தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பா.ஜ.க ஆட்சியில் நடந்த கார்கில் ஆயுத ஒப்பந்த ஊழல்:நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

Go down

பா.ஜ.க ஆட்சியில் நடந்த கார்கில் ஆயுத ஒப்பந்த ஊழல்:நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்  Empty பா.ஜ.க ஆட்சியில் நடந்த கார்கில் ஆயுத ஒப்பந்த ஊழல்:நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

Post by முஸ்லிம் Tue Nov 22, 2011 6:20 pm

பா.ஜ.க ஆட்சியில் நடந்த கார்கில் ஆயுத ஒப்பந்த ஊழல்:நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்  Scourt-270x170புதுடெல்லி:பா.ஜ.க.
ஆட்சியில் கடந்த 1999-ஆம் ஆண்டு கார்கிலில் நடந்த ராணுவ நடவடிக்கைக்கு
ஆயுதங்கள் வாங்கிய ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கான பணத்தை ஊழல் புரிந்த
அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம்
கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் நிலைப்பாட்டை அங்கீகரிக்க
இயலாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஊழல் வெளியாகி 12 ஆண்டுகள் கழிந்த
பிறகும் இதுவரை ஒருவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசால் இயலவில்லை
என இவ்வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவும் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி
நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி அஃப்தாப் ஆலம்
தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தது.
அரசியல் மனோதிடம் இல்லாமைதான் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளாமல்
இருப்பதற்கு காரணம் என திரிவேதி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். போர்
உபகரணங்கள் வாங்கியதில் கோடிக்கணக்கான பண மதிப்பில் முறைகேடு நடந்ததாக
கம்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
விசாரணையை நீதிமன்றம் இம்மாதம் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

‘ஆபரேசன் விஜய்’ என்ற பெயரில் கார்கிலில்
நடந்த ராணுவ நடவடிக்கை தொடர்பான முறைகேடுகள் குறித்து தாக்கல் செய்த
பொதுநலன் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. கஷ்மீரில் ராணுவ
நடவடிக்கை முடிவடைந்த பிறகுதான் 2,163 கோடி ஒப்பந்தத்தில் 75 சதவீத
ஆயுதங்களும் வாங்கப்பட்டுள்ளன. எனவே இது ராணுவ நடவடிக்கைக்கு உதவுவதற்காக
அல்ல என்பது நிரூபணமாகிறது என சி.ஏ.ஜி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 35
ஒப்பந்தங்களில் சி.ஏ.ஜி முறைகேடுகள் நடந்ததாக கண்டுபிடித்த போதிலும்
அதிகாரிகளிடம் விசாரணை நடத்த ராணுவம் அனுமதி அளிக்கவில்லை.


பா.ஜ.க ஆட்சியில் நடந்த கார்கில் ஆயுத ஒப்பந்த ஊழல்:நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10939
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தான் கைதிகள்:மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
»  டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பு : பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்
» பாத்ரிபல் போலி என்கவுண்டர்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» துருக்கி ஹஜ் பயணிகள் வாகனம் மீது தாக்குதல் – சிரியா அரசுக்கு எர்துகான் கடும் கண்டனம்
» நைஜீரியா:சர்ச்சுகள் மீது நடந்த தாக்குதல்களுக்கு டாக்டர்.யூசுஃப் அல் கர்ழாவி கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum