தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

‘என் கணவரை பயங்கரவாதி போல் நடத்துகிறார்கள்’: சஞ்சீவ் மனைவி ஸ்வேதா

Go down

‘என் கணவரை பயங்கரவாதி போல் நடத்துகிறார்கள்’: சஞ்சீவ் மனைவி ஸ்வேதா  Empty ‘என் கணவரை பயங்கரவாதி போல் நடத்துகிறார்கள்’: சஞ்சீவ் மனைவி ஸ்வேதா

Post by முஸ்லிம் Fri Oct 07, 2011 4:38 pm

புதுடெல்லி:குஜராத் கலவர வழக்கில்
முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக சாட்சியம் அளித்த ஐ.பி.எஸ். அதிகாரியான
தன்னுடைய கணவரை ‘பயங்கரவாதி’ போல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, மத்திய
உள்துறை அமைச்சகத்துக்கு சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா இரண்டாவது கடிதம்
எழுதியுள்ளார்.

மேலும், தனது கணவருக்கு ஜாமீன் கிடைக்காத வகையில் எல்லாவித
நடவடிக்கைகளையும் குஜராத் மாநில அரசு மேற்கொண்டு வருவதாக அவர்
குறைகூறியுள்ளார்.

தனது கணவர் சஞ்சீவ் பட்டின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உள்துறை அமைச்சகத்துக்கு எழுதிய முதல் கடிதத்தில் ஸ்வேதா குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சீவ் பட்டுக்கு உரிய
பாதுகாப்பு வழங்குமாறு குஜராத் அரசை மத்திய உள்துறை அமைச்சகம்
கேட்டுக்கொண்டிருந்தது.

காவல்துறை ஐ.ஜி. பதவியில் இருந்த சஞ்சீவ்
பட், தனக்கு கீழ் பணிபுரிந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம், மோடிக்கு எதிராக
சாட்சியமளிக்கும்படி பலவந்தப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின்
அடைப்படையில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜாமீன் கோரி அகமதாபாத் செசன்ஸ் நீதிமன்றத்தில் சஞ்சீவ் பட் மனு தாக்கல்
செய்தார். சஞ்சீவ் பட் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரிக்க கூடாது என
குஜராத் மாநில அரசு தாக்கல் செய்த மனுவை நீதிபதி வியாஸ் தள்ளுபடி செய்தார்.

அதைத் தொடர்ந்து, ஜாமீன் மனு மீதான
விசாரணையை தொடங்கினார். சஞ்சீவ் பட் சார்பாக வழக்கறிஞர் ஐ.எச்.சையீது
ஆஜரானார். சிறிது நேரம் அவருடைய வாதம் முடிந்ததும் மனு மீதான விசாரணையை
வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


‘என் கணவரை பயங்கரவாதி போல் நடத்துகிறார்கள்’: சஞ்சீவ் மனைவி ஸ்வேதா  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10944
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சஞ்சீவ் பட் கைதுக்கு எதிராக அவரது மனைவி ஸ்வேதா நடத்திய பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு
» ஹிந்துத்து​வா பயங்கரவாதி​களுக்கு புகழாரம் சூட்டும் நார்வே பயங்கரவாதி​யின் கொள்கை பிரகடனம் – அ​ம்பலமாகும் சர்வதேச பயங்கரவாதம்
» நார்வே பயங்கரவாதி குறித்த பரபரப்பு தகவல்கள்!
» உஸாமா கொலை:வருந்துகிறோம்-சகோதரரின் மனைவி
» ‘கணவனின் விதியை கடவுள் தீர்மானிக்கட்டும்’: அப்சல் குருவின் மனைவி தபசம் குரு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum