தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

டிஜிபியாக லத்திகா சரண் மீண்டும் நியமனம்!

Go down

 டிஜிபியாக லத்திகா சரண் மீண்டும் நியமனம்!  Empty டிஜிபியாக லத்திகா சரண் மீண்டும் நியமனம்!

Post by முஸ்லிம் Sun Nov 28, 2010 3:47 pm

1976ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த லத்திகா சரணை மீண்டும் டிஜிபியாக நியமித்து தமிழக அரசு சனிக்கிழமையன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக தமிழக காவல்துறைத் தலைவராக லத்திகா சரணை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் லத்திகா சரணை நியமித்தது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலை மீறிய செயல் என்று கடந்த அக்டோபர் 8ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

ஐபிஎஸ் உயர் அதிகாரிகளின் பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி, அவர்கள் பரிந்துரைக்கும் நபர்களில் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இத்தீர்ப்பை அடுத்து தமிழக அரசு காவல் துறை உயர் அதிகாரிகள் பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பியது. இந்த ஆணையம் தேர்ந்தெடுத்து அனுப்பிய மூவரில் ஒருவரான லத்திகா சரணையே தமிழக அரசு மீண்டும் காவல்துறைத் தலைவராக நியமித்துள்ளது. இவர் உடனடியாகப் பதவியேற்றுக் கொள்வார் என்றும் அரசுச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum