தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

போலீசார் முன்னிலையில் பெண் பத்திரிகையாளர் மீது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்

Go down

போலீசார் முன்னிலையில் பெண் பத்திரிகையாளர் மீது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்  Empty போலீசார் முன்னிலையில் பெண் பத்திரிகையாளர் மீது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்

Post by முஸ்லிம் Mon Dec 12, 2011 10:10 pm

பெங்களூர்:கேரளா மாநிலத்தை சார்ந்தவர்
கெ.கெ.ஷாஹினா. இவர் டெஹல்கா பத்திரிகையில் செய்தியாளராக பணியாற்றி
வருகிறார். கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு கர்நாடகா
மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சியான
கே.கே.யோகானந்தா என்பவரை நேரில் சந்தித்து பேட்டியெடுத்து போலீசாரின் போலி
வேடத்தை கலைத்தார் ஷாஹினா. இதனால் கோபமுற்ற கர்நாடகா மாநில பா.ஜ.கவின்
பாசிச போலீஸ் ஷாஹினா மீது சாட்சியை மிரட்டியதாக வழக்கு பதிவுச்செய்தது.
இதனைத் தொடர்ந்து ஷாஹினா பெங்களூர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன்
பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவர் கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சோம்வார்பேட் தாசில்தார் அலுவலகத்திற்கு இவ்வழக்கு சம்பந்தமாக சென்றார்.

அப்பொழுது அவரது வேனை சூழ்ந்த
ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஷாஹினாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அவ்வேளையில் சுற்றிலும் நின்றிருந்த 10க்கும் மேற்பட்ட போலீசார்
ஹிந்துத்துவா தீவிரவாதிகளை கலைந்து செல்ல கோராமல் வேடிக்கை பார்த்தனர்.
இதனால் துணிச்சல் பெற்ற அவர்கள் ஷாஹினாவின் மீது கல்லை வீசி தாக்கினர்.

இத்தாக்குதல் குறித்து ஷாஹினா கூறுகையில்;
“நான் முன்னரே மூத்த போலீஸ் அதிகாரியை அழைத்து பாதுகாப்பு அளிக்குமாறு
கோரியிருந்தேன். ஆனால் சோம்வார்பேட் போலீஸ் எனக்கு பாதுகாப்பு அளிக்க
மறுத்துவிட்டது.” என தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக ஷாஹினாவின் வழக்கறிஞர்
பி.டி.வெங்கடேஷ் கூறுகையில்; “இச்சம்பவம் தொடர்பாக வழக்கு தொடர உள்ளோம்.
அதில் வட்டார போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் புகார் அளிக்கப்படும் என
தெரிவித்துள்ளார்.


போலீசார் முன்னிலையில் பெண் பத்திரிகையாளர் மீது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்ரீநகர்-இம்பால் பேரணியை ஆதரித்த மாணவர்கள் மீது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தாக்குதல்
» கட்டாய மதமாற்றம்:பஜ்ரங் தள் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தின் மீது முஸ்லிம் பெண் புகார்
» ஈரான்:பிரிட்டன் தூதரகம் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள்
» அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய ஹிந்துத்துவ வாதிகள் நான்கு பேர் கைது
» புகுஷிமா:இஸ்ரேல் மீது ஜப்பான் பத்திரிகையாளர் குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum