தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

போலி என்கவுண்டர்:பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் – மனித உரிமை கமிஷன்

Go down

போலி என்கவுண்டர்:பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் – மனித உரிமை கமிஷன்   Empty போலி என்கவுண்டர்:பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் – மனித உரிமை கமிஷன்

Post by முஸ்லிம் Wed Apr 06, 2011 6:06 pm

ஸ்ரீநகர்:கடந்த ஆண்டு கஷ்மீரின் மச்சில் பிரதேசத்தில் 3 இளைஞர்களை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய ராணுவத்தினரின் கைவசம் சட்டத்திற்கு புறம்பான ஆயுதங்கள் இருந்தனவா? என்பதுக் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென மாநில மனித உரிமை கமிஷன் வலியுறுத்தியுள்ளது.

அப்துல் ரஷீத் எம்.எல்.ஏ அளித்த மனுவைத் தொடர்ந்து மாநில மனித உரிமை கமிஷனின் உறுப்பினர் ஜுவைத் கவுஸ் விசாரணைக்கோரி மாநில அரசிற்கு சிபாரிசுச் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி ஷஹ்ஸாத் கான், ரியாஸ் அஹ்மத் லோன், முஹம்மது ஷாஃபி லோன் ஆகியோரை ராணுவம் போலி என்கவுண்டரில் கொலைச் செய்தது.

நிறைய சம்பளம் தருவோம் எனக்கூறி அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். என்கவுண்டர் சம்பவம் விவாதத்தை கிளப்பியதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில் ராணுவத்தின் வாதம் பொய்யானது. இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிட்ட ராணுவம் தொடர்புடைய மேஜரை இடைநீக்கம் செய்தது. கமாண்டிங் ஆபீஸர்களை வெளியேற்றியது.

பதவி உயர்வு, விருது ஆகியவற்றிற்காக ராணுவம் போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தியதாக மனித உரிமை கமிஷனின் உறுப்பினர் கவுஸ் குற்றஞ்சாட்டுகிறார். கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதமும், குடும்பத்தினருக்கு அரசு வேலையும் அளிக்கவேண்டுமென கவுஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.



போலி என்கவுண்டர்:பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் – மனித உரிமை கமிஷன்   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» போலிஎன்கவுண்டர்:முன்னாள் ஐ.பி தலைவரையும் விசாரிக்க வேண்டும் – மனித உரிமை ஆர்வலர்கள்
» முஸ்லிம் இளைஞர்களின் சட்ட விரோத கைது குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு
» பழங்குடியின மக்களுக்கு துரோகம் இழைக்கும் மோடி அரசு மீது மனித உரிமை கமிஷன் கோபம்
» முஸ்லிம் நபரின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஒரு மாத காலம் – தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்
» போலி என்கவுண்டர் கொலைகள்: உ.பி முதலிடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum