தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மோடிக்கு எதிரான வாஜ்பாயின் கடிதத்தால் பரபரப்பு!

Go down

மோடிக்கு எதிரான வாஜ்பாயின் கடிதத்தால் பரபரப்பு!  Empty மோடிக்கு எதிரான வாஜ்பாயின் கடிதத்தால் பரபரப்பு!

Post by முஸ்லிம் Sun Sep 18, 2011 6:03 pm

புதுடெல்லி:
கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற
மதக்கலவரத்தில் இந்துத்வாவினரால் 3000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள்
கொல்லப்பட்டார்கள் அப்போது மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக
கூட்டணி ஆட்சி நடைபெற்றது.




குஜராத்
கலவரத்தையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற துயரமான சம்பவங்களையும் நினைத்து
மனம் வருந்திய பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு கடிதம்
எழுதினார். 9 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த கடிதம், தகவல் அறியும்
உரிமை சட்டத்தின்படி கோரப்பட்டு, சமூக ஆர்வலர் ஒருவரால் தற்போது
வெளியிடப்பட்டுள்ளது.

அந்த
கடிதத்தில் குஜராத்தில் நடைபெற்ற கலவரமும், அதைத் தொடர்ந்து நடந்த
சம்பவங்களும் என்னை கடுமையான வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. கலவரத்தை
தடுக்கவும், கலவரம் பாதித்த பகுதிகளை முறையாக பராமரிக்கவும், அங்குள்ள
மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் மாநில அரசு ஆர்வம் காட்டவில்லையோ
என்ற சந்தேகம் ஏற்படுவதாக வாஜ்பாய் குற்றம் சாட்டியுள்ளார்.

அமைதி சமூக
நல்லிணக்கம் போன்றவற்றுக்காக நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருக்கும்
நிலையில் வெளியான இந்த கடிதம் மோடி வட்டாரத்தில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum