ஒ.பி.சியில் சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு: மத்திய அரசின் அறிவிக்கை வெளியீடு
Page 1 of 1
ஒ.பி.சியில் சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு: மத்திய அரசின் அறிவிக்கை வெளியீடு
புதுடெல்லி:ஒ.பி.சி (இதர பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர்) இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு
4.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை அமுல்படுத்தும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அரசு
இதழில்(கெஸட்) அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான
(ஓ.பி.சி.) 27 சதவீத ஒதுக்கீட்டிலேயே, சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள்
ஒதுக்கீடு வழங்க, டிசம்பர் 22-ம் தேதி கூடிய மத்திய அமைச்சரவையில் முடிவு
எடுக்கப்பட்டது. இது 2012-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு
வருகிறது.
இதன்படி மத்திய கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இந்த உள் ஒதுக்கீட்டு முறையை கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாகிறது.
இதன்மூலம் இந்திய தொழில்நுட்ப கல்வி
நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.), இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.எம்.),
தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (என்.ஐ.டி.) மற்றும் 40 மத்திய
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில்
சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு சாத்தியமாகியுள்ளது. ஐ.ஐ.டி.களில் 120
இடங்கள் சிறுபான்மையின மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். ஐ.ஐ.எம்.
நிறுவனங்களில், மொத்தமுள்ள 3500 இடங்களில் 42 இடங்கள்
சிறுபான்மையினருக்குக் கிடைக்கும்.
வகுப்பினர்) இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு
4.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை அமுல்படுத்தும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அரசு
இதழில்(கெஸட்) அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான
(ஓ.பி.சி.) 27 சதவீத ஒதுக்கீட்டிலேயே, சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள்
ஒதுக்கீடு வழங்க, டிசம்பர் 22-ம் தேதி கூடிய மத்திய அமைச்சரவையில் முடிவு
எடுக்கப்பட்டது. இது 2012-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு
வருகிறது.
இதன்படி மத்திய கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இந்த உள் ஒதுக்கீட்டு முறையை கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாகிறது.
இதன்மூலம் இந்திய தொழில்நுட்ப கல்வி
நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.), இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.எம்.),
தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (என்.ஐ.டி.) மற்றும் 40 மத்திய
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில்
சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு சாத்தியமாகியுள்ளது. ஐ.ஐ.டி.களில் 120
இடங்கள் சிறுபான்மையின மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். ஐ.ஐ.எம்.
நிறுவனங்களில், மொத்தமுள்ள 3500 இடங்களில் 42 இடங்கள்
சிறுபான்மையினருக்குக் கிடைக்கும்.
Similar topics
» மத்திய அரசின் மத கலவர தடுப்பு மசோதாவுக்கு தமிழகம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் எதிர்ப்பு
» புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு!
» பிரிட்டன் கலவரம் குறித்த பல உண்மை தகவல்கள் வெளியீடு
» குஜராத் அரசின் சஸ்பென்சன் நடவடிக்கை எதிராக சஞ்சீவ் பட்
» ஐ.பி.எஸ் அதிகாரி ராகுல் சர்மாவுக்கு குஜராத் மோடி அரசின் குற்றப்பத்திரிகை
» புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு!
» பிரிட்டன் கலவரம் குறித்த பல உண்மை தகவல்கள் வெளியீடு
» குஜராத் அரசின் சஸ்பென்சன் நடவடிக்கை எதிராக சஞ்சீவ் பட்
» ஐ.பி.எஸ் அதிகாரி ராகுல் சர்மாவுக்கு குஜராத் மோடி அரசின் குற்றப்பத்திரிகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum