தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உஸாமா படுகொலையின் மூலம் அமெரிக்காவின் பலஹீனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது-ஃபிடல் காஸ்ட்ரோ

Go down

உஸாமா படுகொலையின் மூலம் அமெரிக்காவின் பலஹீனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது-ஃபிடல் காஸ்ட்ரோ   Empty உஸாமா படுகொலையின் மூலம் அமெரிக்காவின் பலஹீனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது-ஃபிடல் காஸ்ட்ரோ

Post by முஸ்லிம் Sun May 08, 2011 5:27 pm

ஹவானா:நிராயுதபாணியான உஸாமா பின் லேடனை அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு முன்பு சுட்டுக் கொன்ற அமெரிக்காவின் நடவடிக்கை அந்நாட்டின் பலஹீனத்தையும், பாதுகாப்பற்ற தன்மையையும் வெளிப்படுத்துவதாக க்யூபா நாட்டின் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

க்யூபா நாளிதழில் எழுதிய கட்டுரையில் அமெரிக்காவிற்கு எதிரான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார் ஃபிடல். அப்பட்டாபாத் ஆபரேசனில் பாகிஸ்தானின் சட்டங்களையும், அங்குள்ள மத சடங்குகளையும் அமெரிக்கா அவமதித்துள்ளது. உஸாமாவின் இறந்த உடலை அடக்கம் செய்த முறை முஸ்லிம் உலகம் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.

உஸாமாவின் படுகொலையின் மூலமாக அமெரிக்காவின் பிரச்சனைகள் முடிவுக்கு வராது என்பதை இது தெளிவுப்படுத்துகிறது. அல் காயிதா தலைவரை கொலை செய்து கடலில் வீசியதன் மூலம் அமெரிக்கா உஸாமாவின் இறந்த உடலுக்குக் கூட அஞ்சுகிறது என்பதை காட்டுகிறது. உஸாமாவை மேலும் ஆபத்தானவராக மாற்றுவதற்கே இச்செயல் உதவும். இவ்வாறு 84 வயதான முன்னாள் க்யூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

உஸாமா படுகொலையின் மூலம் அமெரிக்காவின் பலஹீனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது-ஃபிடல் காஸ்ட்ரோ   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10938
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum