தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சொந்த மக்களைக் கொல்லாதீர்கள் - லிபிய மதகுருமார்கள் வேண்டுகோள்

Go down

சொந்த மக்களைக் கொல்லாதீர்கள் - லிபிய மதகுருமார்கள் வேண்டுகோள்  Empty சொந்த மக்களைக் கொல்லாதீர்கள் - லிபிய மதகுருமார்கள் வேண்டுகோள்

Post by முஸ்லிம் Mon Feb 21, 2011 5:45 pm

லிபியாவில் அதிபர் கடாபி பதவி விலகக் கோரி நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஏறத்தாழ 200 பேர் பலியாகியுள்ளனர். அதிபர் கடாபிக்கு எதிரான போராட்டம் பென்காஷி நகரில் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் பிற நகரங்களான பைதா, டெர்னா, மிஸ்ரதா போன்றவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

லிபியாவில் 65 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.

தலைநகர் திரிபோலியில் கடாபிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. பென்காஷி நகரம் போர் நகரம் போல் காட்சியளிக்கிறது. இந்த நகரத்தில்தான் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டதில் 8 வயது சிறுவனும் இருந்ததாக பென்காஷி மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவர் மரியம் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கண்மூடித்தனமாக சுடுவதாக காவல்துறையை மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. லிபியாவின் 50 முஸ்லிம் மதகுருமார்கள் இவ்வாறு சொந்த சகோதர சகோதரிகளைக் கொல்வதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கிடையில் இணையசேவை மற்றும் அலைபேசி சேவைகளை அரசு நிறுத்தி வைத்துள்ளதால் அங்கிருந்து செய்திகள் வருவதிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் லிபியாவுக்குள் நுழைவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10940
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum