தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்திற்குத் தீ!

Go down

மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்திற்குத் தீ!  Empty மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்திற்குத் தீ!

Post by முஸ்லிம் Mon Oct 17, 2011 5:07 pm

மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம்
கும்பகோணத்தில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் கடைத் தெருவில் மனிதநேய மக்கள் கட்சியின்
அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு ஆம்புலன்ஸ், உடல்கள் கெட்டுவிடாமல்
பாதுகாக்கும் குளிர்பதனபெட்டி போன்றவைகள் மக்கள் சேவைக்காக
வைக்கப்பட்டுள்ளது.

நடைபெறும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் சோழபுரம்
பேரூராட்சி தலைவர் பதவிக்கும், 7 கவுன்சிலர்கள் பதவிகளுக்கும் மனிதநேய
மக்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில்
இந்தக் கட்சி அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துவி்டடு
தப்பிவிட்டனர். தீ மளமளவென பரவியதில் அலுவலகத்தின் முன்பக்கம் முற்றிலும்
எரிந்து போனது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து தீயை
அணைத்தனர்.

இது குறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் மனித நேய
மக்கள் கட்சி சோழபுரம் நகர தலைவர் முகமது பாரூக் புகார் செய்தார். அவரது
புகாரின்பேரில் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுக்
காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10942
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
»  எகிப்து மக்கள் புரட்சி - அதிபர் முபாரக் கட்சி பதவியை ராஜினாமா
» துனிஷியா: வெற்றிப்பாதையில் இஸ்லாமிய கட்சி
» போர்ப்ஸ் கஞ்ச்:சி.பி.ஐ விசாரணைக்கு எதிர் கட்சி கோரிக்கை
» பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டு:காஷ்மீர் எம்.எல்.சி. தேர்தலில்!
» துருக்கியில் நேட்டோவின் ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு இஸ்ரேலுக்காக – துருக்கி அரசியல் கட்சி தலைவர் குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum