குற்றம் ஆகிய வழக்குகள் புனயப்பட்டுள்ளதாக நீதிபதி கூறினார். மேலும் அனைவர் மீதும் வெடிகுண்டு வழக்கும், சட்ட ஒழுங்கு பாதுகாப்பு வழக்கும் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முஹம்மத் ஷகீல், முஹம்மத் சைப், சேஷன் அஹ்மத், ஜியா உர் ரஹ்மான், சகூப் நிசார், முஹம்மத் சாதிக், கயமுதீன் கப்பாடியா, முஹம்மத் மன்சூர், முஹம்மத் ஹக்கீம், முபின் காதர் ஷேய்க், ஆசிப் பாஷீருத்தின், மொஹமீத் அக்பர் இஸ்மாயில் மற்றும் ஷஹ்சாத் அஹ்மத் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர் எம்.எஸ்.கான் அனைவரும் நிரபராதிகள் ஆவர் ஆகவே அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.
டெல்லியில் செப்டம்பர் 13, 2008 ஆம் ஆண்டில் 31 நிமிடங்கள் இடைவெளியில் நான்கு இடங்களில் குண்டுகள் வெடித்ததில் இருபத்தி ஆறுபேர் கொல்லப்பட்டனர் மேலும் 135 பேர் காயமுற்றனர். கரோல் பக்ஹின் கப்பார் மார்க்கெட், கோன்னாட்டில் பாரகஹம்ப ரோடு, கைலாஷில் மார்கெட்டிலும் குண்டுகள் வெடித்தன மற்றும் இந்திய கேட்டில் ஒரு குண்டு வெடிக்காமல் கைப்பற்றபட்டது. இக்குண்டுவெடிப்பு தொடர்பாக ஐந்து வழக்குகள் போடப்பட்டன. இந்த ஐந்து வழக்குகலும் தொடர்புடையது ஆகையால் ஒன்றாக இணைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum