தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சம்ஜெளதா குண்டு வெடிப்பு இந்துத்துவாவினரே காரணம்: அசீமானந்த் மீண்டும் வாக்குமூலம்!

Go down

 சம்ஜெளதா குண்டு வெடிப்பு இந்துத்துவாவினரே காரணம்: அசீமானந்த் மீண்டும் வாக்குமூலம்!  Empty சம்ஜெளதா குண்டு வெடிப்பு இந்துத்துவாவினரே காரணம்: அசீமானந்த் மீண்டும் வாக்குமூலம்!

Post by முஸ்லிம் Sun Jan 16, 2011 6:02 pm

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் விரைவு இரயில் மீது 2007ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு இந்துத்துவா பயங்கரவாதிகளே காரணம் என்று சுவாமி அசீமானந்த் மீண்டும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பஞ்ச்கூலா மாஜிஸ்ட்ரேட் முன் சனிக்கிழமையன்று வாக்குமூலம் அளித்த சுவாமி அசீமானந்த் என்ற நபா குமபார் சர்கார், சம்ஜெளதா குண்டு வெடிப்பின் முக்கியக் குற்றவாளியாக இந்துத்துவா பயங்கரவாதிகளான தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 164ஆன் கீழ், தேசிய புலணாய்வு அமைப்பால் (NIA) இந்த வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த வாக்குமூலம் சட்டப்படி சான்றாக எடுத்துக்கொள்ளத் தக்கதாகும்.

முன்னதாக சுவாமி அசீமானந்த் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் அவரைத் துன்புறுத்தி பெறப்பட்டது என்று அசீமானந்தின் வழக்கறிஞர் மன்வீர் ரதி கூறிய குற்றச்சாட்டையும் சனிக்கிழமையன்று பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் மறுத்துள்ளது.

சம்ஜெளதா விரைவு ரயிலில் குண்டு வெடித்த உடனே, இது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்றும் ஆரிஃப் கஸ்மானி என்பவர் இந்த குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளி என்றும் முன்னர் கூறப்பட்டது.

சம்ஜெளதா விரைவு ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் அவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum