ஏமனை அல்காய்தா கைப்பற்றும் - ஜனாதிபதி எச்சரிக்கை
Page 1 of 1
ஏமனை அல்காய்தா கைப்பற்றும் - ஜனாதிபதி எச்சரிக்கை
தன்னை பதவியிலிருந்து அகற்றினால் ஏமனின் பல பாகங்களை அல் காய்தா கைப்பற்றி விடும் என ஏமன் ஜனாதிபதி அலி அப்துல்லா ஸாலே
எச்சரித்துள்ளார். அவரை நீக்குவதற்காக வளைகுடா நாடுகள் தெரிவித்திருந்த ஒப்பந்தத்தில் எதிர்க்கட்சிகள் கையெழுத்திட்டு விட்டன.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சி ஏமனிலும் வெடித்தது. கடந்த33 வருடங்களாக ஏமனின் அதிபராக இருக்கும் ஸாலே பதவி விலக வேண்டும் என மக்கள் ஆர்ப்பாட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்டுள்ளனர். ஏமனில் அல்காய்தாவின் பலம் அதிகமாக இருப்பதால் அங்கு நிலைமை சீர்குலைவதை அமெரிக்காவும் வளைகுடா நாடுகளும் விரும்பவில்லை. எனவே அதிபரை பதவியிலிருந்து அகற்றுவதற்கு முடிவு செய்தனர். பதவி விலக மறுத்து வந்த ஸாலேயை அதிலிருந்து அகற்ற அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் வளைகுடா நாடுகள் தொடர்ந்து முயன்று வந்தன.
இதன் பலனாக வளைகுடா கூட்டு கவுன்சிலின் செயலாளர் அப்துல் லத்தீப் அல் ஸயானி முன்னிலையில் நேற்று ஏமனின் எதிர்க்கட்சிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் அடிப்படையில் இன்னும் ஒரு மாதத்தில் ஸாலே பதவியிலிருந்து விலகி புதிய அரசு அமைக்கப்படும். நிர்ப்பந்தத்துக்கு பணிந்து ஸாலேயும் பதவியிலிருந்து விலக முன்வந்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் தான் பதவி விலகினால் அல்காய்தா ஏமனின் மாரிப், ஹத்ரமௌத்,ஷப்வா, அப்யான் மற்றும் ஜூப் மாகாணங்களை கைப்பற்றி விடும் என அதிபர் எச்சரித்துள்ளார். இந்த பகுதிகள் அல்காய்தா செயல்படும் இடங்களாகும். எனக்கு பின்னால் வருபவர்கள் மோசமானவர்களாக இருப்பார்கள் என்று எனது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நண்பர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நேரம்
எச்சரித்துள்ளார். அவரை நீக்குவதற்காக வளைகுடா நாடுகள் தெரிவித்திருந்த ஒப்பந்தத்தில் எதிர்க்கட்சிகள் கையெழுத்திட்டு விட்டன.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சி ஏமனிலும் வெடித்தது. கடந்த33 வருடங்களாக ஏமனின் அதிபராக இருக்கும் ஸாலே பதவி விலக வேண்டும் என மக்கள் ஆர்ப்பாட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்டுள்ளனர். ஏமனில் அல்காய்தாவின் பலம் அதிகமாக இருப்பதால் அங்கு நிலைமை சீர்குலைவதை அமெரிக்காவும் வளைகுடா நாடுகளும் விரும்பவில்லை. எனவே அதிபரை பதவியிலிருந்து அகற்றுவதற்கு முடிவு செய்தனர். பதவி விலக மறுத்து வந்த ஸாலேயை அதிலிருந்து அகற்ற அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் வளைகுடா நாடுகள் தொடர்ந்து முயன்று வந்தன.
இதன் பலனாக வளைகுடா கூட்டு கவுன்சிலின் செயலாளர் அப்துல் லத்தீப் அல் ஸயானி முன்னிலையில் நேற்று ஏமனின் எதிர்க்கட்சிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் அடிப்படையில் இன்னும் ஒரு மாதத்தில் ஸாலே பதவியிலிருந்து விலகி புதிய அரசு அமைக்கப்படும். நிர்ப்பந்தத்துக்கு பணிந்து ஸாலேயும் பதவியிலிருந்து விலக முன்வந்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் தான் பதவி விலகினால் அல்காய்தா ஏமனின் மாரிப், ஹத்ரமௌத்,ஷப்வா, அப்யான் மற்றும் ஜூப் மாகாணங்களை கைப்பற்றி விடும் என அதிபர் எச்சரித்துள்ளார். இந்த பகுதிகள் அல்காய்தா செயல்படும் இடங்களாகும். எனக்கு பின்னால் வருபவர்கள் மோசமானவர்களாக இருப்பார்கள் என்று எனது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நண்பர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நேரம்
Similar topics
» விக்கிலீஸ் மிரட்டல்: அமெரிக்கா, இந்தியாவுக்கு எச்சரிக்கை!
» ஈரானைத் தாக்கினால்..... - ரஷ்யா எச்சரிக்கை!
» வலதுசாரி பயங்கரவாதம் ஆபத்தானது:ப.சிதம்பரம் எச்சரிக்கை
» சிரியாவுக்கு அரபு லீக் இறுதி எச்சரிக்கை
» ஈரானை தாக்கக் கூடாது – பிரான்சு எச்சரிக்கை
» ஈரானைத் தாக்கினால்..... - ரஷ்யா எச்சரிக்கை!
» வலதுசாரி பயங்கரவாதம் ஆபத்தானது:ப.சிதம்பரம் எச்சரிக்கை
» சிரியாவுக்கு அரபு லீக் இறுதி எச்சரிக்கை
» ஈரானை தாக்கக் கூடாது – பிரான்சு எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum