தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முல்லைபெரியாறு – கேரள அரசை கண்டித்து ம.ம.க. வாகனப் பேரணி – 400 பேர் கைது

Go down

முல்லைபெரியாறு – கேரள அரசை கண்டித்து ம.ம.க. வாகனப் பேரணி – 400 பேர் கைது  Empty முல்லைபெரியாறு – கேரள அரசை கண்டித்து ம.ம.க. வாகனப் பேரணி – 400 பேர் கைது

Post by முஸ்லிம் Fri Dec 23, 2011 4:56 pm

கோவை:முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில்
உச்ச நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசைக் கண்டித்தும், மத்திய
அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிடக் கோரியும், மனிதநேய மக்கள் சார்பில்
வாகன ஊர்வலம் நடத்தப்பட்டது. இவ்வூர்வலத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர்
400 பேரை காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் உச்ச
நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசைக் கண்டித்தும், மத்திய அரசு
உடனடியாக இவ்விஷயத்தில் தலையிடக் கோரியும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில்
வாகன ஊர்வலம் மற்றும் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து உக்கடம், ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து இரு சக்கர
வாகனங்களில் பேரணியாகச் சென்று தமிழக எல்லையான கந்தேகவுண்டன் சாவடியில்
தர்ணா நடத்த திட்டமிட்டிருந்தனர். வாகனப்பேரணி செல்ல நூற்றுக் கணக்கானோர்
ஆத்துப்பாலம் பகுதியில் கூடினர்.

மாநகரக் காவல் துணை கமிஷ்னர்கள் ஹேமா
கருணாகரன், செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீஸார் அங்கு
குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் வாகனப் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி
மறுத்துவிட்டனர். ஆத்துப்பாலம் அருகே தடையை ஏற்படுத்தினர்.

காவல்துறையினரின் தடையை மீறி பேரணிக்கு
முயன்றபோது, தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக, மனிதநேய மக்கள் கட்சியினர்
400 பேர் கைது செய்யப்பட்டனர்.


முல்லைபெரியாறு – கேரள அரசை கண்டித்து ம.ம.க. வாகனப் பேரணி – 400 பேர் கைது  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10927
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum