கஷ்மீரில் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவாக போராட்டம்
Page 1 of 1
கஷ்மீரில் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவாக போராட்டம்
ஸ்ரீநகர்:மணிப்பூரில் கொடூரமான சிறப்பு
ராணுவ அதிகார சட்டத்தை வாபஸ் பெறக்கோரி பத்தாண்டுகளுக்கும் மேலாக
உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவரும் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவாக
ஜம்மு-கஷ்மீரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கஷ்மீரில் ரிஃபாம் குழுவினரின் தலைமையில்
தர்ணாவும், போராட்டமும் நடந்தது. கஷ்மீரில் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள
சிறப்பு அதிகாரச் சட்டத்தையும் வாபஸ் பெறவேண்டுமென இரோம் ஷர்மிளா கோரிக்கை
விடுத்ததற்கு நன்றி தெரிவித்து இப்போராட்டம் நடைபெறுவதாக போராட்ட
அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஷர்மிளாவுக்கு கஷ்மீரிகளின் ஆதரவு உண்டு
என போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். கஷ்மீர் பண்டிட்டுகளுக்கான
புனர்வாழ்வு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள்
கோரிக்கை விடுத்தனர்.
சமூக ஆர்வலர் மேதாபட்கர், மகஸாஸே விருது
பெற்ற சந்தீப் பாண்டே ஆகியோரின் தலைமையில் ஷர்மிளாவுக்கு ஆதரவு தெரிவித்து
தேசிய அளவில் நடத்தும் பிரச்சாரம் நேற்று முன் தினம் ஸ்ரீநகரிலிருந்து
துவங்கியது குறிப்பிடத்தக்கது.
ராணுவ அதிகார சட்டத்தை வாபஸ் பெறக்கோரி பத்தாண்டுகளுக்கும் மேலாக
உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவரும் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவாக
ஜம்மு-கஷ்மீரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கஷ்மீரில் ரிஃபாம் குழுவினரின் தலைமையில்
தர்ணாவும், போராட்டமும் நடந்தது. கஷ்மீரில் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள
சிறப்பு அதிகாரச் சட்டத்தையும் வாபஸ் பெறவேண்டுமென இரோம் ஷர்மிளா கோரிக்கை
விடுத்ததற்கு நன்றி தெரிவித்து இப்போராட்டம் நடைபெறுவதாக போராட்ட
அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஷர்மிளாவுக்கு கஷ்மீரிகளின் ஆதரவு உண்டு
என போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். கஷ்மீர் பண்டிட்டுகளுக்கான
புனர்வாழ்வு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள்
கோரிக்கை விடுத்தனர்.
சமூக ஆர்வலர் மேதாபட்கர், மகஸாஸே விருது
பெற்ற சந்தீப் பாண்டே ஆகியோரின் தலைமையில் ஷர்மிளாவுக்கு ஆதரவு தெரிவித்து
தேசிய அளவில் நடத்தும் பிரச்சாரம் நேற்று முன் தினம் ஸ்ரீநகரிலிருந்து
துவங்கியது குறிப்பிடத்தக்கது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum