யூதத் தீவிரவாதக் குழுவின் புதிய திட்டம்- ஆபத்தில் அல்-அக்ஸா
Page 1 of 1
யூதத் தீவிரவாதக் குழுவின் புதிய திட்டம்- ஆபத்தில் அல்-அக்ஸா
யூதத் தீவிரவாதக் குழுவொன்று ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் உள்ள அல் அக்ஸா மஸ்ஜித் மீது தாக்குதல் நடாத்தி, அதற்குள் யூத மதவிவகாரங்கள் தொடர்பான பாடநெறியொன்றைத் தொடரத் திட்டமிட்டு இருப்பதாக இஸ்ரேலிய செனல் 7 தொலைக்காட்சி கடந்த திங்கட்கிழமை (29.11.2010) செய்தி வெளியிட்டுள்ளது.
பள்ளிவாயிலைத் தூய்மைப்படுத்தல் என்ற போர்வையில் அல் அக்ஸா கட்டிடத்திற்குள் நுழைந்து யூதமத விவகாரங்களைக் கற்பிப்பதே மேற்படி குழுவின் ஆரம்பத் திட்டங்களில் ஒன்றாகும் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்தின் வடக்குப் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அமைப்பொன்று அல் அக்ஸாவுக்குள் தமது மார்க்க விடயங்கள் தொடர்பான பாடநெறி ஒன்றை முன்னெடுத்து வரும்போது ஏன் நாமும் அவ்வாறு செய்யக்கூடாது என மேற்படி குழுவில் உள்ள ஒரு யூதர் கேள்வியெழுப்பியதாகவும் குறித்த தொலைக்காட்சி சேவை குறிப்பிட்டுள்ளது.
அந்த நபர் மேலும் குறிப்பிடுகையில், தமது பாடநெறியில் கலந்துகொள்ளும் யூத மாணவர்களுக்கு காலையுணவு மற்றும் போக்குவரத்துச் செலவுகளுக்காகக் கணிசமான ஒரு தொகைப் பணம் வழங்கப்படும் என்றும் தமது நோக்கம் மதக் கல்வியைக் கற்பிப்பதைத் தவிர வேறெதுவுமில்லை என்பதைப் பொலிஸார் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நேரம்
Similar topics
» அல் அக்ஸா மஸ்ஜிதில் நுழைய இஸ்ரேல் தடை
» யூதத் தலைநகர் குறித்து இஸ்லாமிய – கிறிஸ்தவ கமிஷன் எச்சரிக்கை
» தீவிரவாத குழுவின் பெயரில் மின்னஞ்சல்! மேலும் ஒருவர் கைது
» சஞ்சீவ் பட்டை உடனடியாக விடுதலை செய்ய மனித உரிமைக் குழுவின் தலைவர் கவர்னருக்கு கோரிக்கை
» கஷ்மீர் மாநில மனித உரிமைகள் குழுவின் உத்தரவின் பேரில் மூத்த போலிஸ் அதிகாரி கைது
» யூதத் தலைநகர் குறித்து இஸ்லாமிய – கிறிஸ்தவ கமிஷன் எச்சரிக்கை
» தீவிரவாத குழுவின் பெயரில் மின்னஞ்சல்! மேலும் ஒருவர் கைது
» சஞ்சீவ் பட்டை உடனடியாக விடுதலை செய்ய மனித உரிமைக் குழுவின் தலைவர் கவர்னருக்கு கோரிக்கை
» கஷ்மீர் மாநில மனித உரிமைகள் குழுவின் உத்தரவின் பேரில் மூத்த போலிஸ் அதிகாரி கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum