தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மகிழ்ச்சி வெள்ளத்தில் காஸ்ஸாவும், மேற்கு கரையும்

Go down

மகிழ்ச்சி வெள்ளத்தில் காஸ்ஸாவும், மேற்கு கரையும்   Empty மகிழ்ச்சி வெள்ளத்தில் காஸ்ஸாவும், மேற்கு கரையும்

Post by முஸ்லிம் Sun May 08, 2011 6:39 pm

காஸ்ஸா சிட்டி:நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஹமாஸும், பத்ஹும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து மேற்குகரையிலும், காஸ்ஸாவிலும் வீதிகளில் பலஸ்தீனிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நடனமாடினர். ஹமாஸின் பச்சைக்கொடியும், பத்ஹின் மஞ்சள் கொடியையும் ஏந்தியவாறு பேரணியில் அவர்கள் பங்கேற்றனர்.

நல்லிணக்க ஒப்பந்தத்திற்கு பூரணமான ஆதரவை அளிப்பதாக அவர்கள் அறிவித்தனர். பெண்களும், சிறுவர்களும் அடங்கு மக்கள் திரள் பலஸ்தீன் வீதிகளை வசப்படுத்தினர். நாங்கள் காத்திருந்த தினம் வந்துவிட்டது. பலஸ்தீன் கொடியுடன் பத்ஹின் கொடியை நான்கு வருடங்களுக்கு பிறகு கையில் ஏந்துகிறோம்’என பொறியியல் மாணவர் மஹ்மூத் அல் ரியாதி கூறுகிறார்.

மார்ச் 15 என்ற இளைஞர்களின் அமைப்பு இந்த பேரணிக்கு ஏற்பாடுச்செய்தது.’மகிழ்ச்சியின் நேரம் இது’ என நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய ஃபலஸ்தீன் ஆணையத்தின் ஸலாம் பய்யாத் தெரிவித்தார். மேற்காசியாவில் ஜனநாயகத்தின் நாட்கள் வரவிருப்பதாக பி.எல்.ஒ தலைவர் ஹனான் அஷ்ரவி தெரிவித்தார். ராமல்லாவின் மனாரா சதுக்கத்தில் ஏராளமானோர் திரண்டனர்.

2007-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஹமாஸுக்கு பெரும்பான்மை கிடைத்ததையொட்டி பலஸ்தீன் ஆணையத்திற்கு தலைமை வகிக்கும் பத்ஹிற்கும் காஸ்ஸாவின் கட்டுப்பாட்டை தன் வசம் வைத்திருக்கும் ஹமாஸுக்குமிடையே பகைமை வளர்ந்தது. இதனைத் தொடர்ந்து இரு பிரிவினருக்குமிடையே நடந்த ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

மகிழ்ச்சி வெள்ளத்தில் காஸ்ஸாவும், மேற்கு கரையும்   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum