மகனுக்கு ஒரு மடல் ! (வலை குடா வாழ் அன்பர்களுக்கு )
Page 1 of 1
மகனுக்கு ஒரு மடல் ! (வலை குடா வாழ் அன்பர்களுக்கு )
பாலை மணல் பணம் தேடி கண்ணே - என்
இளமை எல்லாம் தொலைகிறது இங்கே
சோலை மலர் உன் வளமை அங்கே -உன்
சொல் அழகை கேட்டிடனும் எங்கே
இருள் சூழ்ந்து பகல் மறைந்த போதும் - கண்ணே
உன் இளமை வளம் தான் கண்முன்னே தோன்றும்
நீ கருவுற்று மாதங்கள் ஆறு - நான்
பொருள் ஈட்ட புறப்பட்டேன் அரபு நாடு
காசு மோகம் யாரை விட்டது பாரு - இங்கே
என் வேர்வை கூட முதுமை ஆனது கேளு
நீ பிறந்து விட்ட செய்தி மடல் கண்டேன் - என்
பேராசையும் உனை பார்த்து விட எண்ணும்
இங்கே நிலமைகளை யோசித்து தினமும்
செத்துவிடும் என் ஆசைகள் திண்ணம்
வள்ர் பிறையே வான் நிலவே கண்ணே
வாப்பாவின் மடல் கண்டு அமைதி கொள் முன்னே !
-ஸ்ரீவை.காதர்-
இளமை எல்லாம் தொலைகிறது இங்கே
சோலை மலர் உன் வளமை அங்கே -உன்
சொல் அழகை கேட்டிடனும் எங்கே
இருள் சூழ்ந்து பகல் மறைந்த போதும் - கண்ணே
உன் இளமை வளம் தான் கண்முன்னே தோன்றும்
நீ கருவுற்று மாதங்கள் ஆறு - நான்
பொருள் ஈட்ட புறப்பட்டேன் அரபு நாடு
காசு மோகம் யாரை விட்டது பாரு - இங்கே
என் வேர்வை கூட முதுமை ஆனது கேளு
நீ பிறந்து விட்ட செய்தி மடல் கண்டேன் - என்
பேராசையும் உனை பார்த்து விட எண்ணும்
இங்கே நிலமைகளை யோசித்து தினமும்
செத்துவிடும் என் ஆசைகள் திண்ணம்
வள்ர் பிறையே வான் நிலவே கண்ணே
வாப்பாவின் மடல் கண்டு அமைதி கொள் முன்னே !
-ஸ்ரீவை.காதர்-
srivai.khader- Member
- நான் உங்கள் :
பதிவுகள் : 91
ஸ்கோர் : 5012
Points : 26
வயது : 63
Similar topics
» அக்கறை பச்சை ! (வலைகுடா வாழ் அன்பர்களுக்கு சமர்ப்பணம் )
» தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலிடம்
» தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum