தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

‘வெறும் உள்ளாடையுடன் நான்கு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டோம்’ – ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அப்பாவி சுஹைல்

Go down

‘வெறும் உள்ளாடையுடன் நான்கு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டோம்’ – ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அப்பாவி சுஹைல்  Empty ‘வெறும் உள்ளாடையுடன் நான்கு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டோம்’ – ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அப்பாவி சுஹைல்

Post by முஸ்லிம் Thu Dec 29, 2011 8:14 pm

ஜெய்ப்பூர்:’குற்றவாளிகளையும்,
தீவிரவாதிகளையும் நடத்துவதுபோல் எங்களுடன் சிறை அதிகாரிகள் நடந்துக்
கொண்டனர். பைத்தியம் பிடிக்கும் விதமாக எங்களை அவர்கள் சித்திரவதை
செய்தார்கள். குடிப்பதற்கும், உண்பதற்கும், கழுகுவதற்கும் ஒரேயொரு
பாத்திரம் மட்டுமே கொடுக்கப்பட்டது. நான்கு மாதங்கள் வெறும் உள்ளாடையுடன்
எங்களை சிறையில் தள்ளியிருந்தார்கள். கொலையாளி திமிலங்கள் என எல்லோரும்
எங்களை அழைத்தார்கள். குண்டுவெடிப்பு வழக்கில் எந்த குற்றத்தையும்
சுமத்தாமல் எங்களை சிறையில் அடைத்து சித்திரவதைச் செய்தார்கள்’ -என 2008 மே
13-ஆம் தேதி ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸால் கைது
செய்யப்பட்ட 14 நபர்களில் ஒருவரான சுஹைல் மோடி தங்களுக்கு நேர்ந்த
கொடுமைகளை விவரிக்கிறார்.

‘வெறும் உள்ளாடையுடன் நான்கு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டோம்’ – ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அப்பாவி சுஹைல்  2

ராஜஸ்தான் முஸ்லிம் ஃபாரம் உள்ளிட்ட
அமைப்புகள் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தாங்கள்
அனுபவித்த கொடுமைகளை அவர்கள் விவரித்தனர். அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட
14 நபர்களை விடுதலைச் செய்ய மனித உரிமை அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும்
தொடர்ந்து செய்த முயற்சியால் 10 பேர் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி விடுதலைச்
செய்யப்பட்டனர்.

‘தற்பொழுது நாங்கள் நிரபராதிகள் என
நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இது நீதியின்
வெற்றியாகும். சமூக சேவையின் வழியில் பிரவேசித்த நாங்கள் புதியதொரு
வாழ்க்கையை துவக்குகிறோம்.’ என பின்னர் நடந்த பத்திரிகையாளர்கள்
சந்திப்பில் சுஹைலும், முஹம்மது ஆஸமும் கூறினர்.

நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என விடுதலைச்
செய்த இவர்களில் ஒவ்வொருவருக்கும் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என
ராஜஸ்தான் முஸ்லிம் ஃபாரம் கன்வீனர் வழக்கறிஞர் பக்கர் ஃபாரூக் கோரிக்கை
விடுத்துள்ளார்.


‘வெறும் உள்ளாடையுடன் நான்கு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டோம்’ – ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அப்பாவி சுஹைல்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பைப் வெடிகுண்டு வழக்கில் கைதான இஸ்மத், அப்துல் ரகுமான் நீதிமன்றத்தில் ஆஜர்! கதறி அழுத குடும்பத்தினர்
» ஜாமீன் கிடைக்காமல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் சிறுவர்கள்
» அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய ஹிந்துத்துவ வாதிகள் நான்கு பேர் கைது
» ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு:வசுந்தரா ராஜே மீது நடவடிக்கை எடுக்க விடுதலையான முஸ்லிம்கள் கோரிக்கை
» பாகிஸ்தானில் நான்கு அமெரிக்க உளவாளிகள் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum