தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மோடி போன்ற நபர்களிடமிருந்து நாட்டை காப்பாற்ற வரும் வெள்ளியன்று உண்ணாவிரதம்

Go down

மோடி போன்ற நபர்களிடமிருந்து நாட்டை காப்பாற்ற வரும் வெள்ளியன்று உண்ணாவிரதம் Empty மோடி போன்ற நபர்களிடமிருந்து நாட்டை காப்பாற்ற வரும் வெள்ளியன்று உண்ணாவிரதம்

Post by முஸ்லிம் Tue Sep 20, 2011 1:27 pm

லக்னோ :
குஜராத்தில் நரேந்திர மோடி நடத்திய மூன்று நாள் உண்ணாவிரதத்தில் கலந்து
கொண்ட முஸ்லீம்கள் உள்ளிட்ட அனைவரும் குஜராத் கலவரத்தின் குற்றவாளிகள்
ஆவார்கள் என்று பிரபல ஷியா முஸ்லீம் பிரிவு மதகுரு தெரிவித்துள்ளார்.




லக்னோவில்
இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய ஷியா முஸ்லீம் பிரிவு மதகுரு ஜவ்வாத்
"மோடியுடன் சேர்ந்து உண்ணாவிரதத்தில் பங்கு கொண்ட அனைவரும் குஜராத்
கலவரத்தில் பங்கு கொண்டவர்களுக்கு ஒப்பானவர்கள்" என்று கூறினார். மேலும்
மோடி போன்ற நபர்களிடமிருந்து நாட்டை காப்பாற்ற வரும் வெள்ளியன்று
உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் அறிவித்தார்.

செய்த
தவறுக்கு எவ்வித பரிகாரமும் காணாமல் மன்னித்து விட வேண்டுமென்றால்
இந்நாட்டின் மக்கள் அஜ்மல் கசாபையும் அப்சல் குருவையும் மன்னித்து விட
தயாரா என்றும் கேள்வி எழுப்பியவர் 3000 முஸ்லீம்களை கொன்ற மோடியை மன்னிக்க
முடியாது என்றும் கூறினார்.

தாருல்
உலூம் தேவ்பந்தின் துணை ஆளுநர் மெளலானா அபுல் காசிம் பனாரஸி மோடியின்
உண்ணாவிரதம் குறித்து கருத்து தெரிவிக்கையில் உண்ணாவிரதத்தின் மூலம்
கலவரத்தில் மோடியின் பங்கை மறைக்க முடியாது என்றும் மோடியின் போராட்டத்தை
முஸ்லீம்கள் ஆதரிக்க கூடாது என்றும் சிலர் மோடியிடம் ஆசி வாங்குவது
முஸ்லீமின் சுய மரியாதைக்கு இழுக்கு என்றும் தெரிவித்தார்.


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10948
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum