தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸால் தப்பிய ஏ.டி.எம். எந்திரம்!

Go down

சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸால் தப்பிய ஏ.டி.எம். எந்திரம்! Empty சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸால் தப்பிய ஏ.டி.எம். எந்திரம்!

Post by முஸ்லிம் Sat Dec 18, 2010 3:57 pm

இருங்காட்டுகோட்டை: சென்னை அருகே இருங்காட்டுகோட்டையில் காவலாளியை கட்டிப் போட்ட முகமூடி திருடர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச் செல்ல முயன்றனர். ஆனால், அந்த நேரத்தில் சைரன் ஒலியுடன் ஆம்புலன்ஸ் வந்ததால் எந்திரத்தை போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இருங்காட்டுகோட்டையில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏ.டி.எம். உள்ளது.

இங்கு நேற்றிரவு கிருஷ்ணன் (40) என்ற காவலாளி பணியில் இருந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் முகமூடி அணிந்த 4 கொள்ளையர்கள் அங்கு வந்து கிருஷ்ணனை கத்தியால் குத்தினர். அவரை கை, கால்களை கட்டிப் போட்டுவிட்டு ஏ.டி.எம். எந்திரத்தையே பெயர்த்து எடுத்தனர்.

தாங்கள் வந்த வேனில் ஏ.டி.எம். எந்திரத்தை ஏற்ற முயன்றனர்.
அப்போது அந்த வழியாக ஒரு ஆம்புலன்ஸ் சைரன் ஒலி எழுப்பியபடி வந்தது.

அதைக் கேட்டதும் போலீஸார் வருவதாக நினைத்து ஏ.டி.எம். எந்திரத்தை ரோட்டிலேயே போட்டு விட்டு தப்பி சென்றுவிடடனர்.

இதையடுத்து கிருஷ்ணன் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.27 லட்சம் பணம் இருந்தது குறிப்பிடத்தக்கது. கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தட்ஸ்தமிழ்

முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10944
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum