தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மாயங்கள் செய்தோம் !

Go down

மாயங்கள் செய்தோம்  !   Empty மாயங்கள் செய்தோம் !

Post by srivai.khader Tue Aug 20, 2013 7:13 pm

தனக்கு மட்டும் இல்லை இது
தன்னை சார்ந்தவர்களுக்கும் தேவை

உவமையாய் கதைகள் கூறி பலரை
பகையாக்க மனதில் கணக்கு கோடி

இருப்பவனிடம் கறந்து தின்ன –இங்கே
இருக்குது ஒரு கூட்டம் ஒண்ணு

புகழ்ச்சியை மூலதனமாக்கி இன்னும்
நய வஞ்சகமாய் நாடகமாடி

முடிந்த வரை கண்ணில் நீர் கோலம்
முடித்து விடும் அப்போதைய வேலை

இன்னும் உறவுகளை பகையாக்க்கி
உரிமைக்கு முட்டு கட்டை போட்டு

உடன் பிறப்பின் பாசத்தையும் – இது
வெட்டி விடும் ஒட்டு மொத்தமாக

தாயமும் , தந்திரமும் தொடங்கி
அது மாயமும் , மந்திரமும் ஆகி

தனக்கு மட்டும் என்று தக்க வைக்க
திரளாக ஒரு கூட்டம் துனியாவில் !

இணை இல்லை இறைவனுக்கு என்று
மனம் கொண்டு கலிமாவை கூறி

மனிதனை மாயம் செய்ய என்னும்
மட்டமான செயலை செய்யலாமா ?

சிந்தியுங்கள் ! தெளிவு பெறுங்கள் !
திருமறையில் இன்னும் வசனம் உண்டு !


கவிஞன். இறையடிமை
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 4865
Points Points : 26
வயது வயது : 62

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum