இலங்கை மர்ம மனிதர்கள்! பொலிஸ் சீருடைகள் அடையாள அட்டைகள் கண்டெடுப்பு!
Page 1 of 1
இலங்கை மர்ம மனிதர்கள்! பொலிஸ் சீருடைகள் அடையாள அட்டைகள் கண்டெடுப்பு!
கொழும்பு: கடந்த சில நாட்களாக இலங்கையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மர்ம மனிதர்கள் பெண்களை குறிவைத்து தாக்கி வந்ததையடுத்து பொது மக்கள் மர்ம மனிதர்களை பிடிக்க முடிவு செய்தனர் இந்நிலையில் பொத்துவில் பாக்கியவத்தை பகுதியில் நேற்று மர்மமனிதர்களின் நடமாட்டத்தால் ஏற்பட்ட பதட்டத்தில் பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பொத்துவில் பாக்கியவத்தை பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மர்மனிதர்கள் சிலர் வீடுகளை தட்டியுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த ஊர் மக்கள் இரண்டு மர்ம மனிதர்களையும் துரத்தி சென்ற போது நடுவில் அவர்களுடன் சேர்ந்து மேலும் இரண்டு மர்ம மனிதர்கள் ஓடியுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பிரதேச மக்கள் நான்கு மர்ம மனிதர்களும் இருந்த பாழடைந்த வீடொன்றினுள் புகுந்துள்ளனர். எனினும் மர்ம மனிதர்கள் வசம் துப்பாக்கி காணப்பட்டதால் பிரதேச மக்கள் அவர்களை நெருங்க வில்லை.
இதனையடுத்து அங்கு ஒளிந்திருந்த மர்மமனிதர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் குறித்த பாழடைந்த வீட்டினுள் சென்ற பிரதேசமக்கள் அங்கு பொலிஸாரின் சீருடைகள், தொப்பிகள், காலணிகள், அடையாள அட்டையின் பிரதிகள், மற்றும் பாஸ்போர்ட் பிரதிகள், ஆடைகள், தேர்தல் இடாப்பு கோப்பு, கத்தி முதலான பொருட்களை கைப்பற்றியுள்ளனர். சம்பவத்தையடுத்து அரை மணிநேரத்தின் பின் குறித்த இடத்திற்கு வந்த பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு பின் அது கைகலப்பாக மாறியுள்ளது.
இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதோடு பொலிஸ் வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து பொத்துவில் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, பிரதேசத்தில் தற்போது சுமூகநிலை ஏற்பட்டுள்ளதாக கூறி தொடர்பினை துண்டித்து விட்டனர்.
இந்நேரம்
பொத்துவில் பாக்கியவத்தை பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மர்மனிதர்கள் சிலர் வீடுகளை தட்டியுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த ஊர் மக்கள் இரண்டு மர்ம மனிதர்களையும் துரத்தி சென்ற போது நடுவில் அவர்களுடன் சேர்ந்து மேலும் இரண்டு மர்ம மனிதர்கள் ஓடியுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பிரதேச மக்கள் நான்கு மர்ம மனிதர்களும் இருந்த பாழடைந்த வீடொன்றினுள் புகுந்துள்ளனர். எனினும் மர்ம மனிதர்கள் வசம் துப்பாக்கி காணப்பட்டதால் பிரதேச மக்கள் அவர்களை நெருங்க வில்லை.
இதனையடுத்து அங்கு ஒளிந்திருந்த மர்மமனிதர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் குறித்த பாழடைந்த வீட்டினுள் சென்ற பிரதேசமக்கள் அங்கு பொலிஸாரின் சீருடைகள், தொப்பிகள், காலணிகள், அடையாள அட்டையின் பிரதிகள், மற்றும் பாஸ்போர்ட் பிரதிகள், ஆடைகள், தேர்தல் இடாப்பு கோப்பு, கத்தி முதலான பொருட்களை கைப்பற்றியுள்ளனர். சம்பவத்தையடுத்து அரை மணிநேரத்தின் பின் குறித்த இடத்திற்கு வந்த பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு பின் அது கைகலப்பாக மாறியுள்ளது.
இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதோடு பொலிஸ் வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து பொத்துவில் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, பிரதேசத்தில் தற்போது சுமூகநிலை ஏற்பட்டுள்ளதாக கூறி தொடர்பினை துண்டித்து விட்டனர்.
இந்நேரம்
Similar topics
» மதுரை: அத்வானி யாத்திரை பாதையில் வெடிகுண்டு கண்டெடுப்பு
» சென்னை - அமெரிக்கத் தூதரகத்துக்கு மர்ம மின்அஞ்சல்
» சென்னை - அமெரிக்கத் தூதரகத்துக்கு மர்ம மின்அஞ்சல்
» சிறப்பு அடையாள அட்டைத் திட்டம் ஆபத்தானது: அருணாராய் குற்றச்சாட்டு
» வளைகுடா நாடுகளிலிருந்து சடலமாக திரும்பும் இலங்கை பெண்கள்!
» சென்னை - அமெரிக்கத் தூதரகத்துக்கு மர்ம மின்அஞ்சல்
» சென்னை - அமெரிக்கத் தூதரகத்துக்கு மர்ம மின்அஞ்சல்
» சிறப்பு அடையாள அட்டைத் திட்டம் ஆபத்தானது: அருணாராய் குற்றச்சாட்டு
» வளைகுடா நாடுகளிலிருந்து சடலமாக திரும்பும் இலங்கை பெண்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum