மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு: நிரபராதிகளுக்கு நஷ்ட ஈடு கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகிறது
Page 1 of 1
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு: நிரபராதிகளுக்கு நஷ்ட ஈடு கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகிறது
புதுடெல்லி: 2007 மே மாதம் 18-ம் தேதி ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு தொடர்பாக கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு நஷ்ட ஈடு கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
இவ்வழக்கில் நிரபராதிகளான 21 முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் தேசிய சிறுபான்மை கமிஷனின் தலையீடு மூலமாக அநியாயமாக பயங்கரவாத முத்திரைக்குத்தி மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் தகர்ந்துபோன இவ்விளைஞர்களின் வாழ்க்கை சாதாரணகதிக்கு திரும்பும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்ட இவ்விளைஞர்களுக்கு 3 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குவது உள்பட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை ஆந்திர அரசிடம் தேசிய சிறுபான்மை கமிஷன் சமர்ப்பித்துள்ளது. இளைஞர்களை சித்திரவதை செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்வது, குற்றவாளிகளான போலீசாரிடமிருந்து நஷ்ட ஈட்டை ஈடாக்குவது, இளைஞர்கள் சாதாரண வாழ்க்கை திரும்பும் வகையில் அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை கமிஷன் முன்வைத்துள்ளது.
வகுப்பு கலவர தடுப்புச்சட்டம்-2011 படி நஷ்டஈட்டுத் தொகைக்கு சிபாரிசுச் செய்வதாக தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லாஹ் ஆந்திர முதல்வர் கிரன்குமார் ரெட்டிக்கு இம்மாதம் இரண்டாம்தேதி அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது முறையாக தேசிய சிறுபான்மை கமிஷன் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்காக கடிதத்தை ஆந்திர மாநில அரசுக்கு அனுப்பியுள்ளது. எவ்வித காரணமுமின்றி குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட ஒன்பது இளைஞர்களுக்கு சிறுபான்மை நிதித்துறை கார்ப்பரேசனில் இருந்து அனுமதிக்கப்பட்ட கடன் நஷ்ட பரிகாரம் என்பது ஆந்திர அரசின் நிலைப்பாடாகும். கடனை நஷ்ட ஈடாக கருதமுடியாது என சுட்டிக்காட்டி ஓய்வு பெற்ற மேஜர் எஸ்.ஜி.எம்.கவ்தரி அளித்த புகாரை தொடர்ந்து தேசிய சிறுபான்மை கமிஷன் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்து, அவர்களின் திருமணத்தை கூட நடக்கமுடியாத சூழலை உருவாக்கிய போலீஸ்காரர்களிடமிருந்தே நஷ்ட ஈட்டுத் தொகையை ஈடாக்க வேண்டும் என தேசிய சிறுபான்மை கமிஷன் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில் நிரபராதிகளான 21 முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் தேசிய சிறுபான்மை கமிஷனின் தலையீடு மூலமாக அநியாயமாக பயங்கரவாத முத்திரைக்குத்தி மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் தகர்ந்துபோன இவ்விளைஞர்களின் வாழ்க்கை சாதாரணகதிக்கு திரும்பும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்ட இவ்விளைஞர்களுக்கு 3 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குவது உள்பட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை ஆந்திர அரசிடம் தேசிய சிறுபான்மை கமிஷன் சமர்ப்பித்துள்ளது. இளைஞர்களை சித்திரவதை செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்வது, குற்றவாளிகளான போலீசாரிடமிருந்து நஷ்ட ஈட்டை ஈடாக்குவது, இளைஞர்கள் சாதாரண வாழ்க்கை திரும்பும் வகையில் அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை கமிஷன் முன்வைத்துள்ளது.
வகுப்பு கலவர தடுப்புச்சட்டம்-2011 படி நஷ்டஈட்டுத் தொகைக்கு சிபாரிசுச் செய்வதாக தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லாஹ் ஆந்திர முதல்வர் கிரன்குமார் ரெட்டிக்கு இம்மாதம் இரண்டாம்தேதி அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது முறையாக தேசிய சிறுபான்மை கமிஷன் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்காக கடிதத்தை ஆந்திர மாநில அரசுக்கு அனுப்பியுள்ளது. எவ்வித காரணமுமின்றி குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட ஒன்பது இளைஞர்களுக்கு சிறுபான்மை நிதித்துறை கார்ப்பரேசனில் இருந்து அனுமதிக்கப்பட்ட கடன் நஷ்ட பரிகாரம் என்பது ஆந்திர அரசின் நிலைப்பாடாகும். கடனை நஷ்ட ஈடாக கருதமுடியாது என சுட்டிக்காட்டி ஓய்வு பெற்ற மேஜர் எஸ்.ஜி.எம்.கவ்தரி அளித்த புகாரை தொடர்ந்து தேசிய சிறுபான்மை கமிஷன் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்து, அவர்களின் திருமணத்தை கூட நடக்கமுடியாத சூழலை உருவாக்கிய போலீஸ்காரர்களிடமிருந்தே நஷ்ட ஈட்டுத் தொகையை ஈடாக்க வேண்டும் என தேசிய சிறுபான்மை கமிஷன் தெரிவித்துள்ளது.
Similar topics
» மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு : சிறையிலிருந்த முஸ்லீம் இளைஞர்களுக்கு 3 இலட்சம் நஷ்ட ஈடு
» குண்டுவெடிப்பு பொய் வழக்குகளில் விடுதலைச் செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு மக்கா மஸ்ஜித் நிதியில் இழப்பீடு – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்
» மக்கா மஸ்ஜித்:அநியாயமாக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு 70 லட்சம் ரூபாய் இழப்பீடு
» மக்கா மஸ்ஜித்:முஸ்லிம் சமுதாயத்திடம் ஆந்திர அரசு மன்னிப்புக் கேட்கும் - ஆந்திர மாநில முதல்வர்
» ரூ 5 லட்சம் நஷ்ட ஈடு இழந்த கற்பை மீட்டுக் கொடுக்குமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
» குண்டுவெடிப்பு பொய் வழக்குகளில் விடுதலைச் செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு மக்கா மஸ்ஜித் நிதியில் இழப்பீடு – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்
» மக்கா மஸ்ஜித்:அநியாயமாக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு 70 லட்சம் ரூபாய் இழப்பீடு
» மக்கா மஸ்ஜித்:முஸ்லிம் சமுதாயத்திடம் ஆந்திர அரசு மன்னிப்புக் கேட்கும் - ஆந்திர மாநில முதல்வர்
» ரூ 5 லட்சம் நஷ்ட ஈடு இழந்த கற்பை மீட்டுக் கொடுக்குமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum