ஆந்திர பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்றிய இரத்தம் ஏற்றம் – ரெட் கிராஸ் அலுவலகம் மீது தாக்குதல்
Page 1 of 1
ஆந்திர பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்றிய இரத்தம் ஏற்றம் – ரெட் கிராஸ் அலுவலகம் மீது தாக்குதல்
நெல்லூர்:ஆந்திர
மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் அண்மையில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சைக்குப் பின்
அப்பெண்ணுக்கு இரத்தம் ஏற்றியபோது, எய்ட்ஸ் கிருமி (HIV) தொற்றிய இரத்தத்தை
ஏற்றிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, அப்பெண்ணுக்கும், பிறந்த
சிசுவுக்கும் புதிய மருத்துவ சோதனைகளை மேற்கொள்ள மாநில சுகாதாரத்துறை
அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், முந்தைய, பிந்தைய பரிசோதனைகளின்
இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மேலாய்வுக்காக சென்னைக்கு
அனுப்பப்பட்டுள்ளன என்றும், ஓரிரு நாள்களில் முடிவு தெரியவரலாம் என்றும்
கூறப்பட்டுள்ளது.
இருபதே வயதான ஹசீனா என்னும் அப்பெண்
ஆரோக்கியமானவர் என்றும், பிரசவத்திற்கு முந்தைய சோதனைகளில் ஹெச்ஐவி
கிருமியோ, பிற குறைபாடுகளோ இல்லை என்று தெரியவந்ததாம். ஆனால்
பிரசவத்திற்குப் பிந்தைய சோதனையில் ஹெச்ஐவி கிருமி தொற்றியுள்ளதாகக்
காணப்பட்டதாம். இதனால் அவருடைய குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்தனர்.
நெல்லூரிலுள்ள இந்திய செஞ்சிலுவைச் சங்கம்
மூன்று அலகுகள் குருதி தானம் வழங்கியதாம். அவை தொற்றுக் கிருமிகளைக்
கொண்டிருந்ததாக கோபமுற்ற உறவினர்கள் அந்த அலுவலகத்தின் மீது தாக்குதல்
நடத்தியுள்ளனர்.
Similar topics
» அதோனி விநாயகர் சதுர்த்தி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆந்திர முதல்வர் உத்தரவு
» லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்
» ஹசாரே குழுவினர் மீது மீண்டும் தாக்குதல்!
» காங்கிரஸ் இணையதளம் மீது ஹேக்கர் தாக்குதல்
» சுப்ரமணிய சுவாமியின் வீட்டின் மீது தாக்குதல்
» லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்
» ஹசாரே குழுவினர் மீது மீண்டும் தாக்குதல்!
» காங்கிரஸ் இணையதளம் மீது ஹேக்கர் தாக்குதல்
» சுப்ரமணிய சுவாமியின் வீட்டின் மீது தாக்குதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum