தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இஸ்ரேலிய போதைப் மருந்து கடத்தல்காரரை கைது செய்யவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது:கோவா காவல்துறை

Go down

இஸ்ரேலிய போதைப் மருந்து கடத்தல்காரரை கைது செய்யவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது:கோவா காவல்துறை   Empty இஸ்ரேலிய போதைப் மருந்து கடத்தல்காரரை கைது செய்யவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது:கோவா காவல்துறை

Post by முஸ்லிம் Sat May 14, 2011 6:23 pm

பனாஜி:கோவாவில் இருந்து பேருக்கு தப்பி சென்ற இஸ்ரேலிய போதை மருந்து கடத்தல்காரரான அடால என அழைக்கப் படும் யனிவ் பெனாயிம் என்பவரை திரும்ப இந்தியாவிற்கு கொண்டு வந்து கைது செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாக மாநில தலைமை காவல் துறை அதிகாரி பீம்சைன் பஸ்சி கூறியுள்ளார்.

கோவா போதை மருந்து கடத்தலில் அரசியல்வாதிகளின் தொடர்பு பற்றி சிபிஐ விசாரணை செய்து வருகிறது. போதை மருந்து கடத்தலில் தொடர்புள்ள மர்ம கும்பல்களைப் பற்றி காவல்துறை விசாரணை செய்து வருகிறது என பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பீம்சைன் பஸ்சி கூறினார்.

அடலாசின் போதை மருந்து கடத்தல் வழக்குத் தொடர்பாக 38 வயதுடைய இஸ்ரேலிய போதைமருந்து விற்பனையாளருடன் கோவாவின் மத்திய அமைச்சர் ரவி நாயக்கின் மகன் தொடர்பு உள்ளதாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இதனை மறுத்துள்ளார்.

மார்ச் 11-ம் தேதி 2010-ம் ஆண்டு இவ்வழக்கு தொடர்பாக அடல’ஸ் உடன் சேர்த்து போதை மருந்து கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய ஏழு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். உள்ளூர் நீதி மன்றம் அடல்சிற்கு ஜாமின் வழந்கியதைத் தொடர்ந்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இருந்து தப்பி ஓடிவிட்டான். சிபிஐ மூலம் சர்வதேச போலீசாரிடம் அடல்ஸ் பற்றி அறிக்கை கொடுத்த பின் ஜனவரி மாதம் மீண்டும் கைது செய்யப்பட்டான்.

அடல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டப் பின்னர் , அவனுடைய பாஸ்போர்ட் நீதிமன்றம் மூலம் முடக்கி வைக்கப் பட்டிருந்தும் எவ்வாறு இந்தியாவில் இருந்து தப்பி ஓடினான் என்பதை காவல் துறை விசாரிக்கும் என்பதையும் பஸ்சி கூறினார். அவனை எங்களிடம் ஒப்படைத்த பின்னர் அவனிடம் விசாரணை மேற்கொள்ளப்படும், இல்லையெனில் இவ்வழக்கு விசாரணை சிரமமானதாக அமையும்.

சிபிஐ-யிடம் இந்த போதை மருந்து வழக்குதொடர்பான விசாரணை ஒப்படைக்கப் பட்டதைப் பற்றி கூறுகையில் சிபிஐ-ன் விசாரணை காவல்துறையினர் விசாரணையை சார்ந்தே இருக்கும் , இதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என பஸ்சி கூறினார். இவ்வழக்கு தொடர்பான காவல் துறையினரின் விசாரணையையும் கோவாவின் ஆளும் மற்றும் எதிர் அரசியல் கட்சிகளையும் அவர்களின் அலட்சியமான போக்கையும் பாம்பே நீதிமன்றம் கண்டித்துள்ளது.

இஸ்ரேலிய போதைப் மருந்து கடத்தல்காரரை கைது செய்யவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது:கோவா காவல்துறை   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
»  பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி
» 15 சிறுவர்கள் உட்பட 73 பலஸ்தீனர்கள் கைது!
» அதிரடி நடவடிக்கை-அமெரிக்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஈரானிய பாராளுமன்றம் முடிவு
» ருத்ராபூர் கலவரம்:அக்கறையின்றி செயல்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பதவி நீக்கம்
» போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் சட்டவிரோத மருந்து பரிசோதனை – அதிர்ச்சி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum