தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குஜராத் போலீசை நம்ப முடியாது; இஷ்ரத் கொலைவழக்கு சிபிஐ வசம்!

Go down

குஜராத் போலீசை நம்ப முடியாது; இஷ்ரத் கொலைவழக்கு சிபிஐ வசம்!  Empty குஜராத் போலீசை நம்ப முடியாது; இஷ்ரத் கொலைவழக்கு சிபிஐ வசம்!

Post by முஸ்லிம் Thu Dec 01, 2011 7:19 pm


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இஷ்ரத் ஜெஹான் கொலை வழக்கை குஜராத் உயர் நீதிமன்றம் சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளது.




நரேந்திர மோடி அரசாங்கத்திற்கு பலத்த பின்னடைவாக, குஜராத் மாநில
போலீஸ் விசாரணை நம்ப முடியாத ஒன்று என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இஷ்ரத் ஜெஹான் வழக்கு தேசிய அளவில் கவன ஈர்ப்பையும், விளைவுகளையும் கொண்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இது விஷயத்தில் ஒரு புதிய எஃப்.ஐ.ஆருடன் சிபிஐ தனது விசாரணையை தொடங்கட்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இஷ்ரத் ஜெஹான் குடும்பம் வழக்கை சிபிஐ விசாரிக்கக் கேட்டு கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.

இஷ்ரத்,
மும்பை புறநகரில் உள்ள மும்ப்ரா பகுதியில் இருந்து வந்த 19 வயது கல்லூரிப்
பெண். இவருடன் ஜாவேத் ஷேக் என்னும் பிரனெஷ் பிள்ளை, அம்ஜத் அலி ரானா
மற்றும் ஜீஷான் ஜோஹர் ஆகியோரை அஹமதாபாத் க்ரைம் பிராஞ்ச் ஜூன் 15, 2004
அன்று ஒரு போலி என்கவுண்ட்டரில் கொலை செய்தது. அதற்கு அவர்கள் கூறிய
காரணம் முதலமைச்சர் நரேந்திர மோடி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த வந்தவர்கள்
என்ற பொய்யான காரணமாகும்.

ஆனால், இவர்கள் அனைவரும் ஒரு போலி
என்கவுண்டரில் கொல்லப்பட்டனர் என்று சிறப்பு புலனாய்வு குழு அதன்
அறிக்கையில் கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து குஜராத் உயர் நீதிமன்றம்
இவ்வழக்கில் போலீசாருக்கு எதிராக ஒரு புதிய எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக்
கேட்டிருந்தது.

சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் இந்த நீதிமன்ற உத்தரவு எதிர்வினை. அது குஜராத் போலீஸ் மீதான பலத்த அடியாக உள்ளது என்று கூறியுள்ளார்.




குஜராத் போலீசை நம்ப முடியாது; இஷ்ரத் கொலைவழக்கு சிபிஐ வசம்!  Inneram-default
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10939
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum