தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கஷ்மீரில் கல்லறைகள்:பதிலளிக்க தயங்கும் மாநில அரசு

Go down

கஷ்மீரில் கல்லறைகள்:பதிலளிக்க தயங்கும் மாநில அரசு   Empty கஷ்மீரில் கல்லறைகள்:பதிலளிக்க தயங்கும் மாநில அரசு

Post by முஸ்லிம் Tue Aug 23, 2011 9:09 pm

ஸ்ரீநகர்:ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் மூன்று வடக்கு மாவட்டங்களில் அடையாளப்படுத்தப்படாத 38 கல்லறைகளிலிருந்து 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மனித உரிமை கமிஷனின் புலனாய்வு குழுவினரின் அறிக்கை தொடர்பாக பதிலளிக்க மாநில அரசு தயாராக இல்லை.

அறிக்கையை பார்க்கவில்லை எனவும், கிடைத்தவுடன் ஆராய்ந்த பிறகு மட்டுமே பதில் அளிப்போம் என கஷ்மீர் மாநில உள்துறை அமைச்சர் நாஸில் அஸ்லம் வாணி தெரிவித்துள்ளார்.

பாரமுல்லா, பந்திபூர், குப்வாரா ஆகிய மாவட்டங்களில் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்த உடல்களில் பெரும்பாலானவை துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டவர்களுடையாதாகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கஷ்மீரிலிருந்து காணாமல் போனவர்களின் உடல்கள் இதில் உட்படும் என கமிஷன் அறிக்கை கூறுகிறது. மனித உரிமை கமிஷனனின் புலனாய்வு அதிகாரிகளின் அறிக்கை தங்களது விசாரணை அறிக்கைகளை உறுதிச்செய்கிறது என கஷ்மீரில் மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பான ஜெ.கெ.சி.சி.எஸ் ஒருங்கிணைப்பாளர் குர்ரம் பர்வேஸ் தெரிவித்துள்ளார்.

அடையாளப்படுத்தப்படாத கல்லறைகள் குறித்து தாங்கள் அறிக்கைகளை வெளியிட்டபொழுது ராணுவத்தை அவமதிப்பதாக எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது என பர்வேஸ் கூறினார்.


கஷ்மீரில் கல்லறைகள்:பதிலளிக்க தயங்கும் மாநில அரசு   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10942
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கஷ்மீர்:ஃபேஸ்புக்கிற்கு தடை விதிக்க மாநில அரசு பரிசீலனை
»  மக்கா மஸ்ஜித்:முஸ்லிம் சமுதாயத்திடம் ஆந்திர அரசு மன்னிப்புக் கேட்கும் - ஆந்திர மாநில முதல்வர்
» கஷ்மீர் கல்லறைகள்: உண்மையை கண்டறிய கமிஷன் – உமர் அப்துல்லாஹ். ஐ.நா தீர்ப்பாயம் விசாரிக்கவேண்டும் – கிலானி
» அடையாளம் தெரியாத கல்லறைகள்:விசாரணை நடத்த மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை
» புலனாய்வு ஏஜன்சிகள் மீதான பயம் காரணமாக பிரவீன் சுவாமியின் மீது வழக்கு தொடர தயங்கும் முஸ்லிம் இளைஞர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum