லிபியாவை அமெரிக்கா தாக்குமா?
Page 1 of 1
லிபியாவை அமெரிக்கா தாக்குமா?
லிபியாவில் உள்நாட்டு புரட்சி வலுவடைந்ததையொட்டி, அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன. அதன் இரு போர்கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் நெருங்கியுள்ளன. கடாபிக்கு எதிராக லிபியாவை தாக்க அவை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
லிபியா நாட்டில் அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் கிளர்ச்சி வலுத்துள்ளது. பெங்காசி, மிஷ்ரதா, ஷாவியா உள்பட பல நகரங்களைக் கிளர்ச்சியாளர்கள் கை பற்றி உள்ளனர். ஆனால், போராட்டம் நடத்திவரும் மக்களை அடக்கவும், அவர்கள் வசம் உள்ள நகரங்களை மீட்டு தங்கள் வசம் கொண்டு வரவும் மக்களுக்கு எதிராக கடாபி ராணுவத்தை முடுக்கி விட்டுள்ளார்.
முழு ராணுவ ஆதரவு கடாபிக்கு இல்லாவிட்டாலும், அவரது ஆதரவு ராணுவத்தினர், கிழக்கு பகுதியில் உள்ள 2 முக்கிய நகரங்களை மீட்கும் நடவடிக்கையாக கடும் தாக்குதலைத் தொடுத்து உள்ளதாக மேற்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மக்களுக்கு எதிரான அவரது அடக்குமுறைக்கு ஐ.நா. சபை உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. பல நாடுகள் லிபியா மீது பொருளாதார தடை விதித்து உள்ளன.
இதற்கிடையே, அந்த நாடு மனித உரிமைகளை மீறிவிட்டதாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பிலிருந்து லிபியாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்படி அமெரிக்கா அதிபர் ஒபாமாவும், இங்கிலாந்து பிரதமர் கேமரூனும் ஏற்கனவே கேட்டுக்கொண்டும் கடாபி கேட்க வில்லை. ஆகவே மக்கள் மீது குண்டு வீசும் லிபியாவின் விமானங்களைச் சுட்டு வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை விடுத்தார்.
கடாபிக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்கா 2 போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் லிபியாவுக்கு அனுப்பி வைத்தது. கேர்சர்ஜ், போன்ஸ் என்ற அந்த 2 போர்க் கப்பல்களும் நேற்று சூயஸ் கால்வாயைச் சென்று அடைந்துள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, அமெரிக்கா போர்க் கப்பல்கள் அனுப்பிய தகவல்களை அமெரிக்க ராணுவ அமைச்சக உயர் அதிகாரிகள் அட்மிரல் மைக் முல்லன், கேட்ஸ் ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
கேட்ஸ் மேலும் கூறுகையில், மனிதாபிமான அடிப்படையில் மக்களுக்கு உதவி செய்யவும், ஆபத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்டு கொண்டு வரவும் அந்தக் கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப் படும் என்று கூறினார்.
இதிலிருந்து, இந்த இரு அமெரிக்க கப்பல்களும் லிபியாவினுள் நுழைந்ததும் கடாபிக்கு எதிராக, அவரது படைக்கு எதிராக தாக்குதல் நடத்தும் என்று தெரிகிறது.
இந்நேரம்
லிபியா நாட்டில் அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் கிளர்ச்சி வலுத்துள்ளது. பெங்காசி, மிஷ்ரதா, ஷாவியா உள்பட பல நகரங்களைக் கிளர்ச்சியாளர்கள் கை பற்றி உள்ளனர். ஆனால், போராட்டம் நடத்திவரும் மக்களை அடக்கவும், அவர்கள் வசம் உள்ள நகரங்களை மீட்டு தங்கள் வசம் கொண்டு வரவும் மக்களுக்கு எதிராக கடாபி ராணுவத்தை முடுக்கி விட்டுள்ளார்.
முழு ராணுவ ஆதரவு கடாபிக்கு இல்லாவிட்டாலும், அவரது ஆதரவு ராணுவத்தினர், கிழக்கு பகுதியில் உள்ள 2 முக்கிய நகரங்களை மீட்கும் நடவடிக்கையாக கடும் தாக்குதலைத் தொடுத்து உள்ளதாக மேற்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மக்களுக்கு எதிரான அவரது அடக்குமுறைக்கு ஐ.நா. சபை உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. பல நாடுகள் லிபியா மீது பொருளாதார தடை விதித்து உள்ளன.
இதற்கிடையே, அந்த நாடு மனித உரிமைகளை மீறிவிட்டதாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பிலிருந்து லிபியாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்படி அமெரிக்கா அதிபர் ஒபாமாவும், இங்கிலாந்து பிரதமர் கேமரூனும் ஏற்கனவே கேட்டுக்கொண்டும் கடாபி கேட்க வில்லை. ஆகவே மக்கள் மீது குண்டு வீசும் லிபியாவின் விமானங்களைச் சுட்டு வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை விடுத்தார்.
கடாபிக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்கா 2 போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் லிபியாவுக்கு அனுப்பி வைத்தது. கேர்சர்ஜ், போன்ஸ் என்ற அந்த 2 போர்க் கப்பல்களும் நேற்று சூயஸ் கால்வாயைச் சென்று அடைந்துள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, அமெரிக்கா போர்க் கப்பல்கள் அனுப்பிய தகவல்களை அமெரிக்க ராணுவ அமைச்சக உயர் அதிகாரிகள் அட்மிரல் மைக் முல்லன், கேட்ஸ் ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
கேட்ஸ் மேலும் கூறுகையில், மனிதாபிமான அடிப்படையில் மக்களுக்கு உதவி செய்யவும், ஆபத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்டு கொண்டு வரவும் அந்தக் கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப் படும் என்று கூறினார்.
இதிலிருந்து, இந்த இரு அமெரிக்க கப்பல்களும் லிபியாவினுள் நுழைந்ததும் கடாபிக்கு எதிராக, அவரது படைக்கு எதிராக தாக்குதல் நடத்தும் என்று தெரிகிறது.
இந்நேரம்
Similar topics
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» அமெரிக்கா : லிபிய ஆக்கிரமிப்பு
» முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள்! அமெரிக்கா
» அமெரிக்கா உறவு: பாகிஸ்தான் மறு பரிசீலனை!
» தனிநபர்கொலையில் தன்னிகரற்று விளங்கும் அமெரிக்கா
» அமெரிக்கா : லிபிய ஆக்கிரமிப்பு
» முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள்! அமெரிக்கா
» அமெரிக்கா உறவு: பாகிஸ்தான் மறு பரிசீலனை!
» தனிநபர்கொலையில் தன்னிகரற்று விளங்கும் அமெரிக்கா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum