எடியூரப்பாவுக்கு அரசியல்வாதி நெஞ்சுவலி!
Page 1 of 1
எடியூரப்பாவுக்கு அரசியல்வாதி நெஞ்சுவலி!
ஊழல் வழக்கில் சிக்கிச்
சிறையிலடைக்கப்பட்ட கர்நாடக முன்னாள் பாஜக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு
நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா,
சுரங்க ஊழல் வழக்கில் லோக்ஆயுக்தாவால் குற்றம்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து
பதவியிழந்தார். இவ்வழக்கில் கைது செய்யப்படாமலிருக்க நீதிமன்றத்தில் முன்
ஜாமீனு கோரியிருந்தார். அவரின் மனு நேற்று நீதிமன்றத்தால் தள்ளுபடி
செய்யப்பட்டது.
எடியூரப்பாவின் முன் ஜாமீன் மனுமீதான
தீர்ப்பு நேற்று நீதிமன்றத்தில் வழங்கப்படும் நேரம், அவர் நீதிமன்றத்தில்
ஆஜராகவில்லை. "எடியூரப்பாவுக்கு முதுகுவலி இருப்பதால், அவர் நீதிமன்றத்தில்
ஆஜராக முடியவில்லை" என எடியூரப்பாவின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில்
அதற்குக் காரணம் தெரிவித்தனர். "அப்படியெனில், தேர்தல் பிரச்சாரத்தில்
மட்டும் அவரால் எப்படி கலந்து கொள்ள முடிந்தது?" என அரசு தரப்பு வழக்கறிஞர்
கேள்வி எழுப்பினார். நீதிமன்ற தீர்ப்பு வழங்கும் வேளையில் எடியூரப்பா
நீதிமன்றத்திலிருந்திருந்தால் அங்கேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பார்
என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரைக்
கைது செய்ய, வாரண்டுடன் அவர் வீட்டிற்குச் சென்றனர். ஆனால், அதற்கு முன்னரே
நீதிமன்றத் தீர்ப்பினை அறிந்த எடியூரப்பா தலைமறைவானார். எடியூரப்பாவைத்
தேடி அவருடைய பண்ணை வீடு, மடம் என காவல்துறையினர் அலையாய் அலைந்தனர்.
நேற்று மாலை வரை காவல்துறைக்குப்
பிடிகொடுக்காமலிருந்த எடியூரப்பா, மாலையில் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதனைத் தொடர்ந்து வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி
லோக்ஆயுக்தா நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, நேற்று மாலை அவர் சிறையில் விஐபி
ரூமில் அடைக்கப்பட்டார்.
இன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் அவருடைய
ஜாமீனுக்காக மனு செய்யமுடியாது. இனிமேல் திங்கள் கிழமையே அவருக்கான ஜாமீன்
மனுவைத் தாக்கல் செய்யமுடியும். இந்நிலையில், இன்று காலை திடீரென
எடியூரப்பாவுக்கு, இதுபோன்று வழக்குகளில் சிக்கி சிறை செல்லும்
அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையில் எடியூரப்பாவின் கைதைத்
தொடர்ந்து, ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை நடத்தும் பாஜக மூத்தத் தலைவர்
அத்வானியின் ரத யாத்திரை பல்வேறு தரப்பினரால்
கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இந்நேரம்
சிறையிலடைக்கப்பட்ட கர்நாடக முன்னாள் பாஜக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு
நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா,
சுரங்க ஊழல் வழக்கில் லோக்ஆயுக்தாவால் குற்றம்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து
பதவியிழந்தார். இவ்வழக்கில் கைது செய்யப்படாமலிருக்க நீதிமன்றத்தில் முன்
ஜாமீனு கோரியிருந்தார். அவரின் மனு நேற்று நீதிமன்றத்தால் தள்ளுபடி
செய்யப்பட்டது.
எடியூரப்பாவின் முன் ஜாமீன் மனுமீதான
தீர்ப்பு நேற்று நீதிமன்றத்தில் வழங்கப்படும் நேரம், அவர் நீதிமன்றத்தில்
ஆஜராகவில்லை. "எடியூரப்பாவுக்கு முதுகுவலி இருப்பதால், அவர் நீதிமன்றத்தில்
ஆஜராக முடியவில்லை" என எடியூரப்பாவின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில்
அதற்குக் காரணம் தெரிவித்தனர். "அப்படியெனில், தேர்தல் பிரச்சாரத்தில்
மட்டும் அவரால் எப்படி கலந்து கொள்ள முடிந்தது?" என அரசு தரப்பு வழக்கறிஞர்
கேள்வி எழுப்பினார். நீதிமன்ற தீர்ப்பு வழங்கும் வேளையில் எடியூரப்பா
நீதிமன்றத்திலிருந்திருந்தால் அங்கேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பார்
என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரைக்
கைது செய்ய, வாரண்டுடன் அவர் வீட்டிற்குச் சென்றனர். ஆனால், அதற்கு முன்னரே
நீதிமன்றத் தீர்ப்பினை அறிந்த எடியூரப்பா தலைமறைவானார். எடியூரப்பாவைத்
தேடி அவருடைய பண்ணை வீடு, மடம் என காவல்துறையினர் அலையாய் அலைந்தனர்.
நேற்று மாலை வரை காவல்துறைக்குப்
பிடிகொடுக்காமலிருந்த எடியூரப்பா, மாலையில் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதனைத் தொடர்ந்து வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி
லோக்ஆயுக்தா நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, நேற்று மாலை அவர் சிறையில் விஐபி
ரூமில் அடைக்கப்பட்டார்.
இன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் அவருடைய
ஜாமீனுக்காக மனு செய்யமுடியாது. இனிமேல் திங்கள் கிழமையே அவருக்கான ஜாமீன்
மனுவைத் தாக்கல் செய்யமுடியும். இந்நிலையில், இன்று காலை திடீரென
எடியூரப்பாவுக்கு, இதுபோன்று வழக்குகளில் சிக்கி சிறை செல்லும்
அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையில் எடியூரப்பாவின் கைதைத்
தொடர்ந்து, ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை நடத்தும் பாஜக மூத்தத் தலைவர்
அத்வானியின் ரத யாத்திரை பல்வேறு தரப்பினரால்
கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இந்நேரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum