மகிழ்ச்சி வெள்ளத்தில் காஸ்ஸாவும், மேற்கு கரையும்
Page 1 of 1
மகிழ்ச்சி வெள்ளத்தில் காஸ்ஸாவும், மேற்கு கரையும்
காஸ்ஸா சிட்டி:நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஹமாஸும், பத்ஹும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து மேற்குகரையிலும், காஸ்ஸாவிலும் வீதிகளில் பலஸ்தீனிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நடனமாடினர். ஹமாஸின் பச்சைக்கொடியும், பத்ஹின் மஞ்சள் கொடியையும் ஏந்தியவாறு பேரணியில் அவர்கள் பங்கேற்றனர்.
நல்லிணக்க ஒப்பந்தத்திற்கு பூரணமான ஆதரவை அளிப்பதாக அவர்கள் அறிவித்தனர். பெண்களும், சிறுவர்களும் அடங்கு மக்கள் திரள் பலஸ்தீன் வீதிகளை வசப்படுத்தினர். நாங்கள் காத்திருந்த தினம் வந்துவிட்டது. பலஸ்தீன் கொடியுடன் பத்ஹின் கொடியை நான்கு வருடங்களுக்கு பிறகு கையில் ஏந்துகிறோம்’என பொறியியல் மாணவர் மஹ்மூத் அல் ரியாதி கூறுகிறார்.
மார்ச் 15 என்ற இளைஞர்களின் அமைப்பு இந்த பேரணிக்கு ஏற்பாடுச்செய்தது.’மகிழ்ச்சியின் நேரம் இது’ என நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய ஃபலஸ்தீன் ஆணையத்தின் ஸலாம் பய்யாத் தெரிவித்தார். மேற்காசியாவில் ஜனநாயகத்தின் நாட்கள் வரவிருப்பதாக பி.எல்.ஒ தலைவர் ஹனான் அஷ்ரவி தெரிவித்தார். ராமல்லாவின் மனாரா சதுக்கத்தில் ஏராளமானோர் திரண்டனர்.
2007-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஹமாஸுக்கு பெரும்பான்மை கிடைத்ததையொட்டி பலஸ்தீன் ஆணையத்திற்கு தலைமை வகிக்கும் பத்ஹிற்கும் காஸ்ஸாவின் கட்டுப்பாட்டை தன் வசம் வைத்திருக்கும் ஹமாஸுக்குமிடையே பகைமை வளர்ந்தது. இதனைத் தொடர்ந்து இரு பிரிவினருக்குமிடையே நடந்த ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
நல்லிணக்க ஒப்பந்தத்திற்கு பூரணமான ஆதரவை அளிப்பதாக அவர்கள் அறிவித்தனர். பெண்களும், சிறுவர்களும் அடங்கு மக்கள் திரள் பலஸ்தீன் வீதிகளை வசப்படுத்தினர். நாங்கள் காத்திருந்த தினம் வந்துவிட்டது. பலஸ்தீன் கொடியுடன் பத்ஹின் கொடியை நான்கு வருடங்களுக்கு பிறகு கையில் ஏந்துகிறோம்’என பொறியியல் மாணவர் மஹ்மூத் அல் ரியாதி கூறுகிறார்.
மார்ச் 15 என்ற இளைஞர்களின் அமைப்பு இந்த பேரணிக்கு ஏற்பாடுச்செய்தது.’மகிழ்ச்சியின் நேரம் இது’ என நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய ஃபலஸ்தீன் ஆணையத்தின் ஸலாம் பய்யாத் தெரிவித்தார். மேற்காசியாவில் ஜனநாயகத்தின் நாட்கள் வரவிருப்பதாக பி.எல்.ஒ தலைவர் ஹனான் அஷ்ரவி தெரிவித்தார். ராமல்லாவின் மனாரா சதுக்கத்தில் ஏராளமானோர் திரண்டனர்.
2007-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஹமாஸுக்கு பெரும்பான்மை கிடைத்ததையொட்டி பலஸ்தீன் ஆணையத்திற்கு தலைமை வகிக்கும் பத்ஹிற்கும் காஸ்ஸாவின் கட்டுப்பாட்டை தன் வசம் வைத்திருக்கும் ஹமாஸுக்குமிடையே பகைமை வளர்ந்தது. இதனைத் தொடர்ந்து இரு பிரிவினருக்குமிடையே நடந்த ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
Similar topics
» ரமலான் உம்ரா:நம்பிக்கையாளர்களின் வெள்ளத்தில் மக்கா
» ஃபலஸ்தீன் கைதிகளுக்கு விடுதலை – மகிழ்ச்சியில் காஸ்ஸாவும், மேற்குகரையும்
» மேற்கு வங்கம்: கள்ளச்சாராயத்துக்கு பலி 101
» அமெரிக்க ராணுவம் வாபஸ்: ஈராக்கில் மகிழ்ச்சி கொண்டாட்டம்
» கத்தாஃபி:சிரியா மக்களுக்கு மகிழ்ச்சி – அடுத்து ஆஸாத்?
» ஃபலஸ்தீன் கைதிகளுக்கு விடுதலை – மகிழ்ச்சியில் காஸ்ஸாவும், மேற்குகரையும்
» மேற்கு வங்கம்: கள்ளச்சாராயத்துக்கு பலி 101
» அமெரிக்க ராணுவம் வாபஸ்: ஈராக்கில் மகிழ்ச்சி கொண்டாட்டம்
» கத்தாஃபி:சிரியா மக்களுக்கு மகிழ்ச்சி – அடுத்து ஆஸாத்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum