ஃப்ரீடம் ஃபுளோடில்லா-2 இல் 40 நாடுகளைச் சேர்ந்த 600 செயற்பாட்டாளர்கள்!
Page 1 of 1
ஃப்ரீடம் ஃபுளோடில்லா-2 இல் 40 நாடுகளைச் சேர்ந்த 600 செயற்பாட்டாளர்கள்!
கடந்த வருடம் மே மாதம் காஸாவுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஃப்ரீடம் ஃபுளோடில்லா கப்பல்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டு சுமார் 10 செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்ட செயலை முழு உலகமும் கண்டித்திருந்தது.
காஸாவில் சுமார் 5 வருடங்களுக்கும் மேலாக மனிதாபிமானமற்ற தொடர் முற்றுகைக்கு உள்ளாகி அல்லலுறும் பலஸ்தீனர்களுக்கு உதவ முன்வருவோரை அச்சுறுத்தி இடைநிறுத்துமுகமாக மேற்கொள்ளப்பட்ட ஈனத்தனமான தாக்குதல் நடவடிக்கைகளால் காஸாவை சர்வதேச உலகிடமிருந்து தனிமைப்படுத்தும் இஸ்ரேலின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போய்விட்டது.
ஃப்ரீடம் ஃபுளோடில்லா தாக்குதலின் பின்னர் காஸா மக்கள் மீது முழு உலகின் கவனமும் முன்னரிலும் அதிகமாகத் திரும்பியதன் விளைவு பல்வேறு நாடுகளில் இருந்தும் நிவாரண உதவிக் குழுக்கள் ஆர்வத்தோடு காஸாவை நோக்கிச் செல்ல முனைந்தன.
அதனடியாக, "ஐரோப்பாவில் இருந்து ஃப்ரீடம் ஃபுளோடில்லா-2 எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. இதில், 40 நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 செயற்பாட்டாளர்கள் பங்கேற்கவுள்ளனர்" என ஜோர்தானிய "லைஃப்லைன்" அமைப்பின் தலைவர் வஈல் அல் ஸகா தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (24.05.2011) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜோர்தானில் இருந்துமட்டும் 40 செயற்பாட்டாளர்கள் இக்குழுவில் கலந்துகொள்ளவுள்ளனர். கடந்த வருடம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் வெறித்தனமான தாக்குதலுக்குள்ளான துருக்கிய மாவி மர்மரா கப்பல் தவிர மேலும் 12 கப்பல்கள் இதில் இணையவுள்ளன. அரபு நிதியுதவியுடன் கூடிய மற்றொரு கப்பல் இக்குழுவில் இணையுமா இல்லையா என்பது பற்றிய பேச்சுவார்த்தை தற்போது நடந்துகொண்டு இருக்கின்றது. பயணத்துக்கான முழு மொத்தச் செலவில் 1.6 மில்லியன் யூரோ பெறுமதியான 20 சதவீதமான செலவை "லைஃப்லைன்" அமைப்பு பொறுப்பேற்கவுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், "துருக்கியில் எதிர்வரும் ஜூன் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. நிவாரண உதவிக் குழுவில் துருக்கியும் இடம்பெற வேண்டும் என சர்வதேச லைஃப்லைன் குழு விரும்பியதால், அந்நாடும் பங்கேற்றுச் சிறப்பிக்கும் வகையில் காஸா நோக்கிய பயணம் எதிர்வரும் ஜூன் மாத இறுதிவரை பின்போடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
இந்நேரம்
காஸாவில் சுமார் 5 வருடங்களுக்கும் மேலாக மனிதாபிமானமற்ற தொடர் முற்றுகைக்கு உள்ளாகி அல்லலுறும் பலஸ்தீனர்களுக்கு உதவ முன்வருவோரை அச்சுறுத்தி இடைநிறுத்துமுகமாக மேற்கொள்ளப்பட்ட ஈனத்தனமான தாக்குதல் நடவடிக்கைகளால் காஸாவை சர்வதேச உலகிடமிருந்து தனிமைப்படுத்தும் இஸ்ரேலின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போய்விட்டது.
ஃப்ரீடம் ஃபுளோடில்லா தாக்குதலின் பின்னர் காஸா மக்கள் மீது முழு உலகின் கவனமும் முன்னரிலும் அதிகமாகத் திரும்பியதன் விளைவு பல்வேறு நாடுகளில் இருந்தும் நிவாரண உதவிக் குழுக்கள் ஆர்வத்தோடு காஸாவை நோக்கிச் செல்ல முனைந்தன.
அதனடியாக, "ஐரோப்பாவில் இருந்து ஃப்ரீடம் ஃபுளோடில்லா-2 எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. இதில், 40 நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 செயற்பாட்டாளர்கள் பங்கேற்கவுள்ளனர்" என ஜோர்தானிய "லைஃப்லைன்" அமைப்பின் தலைவர் வஈல் அல் ஸகா தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (24.05.2011) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜோர்தானில் இருந்துமட்டும் 40 செயற்பாட்டாளர்கள் இக்குழுவில் கலந்துகொள்ளவுள்ளனர். கடந்த வருடம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் வெறித்தனமான தாக்குதலுக்குள்ளான துருக்கிய மாவி மர்மரா கப்பல் தவிர மேலும் 12 கப்பல்கள் இதில் இணையவுள்ளன. அரபு நிதியுதவியுடன் கூடிய மற்றொரு கப்பல் இக்குழுவில் இணையுமா இல்லையா என்பது பற்றிய பேச்சுவார்த்தை தற்போது நடந்துகொண்டு இருக்கின்றது. பயணத்துக்கான முழு மொத்தச் செலவில் 1.6 மில்லியன் யூரோ பெறுமதியான 20 சதவீதமான செலவை "லைஃப்லைன்" அமைப்பு பொறுப்பேற்கவுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், "துருக்கியில் எதிர்வரும் ஜூன் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. நிவாரண உதவிக் குழுவில் துருக்கியும் இடம்பெற வேண்டும் என சர்வதேச லைஃப்லைன் குழு விரும்பியதால், அந்நாடும் பங்கேற்றுச் சிறப்பிக்கும் வகையில் காஸா நோக்கிய பயணம் எதிர்வரும் ஜூன் மாத இறுதிவரை பின்போடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
இந்நேரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum