தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பாட்லா ஹவுஸ் என்கவுண்டரின் மூன்றாம் ஆண்டு நினைவு பேரணி – பாரபட்சமற்ற விசாரணை செய்ய கோரிக்கை

Go down

பாட்லா ஹவுஸ் என்கவுண்டரின் மூன்றாம் ஆண்டு நினைவு பேரணி – பாரபட்சமற்ற விசாரணை செய்ய கோரிக்கை  Empty பாட்லா ஹவுஸ் என்கவுண்டரின் மூன்றாம் ஆண்டு நினைவு பேரணி – பாரபட்சமற்ற விசாரணை செய்ய கோரிக்கை

Post by முஸ்லிம் Tue Sep 20, 2011 2:21 pm

புதுடெல்லி:பாட்லா ஹவுஸ் என்கவுண்டர்
நடந்து இன்றுடன் மூன்று வருடத்தை எட்டடியுள்ளதை தொடர்ந்து நூற்றுக்கும்
மேலானோர் பிரதமர் மாளிகையை நோக்கி ஊர்வலம் சென்றனர்.

பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் என்பது
போலீசாரால் கடந்த 2008-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி, இதே
தினத்தில் ஜாமியா நகரில் சில முஸ்லிம் இளைஞர்களின் மீது சந்தேகத்தின்
பேரில் நடத்தப்பட்ட ஒரு என்கவுண்டர் ஆகும்.

இதில் சிவில் உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள்
மற்றும் டெல்லி வாழ் மக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு பாட்லா ஹவுசில்
இருந்து பிரதமர் மாளிகையை நோக்கி ஊர்வலம் சென்ற இவர்கள், சந்தேகத்தின்
பேரில் அப்பாவிகளை என்கவுண்டர் செய்வதையும், எங்கு குண்டு வெடித்தாலும்
உடனடியாக விசாரணைக்காக முஸ்லிம் இளைங்கர்களை கைது செய்வதையும் நிறுத்த
வேண்டும் என்கின்ற சில கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதனால் இன்று நாட்டின் எந்த மூலையில்
குண்டு வெடித்தாலும் முஸ்லிம்கள், தங்கள் மனதில் தாங்களே ஒரு பயத்தை
உண்டாக்கும் அளவில் இவர்கள் வாழ்க்கை இருக்குமென்றால் எவ்வாறு அமைதியாக
வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்றும், அரசாங்கம் குண்டு வெடிப்பை
பற்றிய சரியான விசாரணையையும், நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்று மக்கள்
இயக்க தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பைசல் கான் ஊர்வலத்தில் தெரிவித்தார்.

மேலும் அவர் அனைத்து என்கவுண்டரை
பற்றியும் பாட்லா ஹவுஸ் என்கவுண்டரையும் சேர்த்து மற்றும் குண்டு வெடிப்பை
பற்றியும் விசாரிக்க அரசியலமைப்பு கமிஷன் ஒரு விசாரணைக் குழுவை அமைக்க
வேண்டும் என்றும் பைசல் கோரிக்கை விடுத்தார்.

போலி என்கவுண்டர் மற்றும் சட்ட விரோதமான
விசாரணை முஸ்லிம் இளைஞர்களின் வளர்ச்சியை இந்திய சமுதாயத்தில் தடுத்து
நிறுத்துகிறது என்று சத்பாவ்னா மிஷனை சேர்ந்த வி.கே.திருப்பதி
தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஊர்வலம் டெல்லியில் உள்ள
பிரதமர் மாளிகையை அடையும் முன் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா கூட்டமைப்பை கண்டவுடன் போலீசாரால் ஊர்வலத்தை
மேலும் முன்னேறிச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஊடகங்கள்
தெரிவிக்கிறது.

இந்த என்கவுண்டர் எதிர்ப்பு ஊர்வலத்தில்
தேசிய இயக்க மக்கள் கூட்டமைப்பு, ஹார்மனி மற்றும் ஜனநாயகத்துக்கான சட்டம்,
ஆஷா பரிவார், யுவ கோஷிஷ், லோஹியா விச்சார் மன்ச், சத்பவ்னாமிஷன், குடை
கித்மாட்கர், இன்க்லாப் ஜிந்தாபாத், கொளமி ராப்தா கவுன்சில் இன்னும் சில
சமூக ஆர்வலர் கூட்டமைப்பும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பாட்லா ஹவுஸ் என்கவுண்டரின் மூன்றாம் ஆண்டு நினைவு பேரணி – பாரபட்சமற்ற விசாரணை செய்ய கோரிக்கை  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பாட்லா ஹவுஸ்:சி.பி.ஐ விசாரணைக்கோரி பிரதமருக்கு கடிதம்
» பாட்லா ஹவுஸ்:காங்கிரஸ் முஸ்லிம்களை ஏமாற்ற முயற்சிக்கிறது – முலாயம்சிங்
» பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலி: திக்விஜய் சிங்கிற்கு ப.சிதம்பரம் மறுப்பு
» புஷ்ஷை கைது செய்ய ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆம்னஸ்டி கோரிக்கை
» குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை: முன்னாள் அமைச்சர் ஜடேஜாவை விசாரணை செய்ய அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum