தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இஷ்ரத் ஜஹான் என்கௌண்டர் போலியானது - சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கை!

Go down

இஷ்ரத் ஜஹான் என்கௌண்டர் போலியானது - சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கை!  Empty இஷ்ரத் ஜஹான் என்கௌண்டர் போலியானது - சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கை!

Post by முஸ்லிம் Mon Nov 21, 2011 6:47 pm

இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர்
என்கௌன்டரில் கொல்லப் பட்டது போலியானது என்றும் என்கௌண்டர் நடந்ததாகக்
கூறப் படும் 2004 ஜூன் 15 ம் தேதிக்கு முன்னரே இஷ்ரத் ஜஹான் கொல்லப் பட்டு
விட்டதாகவும் சிறப்புப் புலனாய்வுக் குழு குஜராத் உயர்நீதிமன்றத்தில்
தெரிவித்துள்ளது.



19 வயது கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான்,
ஜாவித் ஷேக், அம்சத் அலி ரானா, ஜீஷன் ஜோஹார் ஆகியோர் குஜராத் காவல்துறையால்
2004 ஜூன் 15 அன்று சுட்டுக் கொல்லப் பட்டனர். இவர்கள் நால்வரும் லஸ்கர் எ
தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் குஜராத் முதல்வர் நரேந்திர
மோடியைக் கொலை செய்ய வந்தவர்கள் என்றும் குஜராத் காவல்துறை தெரிவித்தது.

கொல்லப் பட்ட இஷ்ரத் ஜஹானின் தாயார் ஷமீமா
கௌஷர், ஜாவித் அஹ்மத் தந்தை கோபிநாத் பிள்ளை ஆகியோர் தொடர்ந்த வழக்கில்
குஜராத் நீதிமன்றம் இவ்வழக்கை மேற்பார்வையிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து குஜராத் நீதிமன்றம் என்கௌண்டர் குறித்து விசாரித்து அறிக்கை தர
சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் பல்வேறு சாட்சிகளை விசாரித்த
சிறப்பு புலனாய்வுக் குழு தமது விசாரணையை முடித்து கடந்த வெள்ளியன்று
சீலிடப் பட்ட கவரில் அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில்
''இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் என்கௌன்டரில் கொல்லப் பட்டது போலியானது"
என்றும் "என்கௌண்டர் நடந்ததாகக் கூறப் படும் 2004 ஜூன் 15 ம் தேதிக்கு
முன்னரே இஷ்ரத் ஜஹான் கொல்லப் பட்டு விட்டார்" என்றும் கூறப் பட்டுள்ளதாக
குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போலி என்கௌன்டரில் ஈடுபட்ட காவல்துறை
அதிகாரிகள் மீது கொலை வழக்கு பிரிவின் கீழ் புதிய முதல் தகவல் அறிக்கை
பதிவு செய்யவும் குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்
பட்டவர்கள் மற்றும் மாநில அரசிடம் ஆலோசித்து இந்த வழக்கை மத்திய அரசின்
கீழ் செயல்படும் சி.பி.ஐ அல்லது தேசிய புலனாய்வு ஏஜென்சி போன்ற அமைப்பிடம்
ஒப்படைப்பது குறித்து குஜராத் உயர்நீதிமன்றம் பின்னர் தெரிவிக்கும் என்றும்
கூறியுள்ளது.

சிறப்புப் புலனாய்வு அமைப்பின் அறிக்கை குஜராத் அரசுக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10937
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் கொலைச் செய்யப்பட்டது போலி என்கவுண்டரில் – எஸ்ஐடி அறிக்கை
» இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டரில் சிக்கி உழலும் குஜராத் அரசு!
»  ஷாருக்கானை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு: தாக்கரே
» இஷ்ரத் வழக்கு:எஸ்.ஐ.டி இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது
»  மோடி குற்றவாளி - சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum